வெள்ளி, 19 ஜூலை, 2013

தமிழிச்சிறுகதை மன்னன்" புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள் - கோ.ஜெயக்குமார்.

தமிழிச்சிறுகதை மன்னன்" புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள் - கோ.ஜெயக்குமார்.
"சிறுகதை மன்னன்" என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.
http://3.bp.blogspot.com/_7D-hvmm-KN0/TTNbMf3b-LI/AAAAAAAAT1k/GscpEvZddk4/s200/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2585%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588.JPG
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.
http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S4Vq7I5kvSI/AAAAAAAAFuM/ExyHrH6j7Do/pu.pi_thumb%5B5%5D.gif?imgmax=800
இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது. இந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.

புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார். அதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-bKTq0L_aULrrlJRHZ1LURuzFwgC_P6HmJw5bwAD3SJ9k3-maD6PYdI7jbL2-F5sowQmnO1eQIzK04UnNnF6Rnn8sIbMQDtxqUoJ7k6rYZOEl2o9QOerE4MmL-aid4z9R48o4uK4DnzWw/s320/puthumai+pithan
புதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPUsxmqyOcUaTYnALLxwQck4uXOq2hSwdHuzM82EjahXBO53M3KdAKp0B-VBR5pMpvpVnOi26c3vOYQq5macCYTsgdAoN8s4jF0CAuRjGM28zvm4ezdNfUjpfWbaf3-HgtiZIU3d5eV3o/s1600/v130PuthumaiPithan.jpg
சொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1wtyqY_49j83-R69OzrYe3trtPKBUEffhT7AZLhWeWZRB61KmwlPvTOYQ4cVhO1g73f9Dvwg9SxT6iClhfBMHFfKAEL7d89P9D3aiW6nbtp72fWWSbe5Vd5INZO18y5_KlLp2kvhlytg/s400/puthumai+pithan.jpg
புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் "பி.ஏ" தேறினார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbOYI7fynDSfqGewtLS9r0NbhUMXRbwTk4GyO1dEL_DBnmmHaylC1nv2ZaDZjVQWnyy-mqgmmmRAisd21RRK4Zl414US5Hu6v994ykGlgHD4vo_jgl2UtL7Aa1hWhvwRyhcy5ds_VXHSSM/s320/Puthumaipithan.jpg
மகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.

புதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன.

இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் "மணிக்கொடி" என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், "வ.ரா" ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

"மணிக்கொடி"யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் "காந்தி", சங்கு சுப்பிரமணியத்தின் "சுதந்திரச் சங்கு" ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை "வ.ரா"வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக