செவ்வாய், 30 ஜூலை, 2013

மகாபலிபுரம் தலசயனப்பெருமாள் கோ.ஜெயக்குமார்.

மகாபலிபுரம் தலசயனப்பெருமாள் கோ.ஜெயக்குமார்.

மூலவர் : ஸ்தலசயனப்பெருமாள்
உற்சவர் : உலகுய்ய நின்றான் 
அம்மன்/தாயார் : நிலமங்கைத் தாயார் 
தல விருட்சம் : புன்னை மரம் 
தீர்த்தம் : புண்டரீக புஷ்கரணி 
விமானம் : கனகாகிருதி விமானம் 
ஆகமம்/பூஜை : - பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் 
புராண பெயர் : திருக்கடல் மல்லை 
ஊர் : மகாபலிபுரம் 
http://photos.wikimapia.org/p/00/03/10/32/80_full.jpg
சென்னைக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் மகாபலிபுரத்தில் இந்த திவ்ய தேசம் அமைத்துள்ளது. இது மாமல்லாபுரம், கடல்மல்லை, தல சயனம், அர்த்த சேது என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. இது திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதி. 

புண்டரீக முனிவர் தாமரை மலர்களைக் கொண்டு பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனை வழிபட வேண்டும் என்று எண்ணியவராய்க் கூடை நிறையப் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தார். 
http://media.dinamani.com/2013/05/12/ther.jpg/article1587147.ece/alternates/w460/ther.jpg
அவர் செல்லும் போது கடலானது வழியடைத்துக் கொண்டு இருப்பதைக் கண்ட முனிவர் பத்தி மேலீட்டால் கடல் நீரைக் கைகளால் இறைத்து விடலாம் என்று எண்ணி அவ்வாறே செய்யலானார். முனிவரின் பக்தியை மெச்சிய பெருமாள், முதியவர் வேடம் கொண்டு தனக்கு ஆகாரம் கொடுக்குமாறு கேட்டார். 
http://photos.wikimapia.org/p/00/03/10/32/09_full.jpg
முனிவர் ஆகாரம் கொண்டு வரச் சென்றதும் இறைவன் திருவனந்தான் மேல்சயனம் கொண்டுள்ள கோலத்தில் கூடையில் இருந்த தாமரை மலர்களைச் சாத்திக் கொண்டு சேவை சாதிக்கலானார். இத்திருக்காட்சியைக் கண்ட முனிவர் பேரானந்தம் அடைந்தவராய் எம்பெருமாள் திருப்பாதத்தருகில் அமரும் பாக்கியத்தை அருளும்படி வேண்டினார். 
http://mmimages.maalaimalar.com/Articles/2012/Aug/577b47e1-0e0e-4dce-85cf-a781c6f2a929_S_secvpf.gif
பெருமாள் அவ்வாறே முனிவருக்கு அருளினார். இங்குப் பெருமாள் தரையில் ஆதிசேடன் மீது சயனித்தும், புண்டரீக முனிவர் திருவடியின் அருகில் கைகூப்பிய நிலையில் காட்சி தருகிறார். பூதத்தாழ்வார் இத்தலத்தில் மல்லிகை வனத்தில் உள்ள நீலோத்பலமலரில் தோன்றியவர். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY3Z-Kc9uWi3vdM1luBregx9WHdn8qqgFEyE7mypbUNt2HAR7gIdd26R3irrkNyaTjB-iF3S0ZuVUCHcjRj_Te4YS9c28tMkE6_zF54rcZDeQ9EY16LJ9H9CsSaHigh_JP7JSSZsp6Vfxj/s400/99009999+Thalasayana_Perumal.jpg
பெருமாள் இங்கு ஞானப்பிரான்- வலவெந்தை என அழைக்கப்படுகிறார். இங்குப் பல்லவர்களின் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கலைச்சின்னங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை) இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான இந்து வைணவ கோயிலாகும்.
இக் கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள்(தமிழில் தரைகிடந்த பெருமாள்) என வழங்கி வருகின்றது.
இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப் பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.
திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் திருக்கடல்மல்லை தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர் கருத்து.
இத் தலத்திலேயே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
http://media.dinamani.com/article1479353.ece/alternates/w460/c25cglmasi.jpg
இந்தத் திருக்கோயிலை நடுவண் அரசின் தொல்லியல் துறை கையகப்படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது.[1]

திங்கள், 29 ஜூலை, 2013

திருவலாங்காடு கோயில் வரலாறு - கோ.ஜெயக்குமார்.

திருவலாங்காடு கோயில் வரலாறு - கோ.ஜெயக்குமார்.
தல வரலாறு:
இறைவர் திருப்பெயர்  : வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர்.
இறைவியார் திருப்பெயர்  : பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி.
தல மரம்   : பலா. (ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது.)
தீர்த்தம்    : 'சென்றாடு தீர்த்தம் ' (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி), 
      முக்தி தீர்த்தம்.
வழிபட்டோர்   : கார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்  : 1. சம்பந்தர் - 1. துஞ்ச வருவாருந்.

      2. அப்பர்   - 1. வெள்ளநீர்ச் சடையர்,
      2. ஒன்றா வுலகனைத்து.
 
