ஞாயிறு, 14 ஜூலை, 2013

வரலாற்றில் செஞ்சி கோட்டை - ராஜா தேசிங்கு -வரலார்றூம் பின்னணியும் - கோ.ஜெயக்குமார்.

 வரலாற்றில் செஞ்சி கோட்டை - ராஜா தேசிங்கு -வரலார்றூம் பின்னணியும் - கோ.ஜெயக்குமார்.


செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு.
மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு.
ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.
செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.

 தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு , மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். சென்னை,வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி , சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கபுரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

ஆடு மேய்க்கும் ஒருவர் அந்த வழியே சென்ற முனிவருக்கு பசிக்கு உணவளித்ததால் இங்கே புதையல் உள்ளது என செஞ்சிமலைப்பகுதியை காட்டி சென்றார் அதனை எடுத்த ஆடு மேய்ப்பவர் அந்த பணத்தைக் கொண்டு கட்டிய கோட்டை தான் செஞ்சிக்கோட்டை என்பார்கள்.புதையல் பணத்தில் கோட்டை கட்டியவர் பெயர் ஆனந்த கோன்,அவ்ரது மகன் கிருஷ்ணக் கோன் தான் கிருஷ்ண கிரி உருவாக காரணமாக இருந்தார் பின்னாளில்.

பின்னாளில் செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும் , கதைகளும் உண்டு.

ராஜ தேசிங்கின் வரலாறைப் பார்ப்போம், மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெரிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக , தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப்.இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சாமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார்.அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் மகமூத் கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.

மகமூத் கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப் சிங் , ராஜபுத்திர வீரர் அவரது மகன் தான் ராஜ தேசிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்க சீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்ப்பட்டதால் சொருப் சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து ,அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப்.இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷா ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார்.

ஷா ஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப் சிங்க்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜா தேசிங்கும் சென்றான்.தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான்.வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான் .அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). அவர் சமைந்த நேரம் சரியான நேரம் இல்லை என்பதால் ஆறு மாதக்காலம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்ககூடது என தடை விதித்து விட்டார் பெண்ணின் தந்தை.முகம் பார்க்காமலேயே தான் திருமணம் நடந்து அந்தக்கால காதல் கோட்டை!


