ஞாயிறு, 30 ஜூன், 2013

திருவண்ணாமலை கோயில் - கோ.ஜெயக்குமார்.

தலைநகரம் : திருவண்ணாமலை
பரப்பு : 6191 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,181,853
எழுத்தறிவு : 1,317,651 (68.22%)
ஆண்கள் : 1,093,191
பெண்கள் : 1,088,662
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 352



வரலாறு :

thiruvannamalaiதிருவண்ணாமலை கோயில் உள்ள இறைவன் பெயர் அண்ணாமலை. சிவபெருமான் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயின் வடியில் இங்குள்ளார் என்பது ஐதீகம். பிரம்மன் -விஷ்ணு இருவரும் தாமே பரம்பொருள் என செருக்கு கொண்டபோது சிவபெருமான் நெருப்புத்தூண் வடிவில் தோன்றியதாகவும் அந்த தூனே 'திருவண்ணாமலை' என்றும் கூறப்படுகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNfp9YEbZG_GEpv75sXf8ZGOv0GNHul-XVJ1cqsY9KlkdmUAwhwAhhVxYQLwUWWEWvM7P6JN-7e_1YEmdtTGa7YjuSpQUi8F3rvRL6r1os0CoyiT4umHUi3hEcE2sG7ql_yBQIMa6lgUs/s1600/tiru8.jpg
இப்பகுதி தொண்டை நாட்டின் 24 கோட்டங்களில் ஒன்றான 'பல்குன்ற கோட்டத்தில் உள்ளது. சங்க காலத்தில் இப்பகுதியில் உள்ள செங்கத்தில நன்னன் ஆண்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது. பெரும்பாணாற்றுப் படை இப்பகுதிகளின் ஊர் வளத்தை மெச்சு கிறது. பல்லவர்கள் இப்பகுதியை ஆண்டனர் அவர்கள் நந்திவர்மன் பல்லவன் தென்னாற்றில் பாண்டியனைத் தோற்கடித்ததை 'நந்திக் கலம்பலம்' விதந்து பாராட்டு கிறது. சுந்தரச் சோழன் ஆட்சி முதல் அதி ராஜேந்திரன் ஆட்சிகாலம் வரை இப்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

சோழர்களுக்குப் பின்னர் 'சம்புவராயர்'கள் என்ற குறுநில மன்னர்கள் இப்பகுதிகளை ஆண்டனர். சம்புவராயர்களுக்குப் பின் இப்பகுதி விஜயநகர நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பின்னர் ஆற்காட்டு நவாப்பின் ஆளுகையின் கீழ் இருந்து ஆங்கி லேயர் ஆட்சிக்குக் கைமாறியது. சுந்திரத்திற்குப் பின்னர் வேலூர் மாவட்டத்தில் இருந்து 1989 செப்டம்பரில் 30ந் தேதி இம்மாவட்டம் புதிதாக உருவாக்ப்பட்டது.

பொது விபரங்கள்:
மழையளவு: 1074 மி.மி.; வங்கிகள் : 148; காவல் நிலையங்கள்-35;
சாலைநீளம்-5478கி.மீ; பதிவு பெற்ற வாகனங்கள் 5665; அஞ்சலகங்கள்-464; திரையரங்குகள்-82.

எல்லைகள் :

கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம்; வடக்கில் வேலூர் மாவட்டம்; மேற்கில் தர்மபுரி; தெற்கில் விழுப்புரம் மாவட்டத்தை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

உள்ளாட்சி நிறுவனங்கள் :

நகராட்சிகள்-4; ஊராட்சி ஒன்றியங்கள்-18; பேரூராட்சி-11; ஊராட்சி-865; கிராமங்கள்-1067.

சட்டசபை தொகுதிகள் :

9. செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், ஆரணி, செய்யார், வந்தவாசி, பெரணமல்லூர்.

பாராளுமன்றத் தொகுதி :


1. வந்தவாசி

கல்வி :

தொடக்கப்பள்ளிகள் : 1,773; நடுநிலை : 248; உயர்நிலை : 132; மேல்நிலை : 56; கல்லூரிகள் : 4.

மருத்துவம் :

அரசுமருத்துவமனைகள் : 6; தொடக்கமருத்துவநல மையம் : 84.


ஆற்றுவளம் :


செய்யாறு அணை :

ஆரணிக்குக் கிழக்கே பத்து மைல் தொலைவில் இந்த அணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து புறப்படும் கால்வாயின் மூலம் 144 குளங்களில் நீர் நிரம்பி 24,000 ஏக்கர் நிலங்களின் பயிர் வளர்ச்சிக்குப் பயன்பட்டு வருகிறது. இது செய்யாற்றுத் தலைக் கால்வாய் எனப்படும். இவ்வெள்ளத்தால் பாசன வசதி பெறும் வட்டங்கள் செய்யாறு, வந்தவாசி ஆகியன. ஆண்டுதோறும் இதன் பராமரிப்புக்காக ரூ.60,000 செலவு செய்யப்படுகிறது. திருவந்திபுரம் சேயாற்றில் கட்டப்பட்ட அணை, வந்தவாசி வட்டத்திற்குப் பாசன நீர் அளிக்கிறது. பாலாற்று அணை மூலமாக செய்யாறு வட்டம் பயடைகிறது.

சாத்தனுர் அணை :

செங்கம் வட்டத்தில் சாத்தனுர் கிராமத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதற்குச் சுமார் நான்கு மைல் கீழே கட்டப்ட்டிருக்கும் கசிவு நீரைத் தேக்கும் அணைக்கட்டுப் பகுதியிலிருந்து கால்வாய்கள் வெட்டப்ட்டு, பாசனவசதிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அணை முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொடங்கப்பட்டு 1958-இல் முடிவு பெற்றது. இதற்காக மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூ.258 இலட்சமாகும். இதன் நீர் பெருக்கத்தால் வடற்காடு மாவட்டத்தில் 15,000 ஏக்கர் நிலங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 5800 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்றுள்ளன.

இந்த அணையின் உயரம் 147 அடி. நீளம் 2580அடி. இதில் 1500 அடி கல் கட்டடப் பகுதியும் 1180 அடி மண் அணைப்பகுதியுமாகும். கல்கட்டடம் 80 இலட்சம் கன அடியும் மண் அணைப்பகுதி 43 இலட்சம் கன அடியும் சொற்றளவு கொண்டதாகும். இதில் 46,000 இலட்சம் கனஅடி முதல் 81,000 இலட்சம் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும்.

மலைவளம் :

திருவண்ணாமலை எனும் புனிதமலை இம்மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள ஐவ்வாது மலையின் பகுதிகள் போளூர் வட்டத்தின் மேற்குப் பகுதிவரை பரவி இருக்கிறது. செங்கம் வட்டத்தின் தென் பகுதியில் மன் மலைத் தொடர் உள்ளது.

வேளாண்மை :

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றுப்பாசனம் உள்ள செய்யாறு வட்டம். சிறப்பான முறையில் நெல் உற்பத்தி செய்கிறது. மற்ற பகுதிகளில் ஏரி, கிணற்று பம்புசெட் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.