      3. சுந்தரர்  - 1. முத்தா முத்தி தரவல்ல.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEif8lDVNiCojCPUMGeXRU33fXmPn0c9_hAUftmmIaVauomN0LKuXqgXhnZv-ytArqmTEBFKcjQtCbxQE76v1ZgApa4y7JpboKmkdQNm4-6iUlRzilhbBYdM7TMb2_UZIlRkF1EBPARcNarW/s640/100_7531.JPG
பெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது.
http://180.179.36.240:82/Articles/2011/Jun/e71ebcab-e6f2-4cdd-8dac-ab1dd5bfb60a_S_secvpf.gif
இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.
http://1.bp.blogspot.com/_ADwJgwfepSw/SHBSScURkBI/AAAAAAAACW0/P2TGJMpAHiY/s400/alankadu1.JPG
நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்ப குஜாம்பாள் என்றும், பூமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.

கோயில் அமைப்பு.......
http://photos.wikimapia.org/p/00/01/19/25/77_big.jpg
பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீர பாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரியபகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.  

சிறப்பம்சம்.......
http://photos.wikimapia.org/p/00/01/19/25/80_big.jpg
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள். சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத் துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJUCcqBKKphCEApNEaTRysymtzsNNaLolk54LbG3rjkaez2EyeOI_AeIICVCNHq6AmzFE8CXVkxZ6tR3aWaaGE79AO9lUl_QLGJOQQ7lNxc8GClUGYcSBJ8qU7d0o1WNkWUY7eWO_yO2w/s400/tvg7.jpg
கோயிலின் வடகிழக்கு மூலையில் மிகமிக பழமையான ஸ்ரீ வீர பாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரண கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIZMfMUCkv7XMCF11YkYjweLbU-N3FPvmzdx1UcD0WDZTq_CtuaTBeaHkMk4A5-QzJRyZoEYRxQiIvRRag6uZjG9vXEka4o7Dn4DT6AEvlZrzhszn4l6RzxkBu9i7RZe4s-sXD230IFI9O/s320/aalangadu.jpg கோவில் திறக்கும் நேரம்.......

காலை 6-10 மணி, மாலை 5.30- இரவு 7.30 மணி.

போக்குவரத்து வசதி....  
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Tiruvalangadu6.jpg/280px-Tiruvalangadu6.jpg
சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு உள்ளது. பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.
 http://mw2.google.com/mw-panoramio/photos/medium/71371685.jpg
சென்னையிலிருந்து திருவள்ளுர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. சென்னையிலிருந்து திருவள்ளூர் அரக்கோணம் வழியாகச் சோளிங்கர் செல்லும் பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.
காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளுரிலிருந்தும் இவ்வூர்க்குப் பேருந்துகள் உள்ளன.
 http://kumbakonamtemples.in/wp-content/pageflip/images/i_M1cNl4lWqZt4.jpg
ஆலங்காடு. இத்தலம் 'வடாரண்யம்' எனப் பெயர் பெற்றது. காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து நடராசப் பெருமானின் திருவடிக் கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலம். இறைவன் காளியுடன் நடனமாடிய தலம். இத்திருக்கோயில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்தது, நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்றிலங்குவது இத்திருக்கோயில். கார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர் வழிபட்ட தலம். சிறிய ஊர். பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் செல்லும்போது கோயிலுக்குரிய அழகிய சிற்ப வேலைப்பாடு அமைந்த பழமையான தேரைக் காணலாம். இத்திருக்கோயில் திருப்பணி நிறைவாகி 1983ல் குடமுழுக்கு செய்யப்பட்ட புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
இறைவன் - வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர் இறைவி - பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி
தலமரம் - பலா, ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது.
தீர்த்தம் - 'சென்றாடு தீர்த்தம்' ("செங்கச்ச உன்மத்ய மோக்ஷபுஷ்கரணி") முக்தி தீர்த்தம். மிகப் பெரிய குளம். கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உhttp://www.koyil.com/images/thiruvalangadu3.jpgள்ளது.