தமிழ் மக்களின் வாழ்க்கை இயல்புகளும் உணர்வோட்டங்களும் இலக்கியப் படிவங்களாகத் தமிழகமெங்கும் காலங்காலமாகப் படிந்து கிடக்கின்றன. மக்களின் பண்பாட்டைப் புலப்படுத்தும் காலக் கண்ணாடிகளாக அவை விளங்குகின்றன. இலக்கியச் செல்வங்கள் பலவகையான அமைப்பில் உருவாக்கப்பெற்றுப் பல இடங்களில சிதறிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றே கதைப்பாடல்.
மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விழாக்கள், வரலாற்றுச் செய்திகள், பண்பாட்டுத் தன்மைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே கதைப்பாடல்கள் எழுதப்படுகின்றன.
நல்லதங்காள் கதை, சின்னதம்பி கதை, மருதுபாண்டியர் கதை, கட்டபொம்மன் கதை, அல்லி அரசாணி மாலை, தேசிங்குராசன் கதை போன்ற கதைப் பாடல்களில் தேசிங்குராசன் கதைப் பாடல் வரலாற்றுச் சிறப்பு பெற்ற வீரர்களில் வரலாற்றைக் கதையாகக் கூறுகின்ற பகுதியிலே அமைந்துள்ளது. இக்கட்டுரையில் தேசிங்கு ராசன் கதைப்பாடல்கள் மூலமாக அவனுடைய வீரம், போர் முறை, பக்தி போன்றவற்றைப் பற்றி விளக்கப்படுகிறது.
கதைச்சுருக்கம்
நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் முகலாயப் பேரரசை எதிர்த்து செஞ்சியில் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவன் ஆட்சி புரிந்தது பத்தே மாதங்கள் தாம். எனினும் நீண்ட நாட்கள் அரசாண்டவனைப் போல் பேரும் புகழும் அவனுக்கு வாய்த்தன. தேசிங்கு பெயர் தெரியாதவர் எவரும் இல்லை எனலாம். ஒரு லட்சம் படைவீரர்களையும் நானூறு பீரங்கிகளையும் கொண்ட முகலாயர் படையை, முன்னூறு குதிரை வீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு, முகலாயப் படையை முற்றிலுமாக வென்று, இறுதியாகத் தானும் உயிர் நீத்தான். எதிரிகளின் கடல் போன்ற படையைக் கண்டு அஞ்சாத வீரன் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலை வணங்குகிறது.
இலக்கியத்தின் பல சுவைகளில் ஒன்றான வீரச் சுவையை விளக்கிக் காட்டவே புகழேந்திப் புலவர் இக்கதைப் பாடலை இயற்றினார் எனலாம்.
தேசிங்கின் இளமை வீரம்
டில்லியை ஆட்சி புரிந்த அரசனுக்கு கொங்குப் பக்கிரி என்பவன் பரிசாகக் கொடுத்த குதிரையின் பெருமையை கூறுவதன் மூலமாகத் தேசிங்கின் வீரத்தை அறியலாம்.
"தெய்வ வரத்தினால் பிறந்த பிள்ளை வந்து ஏறுவேணும்
வரத்தினால் பிறந்த பிள்ளை வந்து ஏறவேணும்
பூமிபாரம் தீர்க்கவந்தவன் இப்புரவி ஏறவேணும்
தேவரடியிற் பிறந்த பிள்ளை தேசியேற வேணும்"
என்று அக்குதிரையை அடக்கப் போகும் வீரனின் சிறப்பைக் கூறும் வழியாக தேசிங்கு ராசனின் ஆற்றல், சிறப்பு கூறப்படுகின்றது.
"குதிரை களைத்த சப்தத்திலே கொப்பென்று விழுந்தார்கள்
அண்ட மிடிந்து விழுந்தாற்போல அலறி விழுந்தார்கள்
கோட்டையிடித்து விழுந்தாற்போலக் குப்புற விழுந்தார்கள்" !
என்று அக்குதிரையை அடக்க வந்தவர்களின் நிலையைப் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.
இத்தகைய முரட்டுக் குதிரையை அடக்கப் போகும் பாலகன் தேசிங்கு எத்தகையவன் என்றால்,
"பாலன்பிறந்த மூன்றாம் மாதம் பதைத்து விழுந்தானாம்
குழந்தைபிறந்த ஏழாம்மாதம் குலுங்கி விழுந்தானாம்
தொட்டிலைவிட்டுக் கீழேயிறங்கித் துள்ளி விழுந்தானாம்
தங்கத் தொட்டியை எட்டியுதைத்துத் தரையில் விழுந்தானாம்"
இவ்வீர பாலகன், குதிரையை அடக்கச் சென்று சிறைப்பட்ட தந்தையை மீட்க தனது ஐந்தாவது வயதில் டில்லி அரசவைக்குச் சென்றான். அவன் அரசவையிலே வந்து நின்றதைக் கண்டவர்கள்,
"நிறைந்த கொலுவில் இருக்கும் துரைகள் சட்டென்று எழுந்தார்கள்
தகத்திலிருக்கும் டில்லித் துரை தானும் எழுந்தானாம்"
குதிரையை அடக்கச் சென்ற தேசிங்கு அக்குதிரை மீது ஏறித் தன் தந்தையை நோக்கி,
"புரவிஏறிச் சவாரி போறேன் பெற்றவரே ஐயா
தப்பித்தவறி வந்தேனேயானால் தழுவிக் கொள்ளுமய்யா
இன்றைக்குஞ்சாவு நாளைக்குஞ்சாவு இருக்குது தலைமேலே
ஒன்றுக்கும் நீ அஞ்சவேண்டாம் உறுதி கொள்ளுமய்யா"
என்று விரிவுரை ஆற்றிச் சென்ற தேசிங்கு வீராதி வீரர்களாலும் அருகில் கூட நெருங்க இயலாத குதிரையை ஐந்து வயதான பாலகனான தேசிங்கு அடக்கினான் என்று உலகோர் போற்றும்படியாக அடக்கினான். இளவயதிலேயே அவன் வீரமுடையவனாக திகழ்ந்தான் என்பதற்கு இது தக்க சான்றாகும்.
பாளையக்காரர்களின் கூற்றின் வாயிலாகத் தேசிங்கின் வீரம்
தேசிங்கு ராசாவிடம் இருந்து திறைப் பணம் பெற்று வர புறப்பட்ட தோன்றமல்லனுக்கு, அவன் செல்லும் வழியில் தேசிங்கின் வீரத்தைப் பற்றிப் பலரும் எடுத்துரைக்கிறார்கள்.
"நானொரு வார்த்தை சொல்லுகின்றேன் கேளும் தோன்றமல்லண்ணா
அவனும் மகா சூரனையா ராசா தேசிங்கு