புன்செய் பயிக்ளை கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, எள் போன்றவை கிணற்றுப் பாசனம் உள்ள இடங்களில் நடைபெறுகிறது. செய்யாறு வட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு பெருமளவில் விளைவிக்கப்படுகிறது.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் :

திருவண்ணாமலை :

thiruvannamalaiவிழுப்புரம்-காட்பாடி புகைவண்டிப் பாதையில், விழுப்புரத்திற்கு வடமேற்கே 67கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அண்ணா மலையார் கோயில், இராசேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே இக்கோயில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

கி.பி.1516 இல் கிருஷ்ணதேவராயர், ஆயிரங்கால்மண்டபத்தையும், திருக்குளத்தையும் பதினொரு நிலைக் கோபுரத்தையும், பல்வேறு திருப்பணிகளையும் செய்தமையைக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். பெரிய கோபுரத்தின் உயரம் 66 மீட்டராகும்.

வல்லாளன் கோபுரம், சக்தி விலாசம், கிளிக் கோபுரம் கலியாண மண்டபம் முதலியன காணத்தக்கன. கோயிள் உள்ளும் வெளியிலுமாக, மலைப்பகுதிகளிலும் 360 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான தீர்த்தங்கள்: சிவகங்கை, பிரமதீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம் முதலியனவாகும். சித்துக்கள் பல புரிந்த குகை நமச்சிவாயார், குரு நமச்சிவாயர் கோயில்கள் இங்கு உள்ளன.

இங்கு சித்திரைத் திருவிழா, பங்குனித் திருக்கல்யாணத் திருவிழா, மாசி வல்லாளன் விழா, தைத்திருவூடல் விழா, ஆனி விழா, ஆடி அம்பிகை விழா முதலியன ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஆண்டுதோறும் கார்த்திகைத் திங்களில் நடைபெறும் அண்ணாமலை யார் தீபம், தமிழத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் பேற்றினைப் பெற்றது. திருவண்ணாமலையின் சுற்றளவு 11 கி.மீ, மலையின் உயரம் 11 கி.மீ இரமண மகரிஷி இம்மலையின் பவளக்குன்று பகுதியிலும், விருபாட்சிக் குகையிலும் 17 ஆண்டுகள் தங்கியிருந்தார். பின்னர் இம்மலையில் உள்ள ரமணாசிரமத்தில் கடைசி வரை இருந்து இறந்தார். இரமண மகரிஷி பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் பெற்றுச் செல்வார்கள்.

சாத்தனுர் நீர்த்தேக்கம் :

திருவண்ணாமலைப் பகுதிக்கு நீர்ப்பாசனம் போதாத காரணத்தால், சாத்தனுர் நீர்தேக்கத் திட்டம் 1949 இல் உருவானது.

நீர்த்தேக்கத்தின் தோற்றம் :

இந்நீர்த் தேக்கத்தின் மொத்த நீளம் 2583 அடி அதில் 1400 அடி கட்டடப் பகுதி. 1183 அடி மண் அணைப்பகுதி. நடுவில் 432 அடி மடை உள்ளது. அதில் 9 கண்கள் உண்டு. ஒவ்வொரு கண்ணின் அகலமும் 40 அடி. கடைக்காலின் ஆழம் 135 அடி கடைக் காலுக்கு மேலாக அணையின் உயரம் 147 அடி. இவ்வணைக்கட்டு வேலை 1955 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு, 1956 மே மாதத்தில் முடிந்தது.

அமைப்பு :

சிறிய அணைக்கட்டின் இடது புறம் அமைந்துள்ள மடையில் 3 கண் உள்ளன. ஒவ்வொன்றும் 9 அடி அகலம் 5 1/2 அடி உயரம் உடையது. இக்கண்கள் வழியாக நொடிக்கு 400 க.அடி நீர் வெளியாகிறது. தலைக் கால்வாயின் தொடக்கத்திலிருந்து எட்டு மைல் வரையில் நீர்க் கசிவு ஏற்படா வண்ணம் சிமெண்ட் கால்வாய் போடப் பட்டுள்ளது. இதனால் சேமிக்கப்படும் நீர் மேலும் 1000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன மளிக்கும்.

இக்கால்வாயின் முதல் 6 மைல்களுக்குள் 6 பாலங்களும், ஒரு பெரிய நீர்குழாயும், இரண்டு நடைபாலங்களும், இரண்டு மேம்பாலங்களும், 11 சுரங்க வழிகளும் கட்டப் பட்டுள்ளன. 6 மைல்களுக்கு அப்பால் 3 பாலங்களும் 8 சுரங்க வழிகளும் கட்டப் பட்டுள்ளன. இவ்வணை இம்மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்டுகிறது.
திரைப்படத்துறையினர் இப்பகுதியில் படம் பிடிப்பு நடத்துகின்றனர். இவ்வணையைச் சுற்றிலும் அமைந்துள்ள மின்சார அலங்காரம் பாதிப்பேரைக் கவரக்கூடியது.

தமிழகத்து சரவணபெளகொளா :

போளூருக்கு அருகில் உள்ள வடபாதி மங்கலம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது திருமலை. 'திருமலை' யில் உள்ள சிறு குன்றின் மீது மூன்று நிலைகளில் சமணக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்குன்று முழுவதும் சமணச் சிறுகோயில் உள்ளன.

குன்றின் கீழ்ப்பகுதியில் உள்ள கோவில் சோழர்காலத்தில் கட்டப்பட்டது. அக்கோவில் உள்ள கல்வெட்டு மூலம் நமக்கு பல செய்திகள் தெரிய வருகின்றன. இக்கோவில் இராஜாராஜனின் தமக்கையராகிய குந்தவை பிராட்டியார், இம்மலையில் ஒரு ஜினாலயம் அமைத்தார். அது குந்தவை ஜினாலயம் என்று பெற்றது. பொன்னுரைச் சேர்ந்த நந்கை, அம்மலையின் அருகில் திரு உருவை நிறுவினாள். அருகதேவனுக்குரிய மலைகளில் மிகச் சிறந்ததாக இத்திருமலை கொள்ளப்படுகிறது.

கோவில் அமைப்பு :

அடிவாரத்திலுள்ள கோவில், சிறு கோவிலாகும். முக மண்டத்தில் அருகக் கடவுளின் பெரிய புடைப்புச் சிற்பம் உள்ளது. உள்ள திருவாசியுடன் கூடிய முக்குடையின் கீழ் அருகக் கடவுளின் உருவம் செப்பு திருமேனியாகக் காணப்படுகிறது. கருவளையின் வெளியே சோழர்காலக் கல்வெட்டு காணப்படுகிறது.

மாடிக்கோவில் :

இரு பாளைகளுக்கு இடையே உள்ள இடை வெளியை இணைத்து அறைகளாகத் தடுத்து இரண்டு பெரிய அறைகள் காணப்டுகின்றன. இவ்வறைகளுக்குச் செல்ல மாடிப்படிக்கட்டுகள் உண்டு. இப்படிக் கட்டுகளுக்கு கீழேயும், மேலேயும் அருகக் கடவுளின் சிற்பங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளன.