மூவர் பாடல் பெற்ற தலம்.
கோயிலின் முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. முகப்பு வாயிலில் வரசித்தி விநாயகரும், ஊர்த்துவ தாண்டவமும், ரிஷபாரூடரும், முருகனும், காளியும் உள்ள சுதை சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்தால் நான்குகால் மண்டபம் உள்ளது. உள்கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலப்பால் சித்த வைத்திய சாலை நடைபெறும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மருத்துவச்சாலை தேவஸ்தானச் சார்பில் நடைபெறுகிறது. திங்கள், வியாழன் காலை வேளைகளில் மக்கள் வந்து மருத்துவம் பெற்றுச் செல்கின்றனர். இம் மண்டபத்தில் தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது.
கோபுர வாயிலில் வல்லபை விநயாகர் துதிக்கையுள்ளிட்ட பதினோரு கரங்களடன் காட்சி தருகின்றார். மறுபுறம் வள்ளி தெய்வயானையுடனாகிய ஆறுமுகர் சந்நிதி.
 http://img1.dinamalar.com/Kovilimages/T_500_115.jpg
வெளிப் பிரகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. சந்தன மரங்கள் உள்ளன. கோபுரவாயில் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலப்பால் துவஜாரோகண (கொடியேற்ற) மண்டபம், இடப்பால் சுக்கிரவார மண்டபம்.
அடுத்துள்ள ஊள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரத்தில் ஊர்த்துவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டள்ளன.
வலப்பால் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. உள்ளே நுழைந்தால் எதிரில் மதிற்சுவர்மீது பஞ்ச சபைகள் உரிய நடராச தாண்டவத்துடன் வண்ணத்தில் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
கோபுரத்தில் உள் பக்கத்தில் தசாவதாரச் சிற்பங்கள், கண்ணப்பர் கண்ணை அப்புவது, அரிவாட்டாய நாயனார் மனைவியுடன் செல்வது, முதலிய சிற்பங்கள் உள.
பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம் - இரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது ஆலங்காடு என்னும் பெயருக்கு ஏற்ப மூலையில் பெரிய ஆலமரம் உள்ளது.
அடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது, நினற் திருக்கோலம். இக்கருவறையில் கோஷ்டமூர்த்தங்கள் இல்லை. சிற்பக் கழையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை. உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டள்ளன. அவற்றுள் - பிட்சாடனர், விநாயகர், காரைக்காலம்மையார் (தாளமிட்டுப் பாடும் அமைப்பில்,) சுநந்த முனிவர், கார்க்கோடகன், நால்வர் முதலியவை சிறப்பானவை.
இரத்தின சபை அழகு வாய்ந்தது. நடராசப் பெருமானின் ஊர்த்துவதாண்டவச் சிறப்பு தரிசிக்கத் தக்கது. அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி' என்று அழைக்கப்படுகிறார். சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் உள்ளன. பக்கத்தில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் (சபையில்) உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகமுண்டு. திருமுறைப்பேழை உள்ளது. இரத்தினச் சபையை வலம் வரலாம். வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது. சுந்தரர் பதிகம் கல்வெட்டில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துக் கட்டளையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.
மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்மையார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.
கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உளர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது - பஞ்சபூதத்தலலிங்கங்கள் உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள. உபதேச தக்ஷிணாமூர்த்தி உருவம் மிக்க அழகுடையது. பைரவர் வாகனமின்றி காட்சி தருகின்றார். ஆலயத்துள் அறுபத்து மூவர் சந்நிதிகள் இல்லை.
மூலவர் சந்நிதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேரே மூலவர் காட்சி தருகிறார். வலப்பால் ஆனந்தத் தாண்டவ நடராஜர் திருமேனி - சப்பரத்திலுள்ளது. தெற்கு நோக்கியது. எதிரில் வாயிலுள்ளது. நடராசாவுக்குப் பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. மூடியுள்ள கல்லைத்தூக்க இருவளையங்களையும் மேலே வைத்துள்ளார்கள். சுரங்கம் எங்குச் செல்கிறதோ? தெரியவில்லை. துவார பாலகர்களைத் தாண்டிச் சென்றால் மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. மூலவருக்கு மேல் உருத்திராக்க விதானம் - திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துப்பணி உள்ளது.
மூலவரின் பக்கத்தில் போக சக்தி அம்மன் உற்சவத் திருமேனி உள்ளது. சிவலிங்கத் திருமேனியின் மீது கோடுகள் அமைந்துள்ளன. பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. ஊருக்குப் பக்கத்தில் காளிகோயில் உள்ளது. இத்தலத்திற்குத் தொடர்புடைய 'பழையனூர்' கிராமம், பக்கத்தில் 2 A.e. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள இறைவன் - அம்மையப்பர், இறைவி -ஆனந்தவல்லி. மேற்கு நோக்கிய சந்நிதி.
பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத்ந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம்' உள்ளது, திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மண்டபம் தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில் இவர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போனற் சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகச் 'சாட்சி பூதேஸ்வரர்' காட்சியளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.
தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபைத் பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர்.
இம்மரபினரின் கோத்திரமே 'கூழாண்டார்கோத்திரம்'. அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்குச் சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி நெஞ்சை நெகிழவைக்கின்றது.
கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்' என்று குறிக்கப்பட்டுள்ளது.
"கேடும்பிறவியும் ஆக்கினாரும் கேடிலா
வீடுமாநெறி விளம்பினார்எம் விகிர்தனார்
காடுஞ்சுடலையும் கைக்கொண்டு அல்லில்கணப்பேயோ (டு)
ஆடும் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே."
 கல்வெட்டு:


அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 52 உள்ளன. இத்தலம் வடகரை மணவிற்கோட்டத்து மேல்மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு என்றும், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேல்மாலையாகிய பழையனூர் நாட்டுத் திருவாலங்காடென்றும் வழங்கப்படுகின்றது. பெருமான் திருவாலங்காடு உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார்.

இத்தலத்துள் ஏதோ ஒரு மண்டபத்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அம்மையப்பன் பழியஞ்சிய பல்லவராயன் கட்டினான்.(468 of 1905) நடராஜப்பெருமான் திருவரங்கில் அண்டம் உற நிமிர்ந்தருளிய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இவருக்கு இலத்தூர்நாட்டு அரும்பாக்கத்துக் குன்றத்தூர்க் கோட்டத்து அறநிலை விசாரகன் திரைலோக்கிய மன்னன் வத்ஸராஜன் என்பவன் விளக்குக்காக நிலமளித்தான்.(482 of 1905) அம்மை வண்டார் குழலி நாச்சியார் எனவும், பிரமராம்பாள் எனவும் குறிப்பிடப்படு கிறார்.(495 of 1905)

ஏனைய கல்வெட்டுக்கள் நிலம் விற்றதையும், தண்ட நாயகருக்கு உத்தரவிட்டதையும் அறிவிப்பன. 477, 476 என்ற விஜய நகர அரசர் கல்வெட்டுக்கள் இம்மடி தர்மசிவாச்சாரியார், பொன்னம் பல சிவாச்சாரியார். அனந்தசிவாச்சாரியார், இவர்களுக்கு விழா நடத்த உத்திரவு அளித்துப் பொன் கொடுத்ததையும் உணர்த்துகின்றன. பராந்தகசோழன் I காலமுதல் விஜயநகர அரசர் காலம் வரையுள்ள இக்கல்வெட்டுகளால் இத்தலத்தின் தொன்மையை அறியலாம்.