செஞ்சிக் கோட்டைச் சிப்பாயையா ராசாதேசிங்கு
அவன் கண்ணை உருட்டிப் பார்த்தானானால் சிப்பாய் தேசிங்கு
கால் பலங்களும் கைபலங்களும் கதறியோடுமேதான்
தாறுமாறாய்த் தீர்த்துப் போடுவான் ராஜா தேசிங்கு
சண்டை பண்ணிச் செயிக்கமாட்டாய் தோன்றமல்லண்ணா"
என்று வழிப்போக்கன் கூறக் கேட்ட தோன்றமல்லன். தேசிங்கு முன் செல்ல அஞ்சி நெற்றியிலே நாமம் இட்டு அவன் முன்னே நடுநடுங்கிச் சென்றான். இதன் மூலம் தேசிங்கின் வீரமும் பக்தியும் புலனாகின்றன.
தீச்சகுணங்களை கண்டு அஞ்சாத வீரதேசிங்கு
தேசிங்கு திறைப்பணம் செலுத்த மருத்ததால் அவன்மீது கோபம் கொண்டு அவனை அழிக்க மோவுத்துக்காரன் பெரும்படையோடு வந்தான். அவனை எதிர்த்து போரிடச் சென்ற தேசிங்கு முதலில் அரங்கநாதரை வணங்க சென்றான். அரங்கநாதரை வழிபட்டு நின்றபோது அரங்கநாதரின் மாலை கருகியது. முத்தாரங்கள் கழன்று விழுந்தன. திருவிளக்கு கீழே விழுந்தது. அவர் கண்களில் நீர் வடிந்தது. நெற்றிமணியும் துளிசிமாலையும் அருந்து விழுந்தன. கோபுரம் இடிந்தது. தீச்சகுணங்களைக் கலைக்கண்ட தேசிங்கு ஆண்டவன் மீது கடும்கோபம் கொண்டான். போருக்கு நான் அஞ்சேன். போர் முகத்தில் எனக்கு வீரச்சாவு அளிப்பாயாக என வேண்டிப் புரவி ஏறினான்.
இந்நிகழ்ச்சியின் மூலம் ஆண்டவனே வந்து தடுத்தாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டாத சுத்த வீரன் தேசிங்கு என்பதை அறியமுடிகிறது.
பெரும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சாத தேசிங்கு
தேசிங்கின் படையின் பலத்தை கண்டு பங்காரு நாயக்கன் நவாபின் உத்தாரம் பெற்று ஏறி நீரினை ஆற்றிலே இணைத்தான். இதனால் ஆற்றிலே பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனைக் கண்ட வீர தேசிங்கு தன் படைவீரர்களை நோக்கி
பாலூஞ்சோறும் தின்கிறவனனால் செஞ்சிக்குப் போங்களடா
ரத்தச்சோறு தின்கிறவனனால் என்பின்னே வாங்களடா
போர்களத்தில் செத்தோமானால் புகழும் கீர்த்தியுமுண்டு
இரணகளத்தில் செத்தோமானால் நல்ல பதவியுண்டு
சாவுக்கென்று பயப்படவேண்டாம் சமேதாருமாரே!
சல்தி சல்தி வாருமென்றான் ராசாதேசிங்கு.
என்று வீரவுரை ஆற்றி வீரர்களை உற்சாகப்படுத்தி போர்மேற்கொள்ள செய்தவன் மூலம் எவருக்கும் அஞ்சாத தேசிங்கின் வீரம் புலனாகிறது.
மாவீரன் தேசிங்கு
ஆற்காடு நவாபை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டான் தேசிங்கு. போர் கடுமையாகியது. ஒவ்வொரு பாளையக்காரனையும் தேசிங்கு கொன்றான். தேசிங்கு கரகரவென்று கத்தியைச் சுழற்றினான். தலைகள் பந்துகளாய் நாற்புறமாய் உருண்டன. நவாபும் அவன் படைகளும் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டனர். தேசிங்கு படையில் அவனைத் தவிர அனைவரும் மாண்டனர். எதிர்த்துப் போரிட எவருமில்லாத நிலையில் தேசிங்கு தான் மட்டும் தனியனாய் நாடு திரும்ப விரும்பவில்லை. ஆண்டவனை வணங்கிவிட்டு மார்பை விரித்துக் கீழே படுத்தான். ஆகாயத்தில் கத்தியைத் தூக்கிப் போட்டான். அது மார்பில் வந்து வீழ்ந்தது. தேசிங்கு உயிர் நீத்தான்.
இந்த இறுதி முடிவு வீரத்திற்கு சான்றாக முடிகிறது. எதிர்பாரின்மையால் வீரத்தை வெளிப்படுத்த இனி வழியில்லை. உடன் வந்தோர் அனைவரும் இறந்துவிட்டமையால் தனியே திரும்பவும் மான உணர்வு இடந்தரவில்லை. ஆதலில் நெஞ்சிலே வாளைப் பாய்ச்சிக் கொண்டு வீர மரணம் அடைந்த தேசிங்கு இறப்பிலும் தன் வீரத்தை வெளிப்படுத்திவிட்டான்.
முடிவுரை
சுருங்கக் கூறின், வீரச்சுவையை விண்டுரைக்கும் கட்டபொம்மன் கதைப்பாடல்கள், கான்சாகிபு சண்டை, புலித்தேவன் கதை, மருதுபாண்டியர் கதை முதலிய கதைப்பாடல்கள் யாவற்றிலும் தேசிங்கு ராசன் கதை, காட்சிக்குகாட்சி உயர்ந்து நிற்கிறது எனலாம். ஒவ்வொரு வரியிலும், வரிகளில் அமைந்த சொற்களிலும் எழுத்துக்களிலும் கூட வீரச்சுவை சொட்டச் சொட்ட ஆசிரியர் பாடியுள்ளார். நூலினுள் எங்கு நோக்கினும் ஆசிரியர் கையாளும் உத்திகள் அனைத்தும் தேசிங்கின் வீரத்தை வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. இது ஒரு ஒப்பில்லா வீரகாவியம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
 மிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் மன்​னர்கள் ஆட்சி செய்தபோதும் அவர்​களின் பிரமாண்டமான அரண்மனைகள், கோட்டைகள் எதுவும் இன்று நம்மிடம் இல்லை. படையெடுப்பின்போது எரிக்கப்பட்டும் சிதைக்கப்​பட்டும் அழிந்துபோயின என்கிறார்கள். மதுரை ஒரு காலத்தில் மாபெரும் சுற்றுக்கோட்டைகொண்ட நகரமாக இருந்து இருக்கிறது. அதை, 1840-களில் மாவட்டக் கலெக்டராக வந்த பிளாக்பெர்ன் இடித்துத் தரைமட்டமாக்கி புதிய மதுரையை உருவாக்கினார்.