ஓவியங்கள் :

அறைகளில் சமண சமயம் தொடர்பான ஓவியங்கள் உள்ளன. இவ்விரண்டு அறைகளிலும் கி.பி. 13ம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரை வரையப்பட்ட ஓலியங்களின் சிதைவைக் காணலாம். ஒரு அறையில் பெண் கடவுளின் முழு உருவம் சிதையாமல் உள்ளது. அவ்வறையின் ஒரு பக்கத்தில் அருகக் கடவுள் சமவ சரணத்தில்
'அருள் உரை'க்கும் பாங்குடன் காணப்படுகிறது. தீர்த்தங்கரரைச் சுற்றி மனிதர்கள், விலங்குகள், பறவைகள் முதலியன உட்கார்ந்து அருள் உரை கேட்கின்றனர்.

நேமி நாதர் :

மாடி கோவிலின் மற்றொரு பக்கத்தில் திகம்பரக் கோலத்தில் நின்ற வண்ணம் உள்ள நேமிநாதரின் புடைப்புச் சிற்பம் 20 அடியில் காணப்படுகிறது. இந்தச் சிலை தான் தமிழகத்தில் உள்ள சமண சமய சிற்பங்களில் பெரியது என்று சொல்கிறார்கள்.

மலையின் உச்சியில் உள்ள சிறு கோவிலில் ஒரே வட்ட வடிவத்தில் உள்ள மாக்கல்லில் 5 தீர்த்தங்கரர்களின் உருவம் காணப்படுகிறது. அருகில் இரு இணையடிகள் செதுக்கப் பட்டுள்ளன. இது போன்றதொரு கோவில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.

திரக்கோல் :

வந்தவாசிக்கு எட்டுமைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள குன்றில் மூன்று குகைகளும், மூன்று ஜினாலயங்களும் காணப்படுகின்றன. அக்கோயிலின் அடியாகத் திருக்கோவில் என்னும் பெயரே "திரக்கோல்" என்றாகி விட்டது. இம்மாவட்டத்தில் பொன்னுர், வெம்பாக்கம், முதலிய இடங்களிலும் சமணக் கோயில்களைக் காணலாம்.

ஜைனர் :

குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட தமிழ் சமணர்கள் இம்மாவட்டத்தில் காணப் படுகின்றனர். வந்தவாசி, பொன்னுர், வெம்பாக்கம் முதலிய ஊர்களிலும், போளூர் வட்டத்திலும் இவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக நைனார் என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்தாலும், மற்ற சாதியினரின் பட்டப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.

ஆரணி :

ஆற்காட்டுக்குத் தென் பகுதியில் ஆரணி உள்ளது. ஆரணியும் நகராட்சி நிருவாகத்தில் உள்ளதாகும். மைசூர் மன்னன், ஐதர் அலி, ஆங்கிலேயரிடம் தோல்வி அடைந்தது இவ்வூரில்தான் பழங்கால கோட்டையின் பகுதிகளை இங்கே காணலாம். இந்நகரம் கைத்தறிப் பட்டுச் சேலைகளுக்குப் புகழ் பெற்றதாகும். ஆரணிப்பட்டு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது.

செங்கம் :

நன்னன் ஆண்ட மலை. இங்குள்ள கோவிலில் நன்னனைப் பற்றிய கல்வெட்டொன்று காணப்படுகிறது.

மருதநாடு :

வந்தவாசி வட்டத்திலுள்ளது இவ்வூர். விக்ரம சோழ நல்லூர் என்னும் பெயரும் உண்டு. இராசராசன் கல்வெட்டும் காணப்படுகிறது. பெருந்திருக்கோயில் என வழங்கப்பட்ட இவ்வூர் கோயில் புரந்தீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

தென்னாறு :

வந்தவாசி வட்டத்தில் தென்னாறு உள்ளது. இங்குதான் தென்னாற்றில் நிகழ்ந்த போரில், பாண்டியனது பெருஞ்சேனையை நந்திவர்மன் வென்று, "தெள்ளாற் றெரிந்த நந்திர்மன்" என்று நந்திக் கலம்பகத்தால் அழைக்கப்படுகிறான்.

வழுவூர் :

இவ்வூரில் உள்ள பழமையான கோவிலின் பெயர் அயனீச்சுரம் ஆகும். மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் இக்கோயிலை பழுது பார்ப்பதற்காகவும், பூசனை புரிவதற்காகவும் சம்புவராயம் 'தேவதான' மாக அளித்த நிவந்தம் கல்வெட்டில் காணப்படுகிறது.

தொழில் வளம் :

வேலூர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிந்துள்ளதால் இங்கு தொழில் வளம் இனித்தான் ஏற்பட வேண்டும் திருவண்ணாமலை மாவட்டமும் இன்னமும் ஒரு வேளாண்மை மாவட்டமாகத் தான் இருக்கிறது.

செய்யாறில் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கிறது. தனியார் நூற்பாலைகள் சில உண்டு. ஆரணியில் அரிசி மண்டி பெருமளவில் உள்ளது. நவீன பட்டு நெசவுக்காக, ஆரணியைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பட்டி நெசவு நடந்து வருகிறது. பொன்னுரை ஒட்டியுள்ள பிரதேசங்களில் கைத்தறி நெசவுத்தொழில் வளர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் வேளாண்மையையொட்டி வளரும் சாத்தியக்கூறுள்ள தொழில்களானவன:
1. உமியிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை.
2. வைக்கோளிலிருந்து அட்டை தயாரிப்பு.
3. கயிறு திரித்தல் மற்றும் கயிற்றின் துணைப்பொருள்களைக் கொண்டு செய்யப்படும் பொருள்கள்.
4. சந்தான எண்ணெய் ஆலை.
5. பட்டுப்பூச்சி வளர்ப்பு
6. உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் வளர்ப்பு.

வந்தவாசி :

ரூ.11 லட்சம் செலவில் ஆர்.சி.சி.பைப் தயாரிக்கும் தொழிற்சாலை இங்குள்ளது. ரூ.12 இலட்சம் செலவில் செங்கள் தயாரிக்கும் தொழிலகம் உள்ளது.

ஆரணி :

ஆரணியில் பட்டு நெசவு மிகுதியாகும். ஆரணியில் தயாராகும் பட்டுச் சேலைகள் உலகப் புகழ்பெற்றவை. பட்டுத் துணியில் அழகாக அச்சுப் போடும் கலை இம் மாவட்டத்தில வியக்கத்தக்களவு வளர்ந்து வருகிறது.

பட்டுச்செடி நடுதல் :

பட்டுச் செடி நடுவதன் மூலம், நிறைய வருவாய் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் பயிரிட்டு ஆண்டு வருமானம் 20,000 முதல் 30,000 வரை பெறலாம். ஒரு ஏக்கருக்கு 5 பேருக்கு வேலை கிடைக்கும். குறைந்த நீர் பாசனத்திலும் அதக வருவாய் தரக் கூடியது.