சனி, 27 ஜூலை, 2013

சென்னைதிருநீர்மலை திவ்ய தேசம் - கோ.ஜெயக்குமார்.

சென்னைதிருநீர்மலை திவ்ய தேசம் - கோ.ஜெயக்குமார்.

திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது. இந்தத்தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன. மலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன.
அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் சாந்த நரசிம்மன், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்கிரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgabqsDdsBkqdK5WEappZamixumX64Q2trzhT6YtQbSdC_y1EYnzsa1NePA084-AzGrsOjAREWlpxIGDNAEJMxeLa2wAg6KIO3jy9jiihwC1P1foRTl4fEb_0RLNU4HtrvR_3EEuYv33kHR/s320/thiruneermalai.jpg
மலையில் கீழ் `நின்றான்' என்று சொல்லும் நிலையில் பெருமாள் மலையின் மேல் ` இருந்தான்! நடந்தான்!' என்ற திருக்கோலங்களில் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் ரங்கநாயகித் தாயார், தனிக் கோவில் நாச்சியாராகக் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். 

வால்மீகி இங்கு வந்து தியானம் செய்ய ராம லட்சுமண, பரத, சத்ருக்னர்கள், சுக்ரீவனோடும் அனுமனோடும் அவருக்குக் காட்சி தந்து மறைந்தார்களாம். திருமங்கையாழ்வார், ஆறு மாத காலம் இங்குத் தங்கியிருந்து பெருமாளை வழிபட்டார்.

அப்பொது இந்த மலையைச் சுற்றி நீர் அரண் போல் இருந்ததால், நீர்மலை என்ற பெயர் இதற்கு உண்டாயிற்று. பூதத்தாழ்வாரும், இந்தத் திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டிïர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்துப் பூதத்தாழ்வார் மங்ளாசாசனம் செய்துள்ளார். 

இங்குள்ள ராமபிரான் கல்யாண ராமனாகக் காட்சி தருதலால், திருமணம் கைகூடும் தலமாகவும், பிரார்த்தனைத்தலமாகவும் விளங்குகிறது. இரண்டு திருத்தலங்களும் ஒரே திவ்விய தேசமாகக் கருதப்படுகிறது. 

ஆயுள்பலம் அதிகரிக்க வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல குழந்தைகள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ குடும்பப் பிரச்சனைகள் மறைந்துபோக, திருமணத்தடைகள் நீங்க திருநீர் மலைக்கு வந்து பெருமாளைத்தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும் அவர்களுக்கு பஞ்சகிரகங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும்.  

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநீர்மலை. இந்த மலையை அணிதிகழும் சோலை அணிநீர்மலை என்கிறார் பூதத்தாழ்வார். அத்தகைய வசதி அக்காலத்தில் இல்லாததால், நீர் சூழ்ந்த இத்தலத்துப் பெருமானை தரிசிக்க திருமங்கை ஆழ்வார் ஆறுமாத காலம் காத்திருந்தார்.

திருநறைïரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே சிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை இங்கே ஓரிடத்தில் காணலாம். இங்கே நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மமூர்த்தி, கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமான், நடந்த கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் காணப்படுகிறார். இனி ஆலயத்தின் தல வரலாறு பார்ப்போம்.

தல வரலாறு.........

ராம கதையை எழுதிய வால்மீகி முனிவர் இத்தலத்தில் சயனித்திருந்த அரங்கநாதரையும், இருந்த கோலத்தில் சாந்த ரூபியாக இருகரங்களுடனிருந்த நரசிம்மரையும், நடந்த கோலத்தில் திருவிக்ரமனையும் பார்த்தார். ஆமாம் அவருடைய ராமன் எங்கே? மலையை விட்டுத் துயரத்துடன் இறங்கினார்.

முனிவரின் துயரைத் துடைக்க இத்தலத்து எம்பிரான்களே வால்மீகியின் சக்கரவர்த்தித் திருமகனாகக் காட்சியளித்தனர். ரங்கநாதரே ராமனாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், லட்சுமிதேவி ஜானகியாகவும் கருடன் அனுமான் என்று ரம்மியமான நீர் வண்ணப் பெருமாள் ரூபத்தில் காட்சி கொடுத்தனர். மூவர் நால்வராயினர். தம்முடைய திருவாலியில் உள்ள உருவத்திலேயே சாந்தமூர்த்தி நரசிம்மரை திருமங்கையாழ்வார் கண்டாராம்.

போக்குவரத்து வசதி......