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகே மாளிகை மேடு என்ற இடத்தில் சோழர்களின் அரண்மனை இருந்ததாக சில அடையாளங்கள் காணப்படுகின்றன. மற்றபடி, வட இந்தியாவில் காணப்படுவது போன்ற கோட்டை கொத்தளங்களை தமிழகத்தில் காண முடியாது. வேலூர் கோட்டையும் செஞ்சிக் கோட்டையும்தான் தமிழக அளவில் பெரிய கோட்டைகள். இவையன்றி திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மனோரா கோட்டை, ஆலம்பரக்கோட்டை, சங்ககிரி கோட்டை, வட்டக்கோட்டை போன்றவை அளவில் சிறிய, சிதைவுற்ற நிலையில் உள்ள கோட்டைகளாகும்.


செஞ்சியும் வேலூரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகள். வேலூர் கோட்டையில்தான் சுதந்திரப் போரின் முதற்புள்ளியான சிப்பாய் எழுச்சி ஏற்பட்டது. செஞ்சி, மாவீரன் சிவாஜி காலத்​தில் இருந்தே வீர வரலாறுகொண்டது. புந்தேலர் இனத்தின் தலைவரான சரூப் சிங்கின் மகன் தேஜ் சிங் என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. அவர்தான் செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜா. தேஜ் சிங் என்ற பெயரைத்தான் தேசிங்கு என்று எளிமையாக மாற்றி​விட்டனர் மக்கள். ஒரு ராஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த மன்னர் தமிழ் மக்களின் மனதில் காவிய நாயகராக விளங்குவது வியக்கத்தக்க ஒன்று.
தேசிங்கு ராஜன் பராக்கிரமத்துடன் செஞ்சியை ஆண்ட கதையைப்பற்றி தேசிங்கு ராஜன் கதைப் பாடல் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அதில் பாதிக்கும் மேல் வரலாற்றோடு தொடர்பு இல்லாத கற்பனை. சுவாரஸ்யத்துக்காக உருவாக்கப்பட்டவை. அதில் ஒன்றுதான் தேசிங்கு ராஜன் டெல்லிக்குப் போய் முரட்டுக் குதிரையை அடக்கி வெற்றிகண்டது. வரலாற்றில் அப்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை.

தேஜ்சிங் எப்படி செஞ்சியின் அரசன் ஆனார் என்பதை அறிந்துகொள்ள, புந்தேலர் இனத்தின் வரலாற்றை முதலில் தெரிந்துகொள்வோம். புத்தேல்கன்ட் என்பது இன்றுள்ள மத்தியப் பிரதேசம். இங்கு வாழ்ந்த ரஜபுத்ரர்களுக்கும் மொகலாயர்களுக்கும் நெடுங்காலமாகவே இணக்கமான உறவு இருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள், கார்வார் ராஜபுத்ரக் குடியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் முதல் தலைநகரம் பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊரிச்சா. இந்த  நகரம் 1531-ல் நிறுவப்பட்டது.

ஒளரங்கசீப் படையெடுப்பின்போது புத்தேலர் இனத்தைச் சேர்ந்த பலரும் படைப் பிரிவில் பணியாற்றினர். சிவாஜியின் மகன் ராஜாராம், மொகலாயர் படையிடம் இருந்து தப்பி செஞ்சியில் தஞ்சம் அடைந்தார். அவனைப் பிடிக்க சுல்பிகர் கானின் தலைமையில் ஒளரங்கசீப் ஒரு படையை அனுப்பி செஞ்சியை முற்றுகையிடச் செய்தார். எட்டு ஆண்டுகள் நடந்த முற்றுகைப் போருக்குப் பிறகு, 1698-ல் செஞ்சி பிடிபட்டது. அதன் பிறகு, செஞ்சிக் கோட்டையின் தலைவராக சரூப் சிங் நியமிக்கப்பட்டார்.

