ஞாயிறு, 7 ஜூன், 2015

வரலாற்றுக் கோட்டை வந்தவாசி - கோ.ஜெயக்குமார்.

வரலாற்றுக் கோட்டை வந்தவாசி - கோ.ஜெயக்குமார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில்  மிகப்பெரிய போர் நடந்தது. இந்த கால கட்டத்தில் மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. வரலாற்று ஆசிரியர்கள் இந்த போரை மூன்றாம் கர்நாடகப் போர் என்வும் குறிப்பிடுகின்றனர். இந்தப்போரோடு இந்தியாவில் பிரஞ்சு ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.
 
1761-ல் இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சர் அயர் கூட் தலைமையிலான படை, பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவில் காலுான்ற காரணமானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது வந்தவாசி. சட்டமன்ற தொகுதியான இங்கு இதுவரை ஆண்டு வந்த, ஆண்டு வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியின் வளர்ச்சிக்கோ அல்லது வரலாற்றை பாதுகாக்கவோ தவறிவிட்டனர் என்று உறுதியாக சொல்ல முடியும். வந்தவாசி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.
 Displaying 20150519_182521_resized_1.jpg
வந்தவாசியை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளை கடந்து சென்றாளும் வளர்ச்சி இல்லை. குறிப்பாக அடிப்படை வசதிகளான சாலை வசதி, பேருந்து வசதி, குடிநீர், சுகாதாரம், நூலகம், கல்வி வளர்ச்சி இல்லை. வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எனக்கு தெரிந்து கடந்த 15 ஆண்டுகளுகு மேலாக கழிப்பிடம் இன்றி துர்நாற்றம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது.
 
நகராட்சி நிர்வாகம் வசூல் வேட்டையில் மட்டும் தனி கவனம் செலுத்திவருகிறது. அதிகாரிகளும் இந்த வசூல் வேட்டைக்கு உறுதுணையாக உள்ளது. வளர்ச்சிப்பணிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. சாலைகள், போக்குவரத்து, குடிநீர் இவற்றைப்பற்றி கவலைப்படாத நிர்வாகம் குடிநீர் இணைப்பு ஒன்றிற்கு 15000 முதல் 20000 வரை லஞ்சம் வாங்குவது அதை பகிர்ந்து கொள்வது போன்றவை கையூட்டு வேலைகள் மட்டும் படுஜோராக
நடைபெற்று வருகிறது.
Displaying 20150519_182420_resized_2.jpg
வந்தவாசி நகராட்சிக்கு அருகில் உள்ள கோட்டை பராமரிக்கப்படவில்லை. கோட்டைக்கு சொந்தமான குளம் ஆகாய தாமரைக்கு வாழ்வளித்துள்ளது. நடுகல் ஒன்று கேட்பார் அற்று உள்ளது.
 Displaying 20150519_181427_resized_1.jpg
வரலாற்றில் மிக முக்கியமான் போர் நடைபெற்ற இந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியவில்லை. பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு பணம் வாங்கி பழகிப்போன் அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் வரலாற்றை பாதுகாப்பது பற்றி தெரியவாபோகிறது.
 http://www.vandaitimes.com/wp-content/uploads/2012/09/DSC00374.jpg
இதுவரை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பேசி நான் பார்த்ததில்லை இதுதான் இவர்களின் அரசியல் ஜனநாயகம்.
 Displaying 20150519_182346_resized_1.jpg
வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டும
 Displaying 20150519_182051_resized.jpg
மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.
 Displaying 20150519_182221_resized_1.jpg
வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க தவறி வரும் இவர்களுக்கு வரும் காலங்களில் மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும். வழிபாட்டிற்காக கோயில் என்ற அளவில் ஆஞ்சநேயர் வழிபாடு மட்டுமே நடைபெறுகிறது. பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அகழி மீண்டும் பொலிவு பெறுமா என்பது விடை கான முடியாத வினாவாகவே உள்ளது.
 http://img716.imageshack.us/img716/7079/wandawashplaque.gif
இந்த கோவில் அமைவிடம் வந்தவாசி கோட்டையின் நுழைவு வாயில் ஆகும். வந்தவாசி கோட்டை மிகவும் சேதம் அடைந்துவிட்ட நிலையிலும் இந்த வீர ஆஞ்சநேயர் கோவில் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் பக்கத்தில் பழங்காலத்தில் மன்னர்களாலும் பிரிட்டனாலும் உபயோகிக்
கப்பட்ட பீரங்கி ஒன்றும் உள்ளது. கோவிலும் பீரங்கியும் தற்போது அறநிலையத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Displaying 20150519_181452_resized.jpg
வந்தவாசி போர் பற்றிய வரலாறவது எதிர்காலத்தில் ஆவணங்களில் இருக்குமா என்ற வினாவும் இந்த நேரத்தில் எழத்தான் செய்கிறது. நமது பண்பாடும், நாகரிகம், கலை பாதுகாக்கப்படுமா என்ற ஐயம் அனைவரது கேள்வியாக உள்ளது.........தொடரும்........