சென்னை பல்லாவரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
 
நீர்' பெருமாள்: ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு "நீலவண்ணப்பெருமாள்' என்ற பெயரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.
ஒரே தலத்தில் நான்கு பெருமாள்: இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.
http://photos.wikimapia.org/p/00/01/00/47/96_big.jpg குழந்தை நரசிம்மர்: நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை "பால நரசிம்மர்' என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம். 
http://photos.wikimapia.org/p/00/01/00/47/97_big.jpg கோபுரம் ராமருக்கு... கொடிமரம் நீர்வண்ணருக்கு...: கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளது. வால்மீகிக்காக ராமராகவும், நீர்வண்ணப்பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, "அணிமாமலர்மங்கை' எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். பொதுவாக பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
இரட்டை திருவிழா: மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர், ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கிறது.கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும்  ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.
குளம் ஒன்று: தீர்த்தம் நான்கு: கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல், இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களில் இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்த நிகழ்ச்சியை, "முக்கோட்டி துவாதசி' என்று அழைக்கிறார்கள்.
பெருமாள் கோயில் கிரிவலம்: தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. இவை, "ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்' எனப்படும். இதில் திருநீர்மலையும் ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிற தலங்கள் ஆகும். மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்கிறது.இம்மலைக்கு "தோயாத்ரிமலை' என்ற பெயரும் உண்டு. தோயம் என்றால் "பால்' எனப்பொருள். சுவாமி தோயகிரி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது இவருக்கு புஷ்பாங்கி அலங்காரம் செய்கின்றனர்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzJ2RMTQWf2D9tlW5Obi6jY9SsSUC5_Pf19bIosIPkAoLEsc_QnlO6yy9xIjdRkc8LcnOX9IqzBTEfIKAEYXlovMbSaskMNyVCGHuzD-T1IfcDAVyZ4Cu905Gzj3drANVEPX6kk4RMxp3F/s1600/ranganathar+thiruneermalai.jpg
 ஆலயத் தகவல்களுக்கு முன்னால் சில அடிப்படைத் தகவல்கள். "நாராயணனே இறைவன்" என்று பாடிக் களித்த ஆழ்வார்கள் 12 பேர். ஆழ்வார்களால் குறைந்தது ஒரு பாடலாவது பாடப்பெற்ற ஆலயங்களே 108 திருத்தலங்கள் என்னும் சிறப்பைப் பெறுகின்றன.வைணவத் திருத்தலங்கள் (திவ்ய தேசங்கள்) 108. சோழ நாடு - 40, பாண்டிய நாடு - 18, நடு நாடு - 2, தொண்டை நாடு - 22, வட நாடு - 11, மலைநாடு - 13, நில உலகில் பார்க்க முடியாத தலங்கள் - 2.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-ZlIkzaMtvWLnnGobVwxlHNsykX2NnxYBrfiHuq3Zp6DGVD0tVEPeCsVW4ZZo8lKnZht6EpSOJGSF5IeuthpDKS1dCuclgsycUoz9r6f_DLKvlWUKWILqC8g4wYX0X3wwQGdeoXsyFuqF/s400/ThiruNeer_Malai.JPG
இந்த ஆலயத்தைப் பாடியவர்கள், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார். நூற்றி எட்டில் இது 91 ஆவது திருத்தலம். ஸ்ரீரங்கநாதப் பெருமாள் என்ற பெயர் இருந்தாலும் உள்ளூர் மக்களால் நீர்வண்ணப் பெருமாள் கோயில் என்றே பரவலாக அறியப்படுகிறது.
https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/549932_198787723598131_1828427974_n.jpg

நாராயணனின் சிலை வடிவத்தை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று குறிப்பிடுவார்கள். இங்கு, நான்கு நிலைகளிலும் பெருமாளைத் தரிசிக்கலாம். 
நீர்வண்ணன், (நீலமுகில்வண்ணன்), அணிமாமலர் மங்கை - நின்ற திருக்கோலம்.
சாந்த நரசிம்மன் - வீற்று இருந்த திருக்கோலம்.
ரங்கநாதன், ஸ்ரீதேவி, பூதேவி - கிடந்த திருக்கோலம்.
உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமன்) - நடந்த திருக்கோலம். 

https://lh3.googleusercontent.com/_goo3xXzQh5o/TafrH_xAlwI/AAAAAAAAHn0/93Ho94j7b8Y/s512/063.jpg
ஆலயத்தின் அமைப்பும், சிறப்பும்: நீரும், மலையும், மரங்களும் சூழ்ந்திருப்பதால் ரியல் எஸ்டேட்காரர்களையும் மீறி ஆலயம் பொலிவாகக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் முகப்பாக அமைந்துள்ள காருண்ய தீர்த்தம் நிரம்பிய குளமும், நீராழி மண்டபமும், வசந்த மண்டபமும் அடுத்தடுத்து நாம் அனுபவிக்கப் போகும் அழகுகளுக்கான முன்னுரை!
http://www.tamil.dhamma.org/images/routemap_tamil.jpg
மலை அடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாள், ரங்கநாதர், ஆண்டாள் சன்னதிகள்.12 ஆழ்வார்களின் சிலைகள் எழிலானவை. வெளிச்சுற்றில் அணிமாமலர் மங்கைத் தாயார், ஸ்ரீராமர் சன்னதிகள்.

ஆடுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு 200 படிகள் மேலே சென்றால் ரங்கநாதன், ரங்கநாயகி, சாந்த நரசிம்மன் மற்றும் உலகளந்த பெருமாள் சன்னதிகளைக் காணலாம்.

சிறப்புகள்:

மனித முயற்சிகளின்றி (ஸ்வயம் வ்யக்த) தானாக உருவான தலம்.


நான்கு வேதங்களின் பொருளாக நான்கு நிலைகளிலும் இறைவனைத் தரிசிக்கலாம்.

இங்கு தரிசனம் செய்தால் திருமலை, ஸ்ரீரங்கம், திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களில் உள்ள கடவுள்களைக் கண்டதற்குச் சமம். (குறிப்பிட்ட ஆலயங்களுக்குச் செல்ல வேண்டாம் என்பது பொருளில்லை!)

நாம் இங்கு ஒரு நாள் செய்யும் புண்ணிய செயல்கள் பிற தலங்களில் பல வருடங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.