சரூப் சிங்கின் தந்தை நரசிங்க தேவ். இவர், அக்பரின் நண்பர். அரசியல் காரணங்களுக்காக, அக்பரின் ஆன்மிகக் குருவான அபுல்பாசலைக் கொன்றவர் நரசிங்க தேவ். ஒளரங்கசீப் 1707-ல் இறந்தபோது அடுத்து அதிகாரத்தில் யார் அமர்வது என்ற அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்திக்கொண்ட சரூப் சிங், அதுவரை கர்நாடக நவாபுக்குச் செலுத்திவந்த கப்பத் தொகையை நிறுத்திவிட்டார். வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதை உணர்ந்து, அவர்களையும் பகைத்துக்கொண்டார். ஆகவே, அவரது ஆட்சி நெருக்கடிக்கு உள்ளானது.


1714-ம் ஆண்டு சரூப் சிங் இறந்த பிறகு, அவருடையை மகன் தேஜ் சிங் செஞ்சிக் கோட்டையின் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 22. தேஜ் சிங்குக்கு, ரூப் சிங் என்ற இன்னொரு பெயரும் உண்டு. தனது தந்தையின் காலத்தில் வாங்கிய கடனுக்கு அநியாய வட்டி போட்டு மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பித் தர வேண்டும் என்று, ஆற்காடு நவாப் ஆள் அனுப்பினார். தேஜ் சிங் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு அதுவரை ஆற்காடு நவாபுக்குச் செலுத்தி வந்த கப்பத் தொகையை இனிமேல் செலுத்த முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நவாப், லாலா தோடர்மால் தலைமையில் தனது படையை அனுப்பி செஞ்சியில் திடீர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார். தேசிங்கு ராஜா, தானும் போருக்குத் தயாராகி சேத்துப்பட்டில் எதிரியைத் தாக்க முனைந்தார். ஆனால், ஆரணியோடு நவாப் சேர்ந்துகொண்டதால் நிலைமை மாறியது. 1714-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தேவனூர் என்ற இடத்தில் போர் தொடங்கியது. தேசிங்கு ராஜாவின் கை ஓங்கிய நேரத்தில், சுபாங்கி என்பவன் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டதில் தேசிங்கு ராஜா வீர மரணம் அடைந்தார்.

தேசிங்கு இறந்தவுடன் அவனது மனைவியும் உடன்கட்டை ஏறிவிட்டார். அவரது நினைவாகவே இராணிப்பேட்டை என்ற ஊர் உருவாக்கப்பட்டது. தேசிங்கு ராஜனின் சமாதியும் அவனது படைத் தளபதி முகம்மது கானின் சமாதியும் நீலாம்பூண்டி கிராமத்தில் இருக்கின்றன என்கிறார்கள் செஞ்சிவாசிகள்.

கடந்த காலத்தின் நினைவுகளை தனக்குள் புதைத்துக்கொண்டு வலிமை வாய்ந்த செஞ்சிக் கோட்டை இன்றும் கம்பீரமாகவே நிற்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மூன்று மலைகளை ஒருங்கேகொண்டது. அவை, முக்கோண வடிவில் அமைந்து உள்ளன. இதில், ராஜகிரி என்ற மலையின் உயரம் 242 மீட்டர். இது அரண் போன்றது. வடக்கே காணப்படுவது கிருஷ்ணகிரி மலை. தெற்கே இருப்பது சந்திரகிரி மலை. இந்த மூன்று மலைகளையும் இணைத்து சுமார் 60 அடி அகலத்தில் உயரமாக சுவர் கட்டப்பட்டு உள்ளது. இதன் வெளிப் பக்கத்தில் 80 அடி அகலமான ஓர் அகழியும் அமைந்து இருக்கிறது. இந்தக் கோட்டையின் சுற்றளவு ஐந்து மைல்கள். இந்தக் கோட்டைக்குள் பெரிய கோயில், கல் மண்டபம், சிறைக்கூடம், அகலமான குளம், படை வீரர்கள் தங்கும் பகுதி, நெற்களஞ்சியம் போன்றவையும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.கீழ்க்கோட்டைக்குச் செல்ல இரண்டு வாசல்கள் இருக்கின்றன. வடக்கே உள்ள வாசல் வேலூர் வாசல் என்றும், கிழக்கில் உள்ளது புதுச்சேரி வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டில் எந்த வழியாகச் சென்றாலும்,  24 அடி அகலமும் 60 அடி ஆழமும்​கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்ல வேண்டும். மலையின் உச்சியை அடைவதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் கோட்டையில் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. ராஜ கிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. கீழ்க்கோட்டையில் ஒரு பள்ளிவாசலும், வெங்கட்ரமண சுவாமி கோயிலும் இருக்கிறது. கோட்டையில் இருந்து இரண்டரை மைல் தூரத்தில் சிங்கவரம் என்ற ஊர் இருக்கிறது. இங்கே குடைவரைக் கோயில் உள்ளது. செஞ்சிக்கோட்டையை ஆனந்த கோன் என்ற மன்னர் 12-ம் நூற்றாண்டில் கட்டியதாகச் சொல்கின்றனர். விஜயநகரப் பேரரசுக் காலத்தில்தான் இந்தக் கோட்டை முழுமையாக வலிமை பெற்றது. 1464-ம் ஆண்டு செஞ்சியில் வேங்கடபதி நாயக்கர் காலத்தில் முதன்முதலாக நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னால் இதை, பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றி கில்தார் என்ற படைத் தலைவனை செஞ்சிக்குப் பொறுப்பாளராக நியமித்தார்.