கூட்டுறவுத் துறை :

இந்தியாவில் கூட்டுறவுத் துறையில் தமிழகம் மூன்றாவது இடம் வகிக்கிறது. தமிழகத்தில் 4-வது இடத்தைத் திருவண்ணாமலை பெற்றுள்ளது.

கூட்டுறவுத் துறைமுகம் வளந்துள்ள நிறுவனங்கள் :

1. கூட்டுறவு விவசாய சேவைச் சங்கம்
2. கூட்டுறவு வங்கி
3. கூட்டுறவு விற்பனைச் சங்கம்
4. கூட்டுறவு பண்டக சாலை
5. கற்பகசம் கூட்டுறவு சிறப்பங்காடி
6. திருவண்ணாமலை பால் கூட்டுறவு சங்கம்
7. பல்நோக்கு கூட்டுறவு சங்கம் (மலைவாழ் மக்களுக்கு)

கூட்டுறவு அச்சகம் :

1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அரியூர் கூட்டுறவு நூற்பாலை :

இந்த நூற்பாலையில் கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்குத் தேவையான நூல்களும் மற்றும் டெரிகாட்டன் நூலும் தயாராகின்றன 26,656 கதிர்களும் கொண்டது.

பால்வளம் :

கிராமப் புறங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய விலைக்கு பாலைப் பெற்று, பின்பு பதப்படுத்தி, சென்னை மற்றும் உள்ளூர் தேவைக்கு ஏற்ற தரமான பாலை வழங்கும் சீரிய பணியில் இம்மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பால் உற்த்தியாளர்கள் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தினமும் 1,50,000 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் 80 சதவீதம் சென்னைக்குச் செல்கிறது.

புகழ் பெற்ற பெருமக்கள் :

சி.பி.இராமசாமி அய்யர் :

c.p.ramasamyiyarஇவர் திருவாங்கூர் திவானாகவும், இந்து அறநிலைப் பாதுகாப்புத் துறைத் தலைவரா கவும், திருவதாங்கூர், காசி, அண்ணாமலை பல்கலைக் கழகங்களின் துணை வேந்த ராகவும் இருந்தவர். இவர் வந்தவாசியில் பிறந்தவர்.

டாக்டர் சி.பாலசுப்பிரமணியம் :

சென்னை பல்கலைக் கழக தமிழ்துறை தலைவரான இவர் கண்பிச்சுபுரத்தில் பிறந்தவர். கவிஞர் வல்லம் வேங்கடபதி, மனசைப.கீரன், திருவேங்கம் முதலியோர் இம்மாவட்ட கவிஞர்கள். திராவிட இயக்க தூண்களில் ஒருவரான ப.உ.சண்முகம் திருவண்ணா மலைக்காரர். கேரளம், புதுவைப் மாநில முதல்வராக இருந்த பா.ராமச்சந்திரன் செய்யாற்றுக்காரர்.

திருவண்ணாமலைக் கோயில் கோபுர ஓவியம்
  • திருவண்ணாமலை பதினொரு நிலைக் கோபுரத்தின் உட்புறத்தில் விசய நகர வேந்தர் தமது மெய்க்கீர்த்தியில் சிறப்பித்துக் கூறும் கஜ வேட்டைக் காட்சி சித்திரிக்கப் பட்டுள்ளது.     இவ்வோவியத்தின்     ஒரு     பகுதியில் இக்கோபுரத்தினைக் கட்டிய கிருஷ்ண தேவ ராயரின் அதிகாரி செல்லப்ப நாயக்கர் உருவமும் உள்ளது. திருவண்ணாமலைக்     கோயிலில் யானை கட்டும் மண்டபத்தில் சிவ பெருமான் உமையை மணந்த வரலாறும் பாற்கடல் கடையும் காட்சியும் வண்ண ஓவியமாக உள்ளன.
விசய நகர வேந்தர் காலக் கோயில் ஓவியங்கள்
தமிழ்நாட்டில் கி.பி.15-16 ஆம் நூற்றாண்டில் விசய நகர வேந்தர்களின் ஆட்சி நடைபெற்ற போது கோயில்களில் வரையப் பட்ட ஓவியங்கள் பல ஊர்களில் காணப் படுகின்றன.     திருவண்ணாமலை,     திருவரங்கம், திருவெள்ளறை, அதமன் கோட்டை, காஞ்சிபுரம், திருமலை, திருவலஞ்சுழி, திருப்புடை மருதூர் முதலிய இடங்களிலுள்ள கோயில்களில் விசய நகர வேந்தர் காலத்து ஓவியங்கள் காணப் படுகின்றன.
  • திருவண்ணாமலையில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, சிவன் உமையம்மையைத் திருமணம் புரியும் காட்சிகள், கோபியருடன் கண்ணன், முருகன் – வள்ளி திருமணக் காட்சி ஆகியன காணப்படுகின்றன.



















  • சங்க காலத்தின் இறுதியிலிருந்து கோயில்களில் வண்ண ஓவியங்களை வரைந்து வைக்கும் வழக்கம் வந்துள்ளது. இவற்றின் தொழில் நுட்பமும் பொருளும் காலந்தோறும் மாறுபட்டுள்ளன. பல்லவர், பாண்டியர், சோழர் காலத்து ஓவியங்கள் இந்திய நாட்டின் பழமையான மரபில், அடித்தளமும் வண்ணங்களும் அதிக நாட்கள் இருக்கும் முறையில் உருவாக்கப் பட்டுள்ளன. வெண்சுதையின் மீது தீட்டப் பட்டுள்ள ஓவியங்கள் ஓவியக் கலைஞர்களின் திறமையையும் உயர் கலைத் தரத்தையும் உணர்த்துகின்றவையாய் உள்ளன. விசய நகர நாயக்கர் காலத்து ஓவியங்கள் அளவு குறைந்த, மெல்லியதான அடித்தளத்தில் மிகப் பரந்து பட்ட முறையில் தொழில் நுட்பம் குறைந்தவையாய்க் காணப் படுகின்றன. இதனால் இவ்வோவியங்கள் காலப் போக்கில் மங்கியும் அழிவுக்கு ஆளாகியும் உள்ளன.
  • தமிழ்நாட்டில் காலம் தோறும் ஓவியத்தில் இடம் பெறும் காட்சிகளின் பொருளும் காலத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. இராமாயணம் போன்ற இதிகாசங்கள் மிகப் பழங்காலத்திலிருந்து இடம் பெற்றுள்ளன. பல்லவர், பாண்டியர், சோழர் காலங்களில் சைவத்தின் எழுச்சியைக் காட்டுகின்ற முறையில் சிவனது திருக்கோலங்களும் சைவ அடியார்களது வரலாறும் கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இக்காலத்தில் மறுமலர்ச்சி அடைந்த சமண சமயப் புராணக் காட்சிகளும் ஆங்காங்கே உள்ள கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இதனையடுத்து இறைவனது திருவிளையாடல் காட்சிகளும், கோயில் தலபுராணங்களும் சைவ நாயன்மார், வைணவ ஆச்சாரியர் வரலாறுகளும் கோயில் ஓவியங்களில் காணப்படுகின்றன. நாயக்கர், மராட்டியர் காலத்தில் இவ்வகை ஓவியங்கள் இடம் பெற்றன. எல்லாக் காலத்து ஓவியங்களும் அக்கால மக்களின் ஆடை, ஆபரணங்கள், பழக்க வழக்கங்கள், தொழில்கள், சமூக மரபுகள், சமய மரபுகள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றைத் தெரிவிக்கும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன.
  •  

    திருவண்ணாமலை சித்தர் விருபக்ஷ குகைக் கோயில்

    விருபக்ஷ குகைக் கோயில்
    Virupaksha Cave is located 200 ft below Skandashram Cave in Thiruvannamalai District in Tamil Nadu. It was named after a great 13th century saint, Virupaksha Deva, who spent most of his life here and when he died his body got transformed to vibhuti (sacred ash). This sacred ash is preserved here and daily pujas are organized. There is a small compound wall with a gopuram on the eastern side, housing a small cave. A group of seven springs are found below the main peak on the east slope.
    This sacred ash is preserved here and daily pujas are organized. There is a small compound wall with a gopuram on the eastern side, housing a small cave.Virupaksha Deva, who spent most of his life here and when he died his body got transformed to vibhuti (sacred ash).


    Ramana living here from 1899 to 1916.

    Virupaksha Deva cave

    Down the hill is Arunachaleswara Temple.
    Arunachala Mountain

    Virupaksha Cave

    Virupaksha cave (Ramana meditated here in 1899-1916)
    Down the hill is Arunachaleswara Temple.

    The Virupaksha main gate.

    Entrance of the actual cave

சனி, 29 ஜூன், 2013

ஜவ்வாதுமலை வரலாற்று தகவல்கள் -கோ.ஜெயக்குமார்

ஜவ்வாதுமலை வரலாற்று தகவல்கள்

ஜவ்வாதுமலை. வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இந்த மலையின் மேற்கு பகுதியில் மனதுக்கு குளிச்சி தரும் ஏலகிரிமலை உள்ளது என்றால் கிழக்கு பகுதியில் மனதுக்கு குளிர்ச்சி, வரலாற்று தகவல்கள், பொது அறிவுத்தகவல்கள் புதைந்துள்ள ஒர் சுற்றுலா தலமாக ஜம்னாமத்தூர் பகுதி உள்ளது என்றால் அது மிகையில்லை.

ஜவ்வாது மலையின் மைய பகுதியான ஜம்னாமத்தூர் திருவண்ணாமலையில் இருந்து 70கி.மீ தொலைவில் உள்ளது. போளுரில் இருந்து செல்வது ரம்மியமாக, த்ரில்லாக இருக்கும். வளைவான மலைப்பாதைகள், கொண்டை ஊசி வளைவுகள் என சூப்பராக போகலாம். சாலைகள் போடப்பட்டுள்ளதால் பேருந்து, கார், இரு சக்கர வாகனம் போன்றவற்றில் பயமில்லாமல் பயணிக்கலாம். ஜம்னாமத்தூரில் குழந்தைகளுக்கான பூங்கா உள்ளது. ஆண்டுதோறும் ஜீன் மாதத்தில் நடைபெறும் கோடைவிழாவின்போது அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதன் அருகேயுள்ள கோமுட்டேரி ஏரியில் படகு வலமும் வரலாம்.

பீமன் நீர்வீழ்ச்சி:

ஜம்னாமத்தூரிலிருந்து 3கி.மீ தொலைவு சென்றால் அழகான பீமன் நீர் வீழ்ச்சியுள்ளது. 80 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது நீர். நீர் வரும் பாதை முதல் நீர் சென்று சேரும் இடம் வரை நடந்தே செல்லலாம் எந்த தடையும் கிடையாது. ஆனந்தமாக குளிக்கலாம் எந்த அதிகாரியும் திட்டமாட்டார்கள். குடும்பத்தோடு சென்று விளையாடலாம் எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால் மழை காலம் முடிந்தபின் தான் இங்கு செல்ல வேண்டும்.  ஏன் எனில்,  அப்போது தான் அந்த அருவில் தண்ணீர் கொட்டும். அப்போது வந்தால் தான் ஆனந்தமாக ரசிக்கவோ, குளிக்கவோ முடியும்.
ஜம்னாமத்தூர் டூ பரமனந்தல் செல்லும் வழியில் மேல்பட்டு என்ற மலை கிராமம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 3050 அடி உயரம் கொண்ட பகுதியாகும். எவ்வளவு வெயில் அடித்தாலும் இங்கு மட்டும் குளிச்சியாகவே இருக்கும். கோடைகாலத்திலும் ஏசி போட்டது போலவே இருக்கும். இங்கு 1890ல் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை என்ற பெயர் கொண்ட பயணியர் விடுதியுள்ளது. இங்கு போக பாதைகள் சரியில்லாததால் இங்கு தங்க யாரும் செல்வதில்லை. தங்க விரும்புபவர்கள் திருவண்ணாமலையில் உள்ள வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று அங்கு தங்கலாம்.

மலையின் சில இடங்களில் நீர் மத்தி மரங்கள் உள்ளன. இந்த மரங்களை 15 பேர் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்டி பிடிக்க முடியும். அந்தளவுக்கு அதன் விட்டம் பெரியது. இந்த மரங்களில் மட்டும் தான் ஒன்றுக்கும் மேற்பட்ட அதாவது நூற்றுக்கும் அதிகமான தேன்கூடுகளை தேனிக்கள் கட்டும். 21வது கி.மீ மேல்பட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு மரம் மட்டும் சுலபமாக சென்று பார்க்கும் வகையில் உள்ளது.

தமிழ்நாடு காவல்துறைக்கான கண்ட்ரோல் டவர் உள்ளது. இந்த டவர் மட்டும் பழுதானால் காவல்துறையின் ஒயர்லெஸ் செயல்பாடுகள் அத்தனையும் முடங்கிவிடும். மலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், அடி அண்ணாமலை கோயில் கட்டப்படுவதற்கு முன் கட்டப்பட்ட அண்ணாமலையார் ஆலயம் சிதலமடைந்து உள்ளது. தெற்கு பகுதியில் பர்வதமலை என்ற மலை இம்மலையை ஒட்டியுள்ளது. இங்குள்ள அம்மன கோயில் சிறப்பு வாய்ந்ததாகும். பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மலைக்கு சென்று அங்குள்ள அம்மனுக்கு அவர்களே பூஜை செய்து வணங்கிவிட்டு சூரிய உதயத்தின் போது மலையை விட்டு இறங்குகிறார்கள்.
சாமை - பேஎள்:

மலையில் பேஎள் என்ற எள் விளைகிறது. இதிலிருந்து கொழுப்பு சத்து இல்லாத எண்ணெய் இந்த பேஎள்ளில் இருந்து எடுக்க முடியும். இந்த எள் மழைக்காலத்திற்கு பின் விளையும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னும். அப்போது இந்த மலைப்பகுதியை வலம் வந்தால் சூரிய வெளிச்சத்தில் தங்கமாக இந்த மஞ்சள் பூக்கள் பிரகாசிக்கும். அதேபோல், மலைப்பிரதேசத்தில் மட்டுமே விளையும் சாமை என்ற தானியம் இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. இது உணவு பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. பிரபல பிஸ்கட் கம்பெனியான மேரிக்கோல்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிஸ்கட்கள் சாமையை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதேபோல் நாசிக்கில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் இந்த சாமை பயன்படுத்தப்படுகின்றன.