உலக இச்சைகளில் உழலும் உயிர்களுக்கு முக்தி அளிக்கும் தலம். (வளைவுகளில் விரையும் பேருந்துகள் முக்தியை நினைவு படுத்துகின்றன!)

பாடல்:

அன்றாயர்    குலக்கொடி  யோடு
             அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
               உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை
               தடந்திகழ் கோவல் நகர்
 நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்
                மாமலையாவது நீர்மலையே. 
                                                                 திருமங்கை ஆழ்வார்.

2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் காத்திருந்து பார்த்திருக்கிறார். அவ்வளவு மெய்வருத்தம் நமக்கு இருக்காது. ஆலயத்தின் வாசலுக்கே பேருந்துகள் செல்கின்றன. இயற்கைப் பின்னணிக்காகவே (ஆன்மீக நாட்டமில்லாதவர்களும்) காண வேண்டிய ஆலயம்! 

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் அகிலவல்லித் தாயார் கோயில் - கோ.ஜெயக்குமார்.

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் அகிலவல்லித் தாயார் - கோ.ஜெயக்குமார்.

திருவிடந்தை திவ்ய தேசம் சென்னையிலிருந்து கோவளம் வழியாக மகாபலிபுரம் செல்லும் சாலையில் 43 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மூலவர், லட்சுமி வராகப் பெருமாள், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். 
படிமம்:Thiruvidanthai nithyakalyana permal temple entrance arch.jpg
 மூலவர்: நித்ய கல்யாணப்பெருமாள்
தாயார்: அகிலவல்லித் தாயார்
         அமைவிடம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

உற்சவர் பெயர் நித்ய கல்யாணப்பெருமாள், தாயார் கோமளவல்லி நாச்சியார் இவ்விருவர் திருமேனியிலும் தாடையில் பொட்டு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. ஆண்டாள், ரங்கநாதர், ரங்கநாயகி ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் இருக்கின்றன. 

பெருமாள் நின்ற கோலத்தில் 9 அடி உயரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே மூலவர் வராக ரூபமாக காட்சித்தருகிறார். 

பெருமாள் வலக்கரத்தில் சக்கரமும் இடக்கரத்தில் சங்கும், கீழ் இரு கைகளில் இடக்கை பூதேவியின் திருவடிகளைத் தூக்கியும் வலக்கையில் அணைத்த கோலம் கொண்டு, இடக்காலை ஆதிசேடன் தலை மீது வைத்துக் கொண்டும் வலக்கால் பூமியின் மீது வைத்தும் தேவியை நோக்கியவாறு வராகத் திருமுகத்தோடு அருள்பாளிக்கிறார். 
http://farm5.staticflickr.com/4040/4359730992_d748669a54_z.jpg?zz=1
இங்கு ஆண்டாள், ரங்கநாதர், ரங்கநாயகி, கருடன் ஆகிய சந்நிதிகள் உள்ளன. பலி என்னும் அசுர மன்னனும் காலவமுனிவர், மார்க்கண்டேயர் ஆகியவர்களும் பெருமாளைச் வணங்கி பேறுபெற்ற தலம். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr1qM5skm3ENGB19VxCDYqv9CfK7OIY2LvndS5Dl2jfyho1Rzh-OEbPrINCl4Ik1uo8Qi9Zpg71MITI2ftSVukcJDfa3SW_lTUneAzWpWMfqKBKM_OWhWSLs-TZH0uamK7HisifQVfknw/s640/100_2375.JPG
காலவ முனிவரின் 360 பெண்களையும் ஒரே கன்னிகையாக்கி மடியில் வைத்துக் கொண்டு 360 கன்னிகைகளை 360 நாள் திருமணம் செய்து கொண்டு காட்சியளிப்பதால் இறைவனுக்கு நித்திய கல்யாணப் பெருமாள் என்னும் பெயர் ஏற்பட்டது. 
http://thechennai.files.wordpress.com/2011/03/nithyakalyanaperumal.jpg
இத்தலம், திரு இட எந்தை- திருவிடந்தை எனவும், கல்யாணபுரி எனவும் பெயர் பெற்றது. திருமணம் வேண்டுவோர் இப்பெருமாளைத் தரிசித்தால் ஓராண்டில் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர்.
 
மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது.
 
 திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஓரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.ணம் கைகூடும் என்பது ஐதீகம். எனவே, இது ஒரு பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது.
 http://www.tamilhindu.com/wp-content/uploads/perumal1.jpg
திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர். பலி மறுத்து விட்டான். இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர்.
 
அரக்கர்களுக்காக தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்க பெருமாளை குறித்து இத்தலத்தில் தவமிருந்தான். தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராஹ ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4grsuWhi25ZWLFnTwSXekWg00MYBd9MkRemcxpnHhzRYoBhH_8LB49BWId2Va8zTmxFYLQsMtFfsJyHzY8ve_2UnyxcV3YUwLwVOOvIx4fF1eTkEhR1mjqi5ocnoKMe_AKiPDpF5MVQg/s400/pg23.jpg

தினமும் திருமணம்: ஒருமுறை குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல தவம் இருந்தனர். குனி மட்டும் சொர்க்கம் சென்றார். அங்கு வந்த நாரதர் அந்தப் பெண்ணிடம்,""நீ திருமணமாகதாவள். எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொல்லி அங்கிருந்த பிற முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.
 
 காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டி தவமிருந்தார். நாராயணன் வரவில்லை. ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான். திவ்ய தேச யாத்திரைக்காக வந்ததாக கூறினான்.
 
அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே, தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார். அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான். கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான்.
 
அது வேறு யாருமல்ல. வராஹமூர்த்தி வடிவில் வந்த நாராயணன். அவர் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது இடப்பக்கத்தில் வைத்து கொண்டு சேவை சாதித்தார். திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன படியால் இத்லதலம் திருவிடவெந்தை எனப்பட்டது. இது காலப்போக்கில் மருவி திருவிடந்தை ஆனது.
 லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள்.
 
கைகளை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.
கோவில் மூலஸ்தானத்தில் பூமாதேவியின் அம்சமான அகிலவல்லி நாச்சியார் கோவில் கொண்டிருக்கிறார். மூலவராக ஆதிராகவப் பெருமாள் திருக்கல்யாண அவதாரத்தில் பூமாதேவியை தன் இடப்பாகத்தில் ஏந்தி மூர்த்தியாக அருள்பாலிக் கிறார். இவரை நித்ய கல்யாணப் பெருமாள் என்கிறார்கள். லட்சுமி சமேதராக காட்சி தரும் வராக மூர்த்தியை வழிபட்டால் திருமணத்தடை விலகி, சீக்கிரமாக திருணம் நடக்கும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனைக்கு செல்லும் போது இரண்டு மாலை வாங்கி செல்ல வேண்டும். ஒன்றை சாமிக்கு அர்ச்சனை செய்து, மற்றொன்றை நமக்குத் தருவார்கள். அந்த மாலையைப் பாதுகாப்பாக வைத்து, கல்யாணம் நடந்ததும் தம்பதியராக மீண்டும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். மறக்காமல் மாலையையும் எடுத்துச் செல்ல வேண்டும். அந்த பழைய மாலையை கோவில் பிரகாரத்தில் இருக்கும் மரத்தில் கட்டிவிட வேண்டும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPzTiJpHbj8OB_gN5NokW1XiN1H3q6LIpd_qjVtrNsqCQRy7G7_HFyJ4cgp1-HUf7Q9OED7jzoBdXFvOtLocMgcuwZLi8mq2yM0FM2J8wWMi8ov9RmPsTCfxiI-Lk2w6d0tfXPVUYxbuR-/s400/Nithya+Kalyana+Perumal.jpg
திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும் என முழு நம்பிக்கையுடன் பக்தர்கள் கூறுகிறார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8x8jEI8IyvWcf1BDaQawfb4nogF4oyB_7fobmWYBWK80M6OgqH0vvSL49n1Xf49KyQoJ53QNOGWuPRn0AuXitLpymNBjW5sjzhesLCmleJn4qvnHcy46TYhMyZpFJKq-RqmFWwpiLazE/s640/100_2381.JPG
ஆதிசேஷன் தன் பத்தினியுடன் பெருமாளின் காலடியில் சேவை சாதிப்ப தால், ராகு- கேது தோஷ நிவர்த்தி தலமாகவும்; ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் தேவியருடன் காட்சி யளிப்பதால் சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது.
http://mw2.google.com/mw-panoramio/photos/medium/88468319.jpg
இங்குள்ள பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர் வந்த காரணத்தை தல வரலாறு சுவைபடக் கூறுகிறது.
http://holyindia.org/templephotos/thiruvidanthai_temple.jpg
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் வீடுபேறு அடையவே, அவரைப் போலவே வீடுபேறு அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம், "திருமணம் செய்து கொள்ளாமல் வீடுபேறு அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். எல்லாரும் மறுத்துவிட, காலவ முனிவர் அவள்மீது இரக்கம் கொண்டு அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaPjGWgsp8kEaOV9Tvmd8xw-i2Sv19x7cbdlMB0JJ2iAz5j-8vNTcd73-INif5gsYti_-nxBmjCkD5hYjrf8hObrYQ8aick95cWgPFwMPSWP9VSf3oU9ZrQwxpg7_vyOUknZetyt_uSGnf/s400/DSC09203.JPG
360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார் காலவமுனிவர். காலம்தான் யாருக் காகவும் காத்திருப்பதில்லையே. பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார் கள்.
 இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர்.
http://nammachennai.in/img/November2012/689d6252-c095-4d4b-bbed-6f856b148e52-mamallapuram2.jpg
சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். காலவமுனிவரும் தன் பெண்களுடன் திருவிடந்தை வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் முனிவரின் வேண்டுகோளை ஏற்று, பிரம்மச் சாரியாக வந்து நாள்தோறும் முனிவருடைய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, 360-ஆம் நாள் தான் அதுவரை கல்யாணம் செய்து கொண்ட அனைத்துப் பெண்களையும் ஒருவராக்கி "அகிலவல்லி' என்னும் பெயரைச் சூட்டினார். தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார்.
http://ww.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-Daily-News-Paper_41379511357.jpg
பெருமாள் தினமும் திருமணம் செய்து கொண்டதால் பெருமாள் நித்ய கல்யாணப் பெருமாள் என்றும்; இந்த தலம் "நித்ய கல்யாணபுரி' என்றும் அழைக்கப்படுகிறது
 ஸ்ரீஆதிவராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதை யிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட் டுள்ளது. அதை அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனர், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன. அதைக் கடந்து சென்றால் இராஜகோபுரம், பலிபீடம், கொடிக் கம்பத்தைக் காணலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc_MJTr06sQ4NYKnfVjVXLAtLH66rDR4xNgetaS4iDiQ-rIf989mC6rSwcA4DG-cQbFWnALK33ClY3TfhSKb8pPwNzQsDrtnLCmQSNF3aQnWRGfHBO8Yk5KB85Y45J-kYIXEm6qvNDM8A/s640/100_3495.JPG
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNlrUS5-G21c2Y9NVC5nAnBAhhgmE6UZhrfwWM2L_vZ_u33FfIwreGz6-UDI9DGvuDOdBJXMppT4dycprZlHvpOs7n3_X5fqtt-X0RSV8Nq44BPIeDlSQtRl2PwHHQK436Ht_1xrIvQVc/s640/100B2300.JPG
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ர கங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.
https://mw2.google.com/mw-panoramio/photos/medium/88469127.jpg
ஆண்டாளும் எழிற்கோலத் தில் காட்சி தருகிறார். ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார் சந்நிதியும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர் களை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும் என்கிறார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSKN0SIE1aTrSAfwA1K-DvZ5WXWAY59qYEXbx9Jxdfi82Qpo9a1BYwK4Czv4oX25zroqPTZ2gphqHOvhRgAoG_vl6W4oclWurq7GjyAfj1rfAxOqC4JGs3aP6CPnJ6U-fjd9K4EP9JdEFg/s400/nithiya+kalyana+perumal+tirukkalyanam.jpg
வைகானச ஆகம விதிகளின் படி தினமும் நான்கு கால பூஜைகள் நடத்தப் பெறுகின் றன. தல விருட்சமாக புன்னை மரமும்; தல புஷ்பமாக அரளிப் பூவின் வகையைச் சேர்ந்த கஸ்தூரியும் விளங்குகின்றன.
http://www.sirukathaigal.com/wp-content/uploads/2013/01/VirumbiKetaval.jpg
விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஒன்று விரும்பும் ஆணோ, பெண்ணோ- இங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி விட்டு, மிகவும் பயபக்தியுடன் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் இரண்டு கஸ்தூரி மாலைகளுடன் தன் பெயரில் அர்ச்சனைச் சீட்டு வாங்கி அர்ச் சனை செய்துவிட்டு, அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை ஒன்பது முறை வலம் வர வேண்டும். 
 