செஞ்சிப் பகுதியில் சமணர்கள் அதிகமாக வாழ்ந்து இருக்கின்றனர். இங்கே, ஏழாம் நூற்றாண்டு வரை சமணம் தழைத்தோங்கி இருந்தது. பல்லவர் காலத்தில் செஞ்சிக்குத் தெற்கே பனமலை, மண்டகப்பட்டு ஆகிய இடங்களில் குகைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கி.பி. 1677-ல் பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து செஞ்சியை மராட்டிய மன்னர் சிவாஜி மீட்டு மேலும் பலப்படுத்தினார். அவருக்குப் பிறகு, இந்தக் கோட்டை கர்நாடக நவாபுக்களின் கைக்குப் போனது. அவர்கள், 1750-ல் இதை பிரெஞ்சுக்காரர்களிடம் தோற்றனர். இறுதியாக, 1761-ல் பிரிட்டிஷ் படை செஞ்சியைக் கைப்பற்றியது.
1780-ம் ஆண்டு ஹைதர் அலி செஞ்சியைத் தாக்கி, தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். அதுவே, செஞ்சிக் கோட்டையில் நடந்த கடைசிப் போர். 1799-ல் செஞ்சி மீண்டும் பிரிட்டிஷ்வசமானது. அவர்கள் அதை முறையாகப் பராமரிக்காமல் காவல் அரண் போலவே பாவித்தனர். 1921-ம் ஆண்டில் செஞ்சி தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு, தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

நிகோலஸ் பிமண்டோ என்ற கிறிஸ்துவப் பாதிரியார் எழுதிய நாட்குறிப்பில், 'தான் பார்த்த கோட்டைகளில் மிகப் பெரியது செஞ்சி. அது ஒரு சிறந்த பட்டினமாக விளங்குகிறது’ என்ற தகவல் காணப்படுகிறது.
நவாபை எதிர்த்து தைரியமாக சண்டை போட்ட தேசிங்கு, மக்கள் மத்தியில் இன்றும் வீர நாயகனாக புகழ்பெற்று விளங்குகிறான். இவ்வளவுக்கும், தேசிங்கு ராஜா செஞ்சியை ஆட்சி செய்தது 10 மாதங்கள் மட்டுமே. செஞ்சியும் வேலூரும் ஒரே வரலாற்றின் இரண்டு பக்கங்கள்.

வேலூர் கோட்டையைக் கட்டியதும் விஜயநகர ஆட்சியாளர்களே. 16-ம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நாயக்கர் இந்தக் கோட்டையைக் கட்டினார். செஞ்சியைப் போலவே, வேலூரும் பிஜப்பூர் சுல்தான் வசம் சில காலம் இருந்தது. 1760-ம் ஆண்டு இந்தக் கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசம் சென்றது. வெள்ளைக்காரர்கள், மைசூர் போரில் திப்பு சுல்தானை வென்ற பிறகு திப்புவின் குடும்பத்தினரை வேலூர் கோட்டைக்குள் அடைத்துவைத்து இருந்தனர். அத்துடன் திப்புவின் சிப்பாய்களில் பலரையும் பிரிட்டிஷ் அரசு தனது படையில் சேர்த்துக்கொண்டது.

ராஜ்யத்தை இழந்தபோதும் விசுவாசம் இழக்காத மைசூர்வாசிகள் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிடத் தருணம் பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனர். அதற்காக ஆங்கிலேய எதிர்ப்புப்பிரசாரத்​தை நாடக​மாகவும் கிராமியக் கலைகளாகவும் நிகழ்த்தத் தொடங்கினர். அந்த நெருப்புப் பொறி, வேலூர் பகுதிகளில் மெள்ளப் பரவத் தொடங்கியது.