காவனூர்:

ஜம்னாமத்தூரில் இருந்து 15கி.மீ தூரம் சென்றால் காவனூர் வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி மையம் இதுதான். வாரத்தில் சனிக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரை மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். உள்ளே தொலைநோக்கி கோபுரத்தில் 2 சிறிய தொலைநோக்கிகள், 4 பெரிய தொலைநோக்கிகள் உள்ளன. சிறியதில் மட்டும் பார்வையாளர்கள் பார்க்க முடியும். வானத்தில் உள்ள கோள்களை காணலாம் ஒவ்வொரு பார்வையாளருக்கும் சில நிமிட நேர அனுமதி மட்டுமே.

இந்தியாவில் வானியல் படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்து வானியல் ஆய்வு செய்கின்றனர். இது இந்திய வானியல் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

குள்ளர் வீடுகள்:

ஜம்னாமத்தூரில் இருந்து 18 கி.மீ தொலைவில் பட்டறைக்காடு என்ற பகுதியுள்ளது. அங்கு செல்ல இரண்டு குன்றுகளை ஏறி இறங்க வேண்டும். சில நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அந்த குன்றில் நூற்றுக்கணக்கான நான்கடி உயரம், 7 அடி அகலம் கொண்ட கருங்கற்களை கொண்டு அமைக்கப்பட்ட அறைகளை காணலாம். இங்கு 3 அடி உயர குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வாலியர்கள் என்று அப்பகுதி மக்கள் பெயர் வைத்து பேசுகின்றனர்.

அமர்தி நீர்வீழ்ச்சி விலங்கியல் பூங்கா:

ஜம்னாமத்தூரில் இருந்து அமிர்திக்கு செல்லலாம். 32வது கி.மீட்டரில் உள்ளது அமிர்தி. இங்கு நீர் வீழ்ச்சியும், விலங்கியல் பூங்காவும் உள்ளது. நாம் சென்றிருந்த நேரம் வேலூர் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் ஜோடி ஜோடியாக வந்திருந்தனர். வார நாட்களில் குடும்பத்துடன் பலர் வருகின்றனர் என்றனர் அங்கிருந்த ஊழியர்கள்.

இப்பகுதிகளில் இடம் வாங்குவது, விற்பது மலைவாசிகளுக்குள் மட்டுமே என்பதால் வெளிநபர்கள் யாரும் அங்கு வீடு, விடுதிகள் கட்ட முடிவதில்லை. அதனால் அது ஒரு சிறு கிராமமாக தான் ஜம்னாமத்தூர் உள்ளது. ஒரே ஒரு அரசினர் விடுதி உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. இரவு தங்க வேண்டும் என்றால் முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு சென்றால் சிறப்பு. இல்லையேல் திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் தங்கிவிட்டு செல்லலாம்.

சாதாரண சின்ன உணவு விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கு அசைவ உணவு அற்புதம். அசல் தேன் இங்கு கிடைக்கும்.
வழித்தடம் :

ஜம்னாமத்தூர் செல்ல நான்கு பாதைகள் உள்ளன. திருவண்ணாமலையில் இருந்து போளுர் சென்று செல்வது ஒருவழி. செங்கம் வழியாக மேல்பட்டில் உள்ள நீர்மத்தி மரத்தை பார்த்துவிட்டு ஜம்னாமத்தூர் செல்லலாம்.

வேலூரிலிருந்து அமிர்தி சென்று அருவி, விலங்கியல் பூங்கா பார்த்துவிட்டு அங்கிருந்து ஜம்னாமத்தூர் செல்லலாம். வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வழியாக காவலூர் தொலைநோக்கி மையத்தை பார்த்துவிட்டு ஜம்னாமத்தூர் செல்லலாம்.

இந்த நான்கு பாதையிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை தான் பேருந்து வசதி. அதனால் வெளியூர் சுற்றுலா பயணிகள் காரில் செல்வது சிறந்தது.
கிழக்கு மலைத் தொடர்............

 
இந்திய நாட்டை வேளாண் பெருநாடாகக் பொலிவுறச் செய்யும் தகுதிவாய்ந்த வாய்ப்புகளைத் தந்து உணவுப்பொருள் உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இடத்தையும், தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருப்பவை இயற்கை வளங்கள் அத்தனையும் தனக்குள்ளே கொண்டுள்ள மலைகளும் அதன் காடுகளுமென்றால் அது மிகையாகுமா?

சைபீரியாவின் கடுங்குளிர் மிகுந்த உலர் மற்றும் கோடைக்காற்றை இந்தியத் துணைக் கண்டத்திற்குள் அண்டவிடாமல் நின்று நிலைத்துத் தடுக்கும் பணியை காலங்கள் கடந்து மேற்கொண்டு, ஈரப்பதம் மிக்க பருவகால மழைக்காற்றை நாடு முழுவதும் கொண்டு செலுத்துவது இமயமலையன்றி வேறில்லை.
இமயமலைக்கு அடுத்தபடியாக உன்னதமான மலைச்சிகரங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கி தென்னகத்தை வளங்கொழிக்கச் செய்தது நீலகிரி மற்றும் ஆனைமலைத் தொடர்கள், மேற்குக்கரை எல்லையான அரபிக் கடற்கரைக்கு இணைச் சுவரினைப்போல சங்கிலித் தொடராய் இம்மலை விளங்குகிறது.


மும்பைக்கு சற்று மேற்கே தோன்றி முக்கடல் சங்கமிக்கும் குமரி முனைவரை இம்மலை நீண்டு காணப்படுகிறது. இம்மலைத் தொடர்கள் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால் சைபீரியாவின் ஸ்டெபி சமவெளிபோல வறண்ட பாலைவனமாக இந்தியா இருந்திருக்கும்.


இமயமலைத் தொடர் முழுவதுமே ஒரே ஒரு தனிவகையைச் சார்ந்தவை. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகத்திலுள்ள இன்னபிற மலைத் தொடர்களுக்கு நிகராக விளங்குபவை. இதனுடைய எழிலும், தோற்றமும், இயற்கையின் பசுமைச் செழுமையும், தனியிடம் பெற்றிருப்பது பெருஞ்சிறப்பாகும்.


இமயமும், நீலகிரி மலையும் நமது தீபகற்பத்தின் இயற்கையின் அரும்பெரும் கொடை எனக்கொண்டாலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.