பிறகு கொடி மரத்தின் அருகில் வணங்கிவிட்டு, அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திர மாக சுவரில் மாட்டி வைக்க வேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சகிதமாக பழைய மாலை யுடன் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikLFsn4z_MoCIMFDqwrOulFPRxYlNJ2f5Ozt0jYC9GeFL48z30IeRr77a-BS0sUvVbNOfYTbOneutqBoS1EEnTdLjxDS1TYhGSWOX7gZuXrOOk3Y0d47WKxZihMRQaOB0FYryvLvJ1i3A/s640/100_2390.JPG
இங்கு சித்திரைப் பெருவிழா மிகவும் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி யில் வசந்த உற்சவமும், ஆனி மாதத்தில் கருட சேவையும், ஆடிப் பூரத்தில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடிக்கு திருக்கல்யாண உற்சவமும், புரட் டாசியில் நவராத்திரி உற்சவமும் விமரிசையாக நடத்தப்படுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட் களிலும் கோமளவல்லித் தாயாருக்கு வெவ்வேறு விதமாக அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVOK2NNHY9wn4ay1ERk5ioc-aDSakDpz2_f6deSl3cu9csyFAonqKLvFz2NMTF7OZAHkPL4dpqG-fqZTgOo0QjNIhiKdOR29YRDbwO0LTGeo6cSrVFw74QzTBBwYomeDpNfcp_XSmVJCw/s320/Azhagiya+Manavala+Perumal+Temple2.jpg
பங்குனி மாத உத்திர நட்சத் திரத்தில் பெருமாளுக்கு திருக் கல்யாண உற்சவம் நடைபெறு கிறது.
http://holyindia.org/templephotos/thiruvidanthai_temple.jpg
உற்சவ காலங்களில் ஸ்ரீஆதி வராகர் தேவியுடன் கோவிலுக்கு வெளியே மின்விளக்கு அலங் காரத்தில் சேவை சாதிக்கிறார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaPjGWgsp8kEaOV9Tvmd8xw-i2Sv19x7cbdlMB0JJ2iAz5j-8vNTcd73-INif5gsYti_-nxBmjCkD5hYjrf8hObrYQ8aick95cWgPFwMPSWP9VSf3oU9ZrQwxpg7_vyOUknZetyt_uSGnf/s400/DSC09203.JPG
தினசரி காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை யிலும்; மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
[stotram01.jpg]
விரைவில் திருமணப் பேறை அருளும் திருவிடந்தை அருள்மிகு நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோவிலை நீங்களும் சென்று தரிசியுங்கள்.
http://www.dinakaran.com/data1/DAanmeegam/Tamil-Daily-News-Paper_25310480595.jpg
சென்னை அடையாரிலிருந்து எண். 588, தியாகராய நகரிலிருந்து எண். 599, ஜி19, பிராட்வே யிலிருந்து எண். பிபி19, கோயம் பேட்டிலிருந்து தடம் எண்கள். 118, 118சி, 188டி, 188கே உள்ளிட்ட பேருந்துகள் திருவிடந்தை செல்கின்றனர்.
http://1.bp.blogspot.com/-7TVc0W4av4Q/TdOWX4-9dAI/AAAAAAAABHU/Gd77pVVjLDM/s1600/SRIRANGANATHAR.jpg
மாமல்லபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வழியில் உள்ள இந்த திருக்கோவிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து விட்டுச் செல்லுங்கள்.