செஞ்சி : செஞ்சியில் 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவில் உள்ள இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என கோரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கோட்டையை வலிமையானதாக மாற்றியதுடன், செஞ்சியைச் சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர்.இதனால், இந்திய மன்னர்கள் மட்டுமின்றி முஸ்லிம் பேரரசர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியின் மீது தீராத மோகம் இருந்தது. ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால், தென்னிந்தியாவில் செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது.கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது.
vellore-kodandarama-templeஇந்த போரின் போது செஞ்சி நகருக்கு பெருமை சேர்த்து வந்த வெங்கட்ரமணர், பட்டாபிராமர், கோதண்டராமர், சீத்தாராமர் கோவில்கள் பேரழிவை சந்தித்தன.இதன் பிறகு கி.பி.,1750 வரை நவாப்புக்களும், அடுத்து பத்து ஆண்டுகள் பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். கி.பி., 1761ல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் செஞ்சிக்கோட்டை தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது.ராஜா தேசிங்கிற்கு பின்னர் இந்து மன்னர்கள் யாரும் செஞ்சியை ஆட்சி செய்யவில்லை. இதனால் போரில் நாசப்படுத்தப்பட்ட கோவில்கள் மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. ராஜா தேசிங்கிற்கு பின்னர் செஞ்சியை ஆட்சி செய்தவர்கள் கோவில் சொத்துக்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மானியமாக வழங்கியதால் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி விடப்பட்டன.ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர், கலை நயம்மிக்க வெங்கட்ரமணர் கோவில், பட்டாபிராமர் கோவில்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
சீத்தாராமர் கோவிலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்த கோதண்டராமர் கோவிலும் தொடர்ந்து கேட்பாரற்று விடப்பட்டன. 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடக்காமல் இருந்த காலத்திலும், இங்குள்ள மண்டபத்தில் செஞ்சி ஏகாம்பரேஸ்வரரும், சிங்கவரம் அரங்கநாதரும் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி நடந்து வந்தது.இந்த கோவிலில் ராமர் சிலை வைத்து வழிபாடு நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்த கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி போலீசில் புகார் செய்தனர்.இப்பிரச்னை தொடர்பாக செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இரண்டு முறை சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கிறிஸ்தவர்கள் தரப்பில் 1878ல் திண்டிவனம் சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஆதாரமாக காட்டி உள்ளனர்.இந்த பத்திரத்தில் கோதண்டராமர் கோவில் உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை மயிலம் தேவஸ்தான ஆதினம் பரம்பரை தர்ம கர்த்தா சிவக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு யெப்டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியுள்ளார்.இதே பத்திரத்தில் மண்டபம், மயில் கோபுரம், கிளி கோபுரம் நீங்கலாக என குறிப்பிட்டிருப்பதாக இந்துக்கள் தரப்பில் கூறுகின்றனர். பத்திரப் பதிவின் போது மடத்தினர் இந்த சொத்தை கிரயம் பெற்றதற்கான மூலப்பத்திரமும், கோவில் நிலத்தை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட டிரஸ்டி பத்திரமும் இணைத்து வழங்கியதாக கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
fort_gingeeஆனால் இந்த இரண்டு பத்திரத்தையும் கிறிஸ்தவர்கள் தரப்பில் சமாதானக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவில்லை. பிரச்னைக்குரிய இடத்திற்கு சமீபத்தில் எடுத்த வில்லங்க சான்றிதழில், 1878ல் நடந்த கிரயத்தை தவிர வேறு சொத்து பாரிமாற்றம் நடக்கவில்லை. இதற்கிடையே கோவில் இடத்திற்கான பட்டா காண்டியார் என்பவர் மீது மாற்றப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்த நிலையில் இருந்த கோதண்டராமர் கோவிலை மீண்டும் கட்ட 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை உருவாக்கி கோவில் கட்டுவதற்கான வேலைகளை இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் நேற்று முன்தினம் கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை நடக்க உள்ள சமாதானக் கூட்டத்தில் எடுக்க உள்ள முடிவிற்காக இரண்டு தரப்பினரும் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.