சாத்புரா, விந்தியம், ஆரவல்லி மலைத்தொடர்களும், காசி, காரோ போன்ற மலைக்குன்றுகளும் குறைவில்லாமல் இந்திய உயிரின மேன்மைக்குத் துணையாக இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு மலைத்தொடர்கள் சூழ்ந்துள்ளன. ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலைகள், இரண்டாவது கிழக்குத் தொடர்ச்சி மலைகள். வடகிழக்காகத் தொடங்கி தென்மேற்காக அமைந்துள்ள மலைகளை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்கிறோம். உண்மையில் இஃது தொடர்ச்சியாக, அதாவது மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போன்று அமையப் பெற்றதல்ல. மகா நதி தொடங்கி வைகை நதி வரையிலான பகுதிகளில் உள்ள பல்வேறு மலைகளின் தொகுப்பே இம்மலைத் தொடர்ச்சி.


இம்மலைத் தொடரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரிசாவில் (ஒடிசா) தொடங்கி ஆந்திரத்தின் குண்டூர் வரையிலான மலைகளை வடக்குப் பகுதியாகவும், குண்டூரில் இருந்து தமிழக எல்லை வரையிலானவற்றை நடுப்பகுதியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் அமைந்துள்ளவற்றை நிறைவுப்பகுதியாகவும் வரையறுத்துள்ளனர்.நிறைவுப் பகுதியானது தென் மேற்காகச் சென்று நீலகிரி மலையைச் சந்திக்கிறது.


கொல்லிமலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, சேர்வராயன்மலை, அழகர்மலை மற்றும் கரூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள சிறுமலை என்று வழங்கப்படும் மலைத்தொகுதி வரை உள்ள அனைத்து உயரங்குறைவான மலைக்குன்றுகளும் கிழக்குத் தொடர்ச்சி மலை என்றே அழைக்கப்படுகின்றன. சுமார் 400 மீட்டர் முதல் 1,650 மீட்டர்கள் வரை உயரமுள்ள குன்றுகளால் ஆனது இம்மலைக்குடும்பம்.


பூமத்திய ரேகை மழை மண்டலத்தில் அமையப்பெற்றுள்ள இம்மலைப் பகுதிகள் வடகிழக்குப் பருவ மழையாலும், தென்மேற்குப் பருவ மழையாலும் மழை பெறுகிறது. இம்மலைத்தொடரின் வடக்குப்பகுதி (ஒடிசா, ஆந்திரம்) ஆண்டொன்றுக்கு 1,200 மில்லி மீட்டர் முதல் 1,600 மில்லி மீட்டர் வரை மழைப் பொழிவைப் பெறுகிறது. ஆந்திரம் 600 மில்லி மீட்டரும், தெற்குப் பகுதியாக உள்ள தமிழ்நாடு 1,000 மில்லி மீட்டரும் மழையைப் பெறுகின்றன. இதனால் மலை உச்சிகளைத் தவிர, பிற பகுதிகளில் அரை வறட்சி தட்ப வெப்பநிலையே நிலவுகிறது.


வெப்பநிலையும் வெவ்வேறு பகுதிகளில் மாறுபடுகிறது. ஜனவரியில் 20 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உள்ளது. வடக்கிலிருந்து மேற்காகச் செல்லச்செல்ல வெப்பநிலை அதிகரித்து 41 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையைப்போல ஆண்டு முழுவதுமான தட்பவெப்பநிலையை இம்மலை கொண்டிருக்கவில்லை.


தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையின் மொத்த பரப்பளவு 98,000 சதுர கிலோ மீட்டர்களாகும். சேர்வராயன் மலை தமிழகத்தின் இதயம் போன்று அமைந்துள்ளது. திசைகள்தோறும் சமவெளியில் சூழப்பட்ட இம்மலை 900 மீட்டர் முதல் 1,624 மீட்டர் வரையுள்ள முகடுகளைக் கொண்டது. தகுதியான மழை வளத்தின் மூலம் ஆரணியாறு, பாலாறு, பெண்ணையாறு, காவிரியாறு போன்றவை நீர்வரத்துப்பெற வேண்டும். ஆனால், நடப்பதில்லை.


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேற்கண்ட கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மீது அதிகமான கவனம் செலுத்தப்படவில்லை. காரணம் இங்கு பழங்குடி மக்களாக வாழ்ந்து வந்தவர்களுக்கு மலேரியா இருப்பதாக அறிந்து இம்மலைகள் மீது ஆதிக்கம் செலுத்த அவர்கள் பயந்தனர்.


இருப்பினும் 1800-களில் இம்மலைத் தொடரை அளக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் மலேரியா பயத்தால் தோல்வி அடைந்தன. 1820-1829களில் பல்வேறு வழிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் சேர்வராயன் மலைப்பகுதிகளில் நில அளவை செய்யப்பட்டது. தொடர்ந்து 1840-ம் ஆண்டுகளில் ரயில் பாதைகள் அமைப்பதற்கான (ஸ்லீப்பர் கட்டைகள்) மரங்கள் இம் மலையிலிருந்து பெருமளவு வெட்டப்பட்டன.


முன்னதாக, அதாவது 1820-1829-ம் ஆண்டுகளில் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.டி.காக்பெர்ன், கிரேன்ஞ் எஸ்டேட் என்ற இடத்தில் தங்கினார். அவர்தான் காபிப் பயிரை இங்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரே ஆப்பிரிக்காவில் இருந்து ஆப்பிள் பியர் உள்ளிட்ட பழங்களையும் பயிர் செய்தார். இதன் காரணமாகவே இங்கிருந்து காபி நீலகிரிக்கு அறிமுகமானது. மலையின் பூர்வீகக் குடிகள் கேழ்வரகு, சாமை போன்றவற்றையே பாரம்பரியமாக பயிர் செய்துவந்த நிலை காபியால் முற்றிலும் காலியானது. மலைவாழ் மக்கள் உழைப்பின் நிமித்தம் பிழியப்பட்டனர். 


1841 மற்றும் 1866-ம் ஆண்டுகளில் மீண்டும் சர்வே செய்யப்பட்டது. 1900-ம் ஆண்டு ஏற்காடு-சேலம் சாலைத்திட்டம் தொடங்கி 1903-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. 1929-ல் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 1930-ம் ஆண்டில் இம்மலைக்கு மின்சாரம் வந்தது. பின்னடைவும் வந்தது.
மெல்ல மெல்ல உலகத்தின் கண்களுக்கு தூரத்தில் இருந்து தென்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியப் பகுதிகள் மனிதரின் கரங்களுக்குள் சிக்கின. மலைகளின் உயிர் நாடியாக இருந்த மரங்கள் நாளொன்றுக்கு பலநூறு டன் வெட்டப்பட்டு கீழிறக்கப்படுகின்றன. இதனால் குறிப்பாக, சேர்வராயனின் சரபங்கா மற்றும் திருமணிமுத்தாறு ஆகிய இரு நதிகள் காய்ந்து வறண்டுவிட்டன. இதே நிலைதான் கிழக்குத் தொடர்ச்சி மலை முழுதும்.


கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட 204-க்கும் மேற்பட்ட களைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாரம்பரியமான பூவினங்கள் சுமார் 62 வகை முற்றிலுமாக அழிந்துவிட்டன.
மேலும் 20 வகை பூவினங்கள் அரிய வகைகளாகிவிட்டன. 3 இனங்கள் உச்சபட்ச அழிவு நிலையில் உள்ளன என தமிழகத்தின் "சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை - 2005' வேதனையுடன் தெரிவிக்கிறது. அதே ஆய்வறிக்கை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பல்வேறு இடங்களில் அன்னியத் தாவர இனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளூர் இனங்களை ஆதிக்கம்செய்து அழித்து வருகின்றன என்று தெரிவிக்கிறது.


லேன்டானா, காமரா என்ற வகையினம் வனங்களின் உட்பகுதியையும், குளங்களை ஐகோர்னியா கிராஸ்பைஸ் என்ற தாவர வகையினமும், நீர்வளத்தைப் பாதித்து வருகின்றன. சமவெளிகளில் பரவிவரும் பார்த்தீனியம், வனங்களை ஆக்கிரமித்து கடும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்கிறது அறிக்கை.


மலைகளில் உள்ள இடங்களில் மேக்னசைட் கல்லும், பாக்சைட் கனிமமும், டன் கணக்கில் வெட்டியெடுக்கப்படுகின்றன. இந்த நிலை மலையின் உறுதித்தன்மையை நாளும் பாதித்து வருகிறது. காடுகள் விரிவாக்கம் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். லட்சக்கணக்கான ஹெக்டேர்கள் அளவிலான அரசின் காட்டு நிலங்கள் ஜட்ரோபா எனும் காட்டு ஆமணக்கு போன்ற எரிபொருள் தாவரங்கள் பயிரிட அழிக்கப்படுகின்றது.


1864-ம் ஆண்டு வனத்துறையை ஆங்கில அரசு நிறுவியது. "அறிவியல் பூர்வமான காடு மேலாண்மை' எனும் பெயரில் நமது மண்ணுக்கும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்புடையதல்லாத செயல்களைச் செய்து கோடிக்கணக்கில் லாபமீட்டி மலைவளம், காடுவளம் ஆகியவற்றை அழித்தொழித்தது. இப்போது இதே பணியைத்தான் நம்மவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர் என்பது பெருந்துயரமாகும்.
""காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்க நோக்க களியாட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை'' என்றார் பாரதி. 


வனங்களும், மலைகளும் மனித குலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனோபாவத்திற்கு நாம் உடனே மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மலைகள் இயற்கை வளங்களோடு மதிக்கப்பட வேண்டும். இல்லையேல் அவை நமக்குத் தகுந்த உதவிகள் செய்வது சீராக இருக்காது. அதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து நாம் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கப் போகின்றோமா என்பதுதான் இப்போது நம்முன் உள்ள கேள்வி.

நேரு மறைந்தார்: உலகத் தலைவர்கள் அஞ்சலி - கோ.ஜெயக்குமார்.


நேரு மறைந்தார்: உலகத் தலைவர்கள் அஞ்சலி

இந்தியா - சீனா போர் மூளுகிறவரை நேருவின் தலைமைக்கு எதிராக யாரும் குரல் எழுப்பியதில்லை. சீனப்போரில் இந்திய படைகளுக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக நேரு தன் வாழ்நாளில் முதல் தடவையாக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சந்திக்க நேர்ந்தது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்று பதவியில் நேரு நீடித்தபோதிலும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

75 வயதைத் தாண்டியும் இளமையோடு இருந்த அவர் 1964-ம் ஆண்டு ஜனவரி மாதம் புவனேசுவரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டபோது பக்கவாத நோயினால் தாக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். பின்னர் குணம் அடைந்து பிரதமருக்குரிய பொறுப்புகளை செவ்வனே கவனித்தார்.

எதிர் காலத்தில் இந்தியா மீது வெளிநாடுகள் படையெடுத்தால் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ராணுவத்தைப் பலப்படுத்தவும் நவீனப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார். எனினும் அந்த மகத்தான தலைவரை எமன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினான். 1964 மே 27-ந்தேதி காலை 6.20 மணிக்கு அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்தது. உணர்வு இழந்தார்.

டாக்டர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு காலமானார். சுதந்திரத்துக்கு முன் 30 ஆண்டுகளும், சுதந்திரத்துக்குப்பின் 17 ஆண்டுகளும் தாய்நாட்டுக்கு உழைத்த நேரு மறைந்தார். உயிர் பிரியும்போது மகள் இந்திரா காந்தி மந்திரிகள் நந்தா, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் நேருவின் படுக்கை அருகே இருந்தனர்.

நேரு மரணம் அடைந்த செய்தியை பாராளுமன்றத்தில் மந்திரி சி.சுப்பிரமணியம் அறிவித்தார். "நேரு மறைந்துவிட்டார். இந்த தேசத்தின் ஒளி விளக்கு அணைந்து விட்டது" என்று அவர் குரல் தழுதழுக்க, கண்களில் கண்ணீருடன் கூறினார். சுப்பிரமணியத்தின் அறிவிப்பைக் கேட்டதும் பல "எம்.பி."க்கள் கதறி அழுதார்கள்.

உடனே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மந்திரிகளும், "எம்.பி."க்களும் நேரு வீட்டுக்கு விரைந்தனர். நேருவின் உடல் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். மாலை 5 மணிக்கு, நேருவின் வீட்டு முன் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கூடிவிட்டனர்.

அவர்கள் வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். நேரு மகள் இந்திரா தந்தையின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நேரு மந்திரிசபையில் மூத்த மந்திரியாக இருந்த குல்சாரிலால் நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார்.

விரைவில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி (எம்.பி.க்கள்) கூடி, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நேருவின் இறுதி ஊர்வலம் மறுநாள் நடைபெற்றது. இங்கிலாந்து பிரதமர் டக்ளஸ் ஹோம், ரஷிய உதவிப்பிரதமர் கோசிஜின், இலங்கைப் பிரதமர் திருமதி பண்டாரநாயக், நேபாள மன்னர் மகேந்திரா, எகிப்து உதவி ஜனாதிபதி உசேன் சபி, அமெரிக்க வெளிநாட்டு இலாகா மந்திரி டீன் ரஸ்க் உள்பட உலகத் தலைவர்கள் பலர் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

ஊர்வலம் நேரு வீட்டில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்தில் 20 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று யமுனை நதிக்கரையை அடைந்தது. யமுனை நதிக்கரையில், காந்தி சமாதி அருகே சந்தனக் கட்டைகளால் அமைக்கப்பட்ட "சிதை"யில் நேருவின் உடல் தகனம் செய்யப்பட்டது. "சிதை"க்கு நேருவின் பேரன் சஞ்சய் காந்தி தீ மூட்டினார்.