கோவில் இடத்தை காட்டும் எழுத்துக்களை அழித்துள்ளதாக புகார் : அரசு வரைபடத்தில் கோதண்டராமர் கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் எழுத்துக்கள் சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக ஆலய அறக்கட்டளை தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை குறித்து கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை நிறுவி கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் ரங்கராமானுஜதாசர் கூறியதாவது:தாலுகா அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்துள்ள கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சொத்தின் மூலப்பத்திரமும், டிரஸ்டி பத்திரமும் கேட்டு தாசில்தாரிடம் மனு செய்தும் இதுவரை சமர்ப்பிக்க வில்லை. இந்த பத்திரங்கள் கிடைத்தால் தான் கோவிலை விற்பனை செய்யும் உரிமை விற்பனை செய்தவருக்கு உள்ளதா என்பது தெளிவாகும். இதில் டிரஸ்டிகளாக இருந்தவர்கள் விவரமும் தெரியவரும்.
கிரயத்திற்கு பிறகு இன்றைய நாள் வரை எந்த சொத்து பரிமாற்றமும் நடக்காத நிலையில் எந்த அடிப்படையில் காண்டியார் என்பவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது என கேட்டு கடந்த மாதம் 4ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தாசில்தாருக்கு மனு கொடுத்தோம். ஆனால், இதுவரையில் இந்த மனுவிற்கு பதில் அளிக்க வில்லை.அரசிடம் உள்ள நிலத்தின் வரைபடத்தில், கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் வகையில் இருந்த எழுத்துக்களை சமீபத்தில் வெள்ளை மை கொண்டு அழித்துள்ளனர். இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கோரியுள்ளார் – ”… பாதிரி ஜேம்ஸ் ஆல்பிரட் என்பவர் பிப்ரவரி-1 அன்று ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பக்தர்களை வெளியேற்றி கோயிலுக்குப் பூட்டுப் போட்டுள்ளார். இது சம்பந்தமாக விசாரிக்க வந்த தாசில்தாரும் கோயிலைப் பூட்ட உத்தரவிட்டுள்ளார்… கோயிலை யாருக்காவது விற்பது சட்டப் படி செல்லாது . தாசில்தார், பாதிரி ஜேம்ஸ் ஆல்பிரட் ஆகியோர் மீது காவல்துறை கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. முழு அறிக்கையையும் இங்கே பார்க்கலாம்.
அரசு இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் என்று எதிர்பார்ப்போம். சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்க்கப் படலாம், தீர்க்கப் படவேண்டும்.
ஆனால், இந்த சம்பவம் சில மையமான கேள்விகளை எழுப்புகிறது.
pondicherry_colonial_seigeதமிழக வரலாறு பற்றி ஓரளவு பரிச்சயம் உள்ளவர்கள் 17,18,19ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் எத்தகைய அரசியல் கொந்தளிப்புகளிலும், கொடுங்கோன்மையிலும் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது என்பதை அறிந்திருக்கலாம்.  நிலையான அரசாட்சி இல்லாமையினாலும்,  ஆங்கிலேயேர்கள், பிரெஞ்சுக் காரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக் காரர்கள் இவர்களிடையே நடந்து கொண்டிருந்த வாணிப, அதிகாரப் போட்டியினாலும், காலனியர்களின் பொருளாதாரச் சுரண்டலினாலும், அவர்கள் திட்டமிட்டு உருவாக்கிய அடுத்தடுத்த பெரும் பஞ்சங்களாலும்  தமிழ்ச் சமுதாயமும், அதன் கலாசாரமும் முழுவதுமே உருக்குலைந்தன.  இந்தச் சூழலிலும்  நம் பண்பாட்டையும் மக்கள் நலனையும் பாதுகாக்கப் போராடிய ஒளிக்கீற்றுகளாக செஞ்சி மன்னர் தேசிங்கு, தஞ்சை மராட்டியர்கள், மருதுபாண்டியர், கட்டபொம்மன், ராணி மங்கம்மாள் ஆகியவர்களைக் குறிப்பிடலாம்.
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் அனைத்து இந்துக் கோவில்களும் பெரும் சீரழிவுக்கு ஆட்பட்டன.  சிதம்பரம், காஞ்சிபுரம், தஞ்சை, திருவரங்கம், மதுரை என்று தமிழகத்தின் மிகப் பெரும் கோயில்கள் கூட அன்னியர்களின் கொத்தளங்களாக  இந்தப்  போர்களின்போது உருமாறின. பல கோயில்களில் வருடக் கணக்கில் வழிபாடுகள் நின்று போயின.  பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரன் கோயில் முழுதாக இடிக்கப் பட்டதுதிருச்செந்தூர் கோயிலைத் தகர்க்க முயன்றது ஆகியவை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள்.  சொல்லப் போனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இந்த இழுபறிகள் ஓரளவுக்கு நின்று ஆலயங்களில் சீரான வழிபாடுகள் நடந்து வரலாயின.  பல்லாண்டுகளாகக் கைவிடப் பட்டுக் கிடந்த கோயில்களும் புதுப்பிக்கப் பட்டு நின்று போயிருந்த வழிபாடுகள் தொடங்கப் பட்டன.   அண்மைக் காலங்களில் கூட, இத்தகைய புனருத்தாரண நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 1980களில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் இவ்வாறு புதுப்பிக்கப் பட்டது.   இந்திய தேசிய எழுச்சியின், பண்பாட்டு மறுமலர்ச்சியின் ஒரு அங்கமாக இயல்பாகவே நிகழ்ந்துவரும் செயல்பாடுகள் இவை.
இதன் ஒரு தொடர்ச்சியாகவே செஞ்சி கோதண்டராமர் கோயிலைச்  சீரமைக்கும் பணியை அங்கு வாழும் இந்துக்கள் ஏற்றிருக்கின்றனர். அதனை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் அதற்கு ஆதாரமாகக் காட்டுவது என்ன??  1878-ஆம் ஆண்டு கிரயம்! கோவிலைச் சுற்றியுள்ள நிலம் மட்டுமல்ல, கோயிலையும் சேர்த்து  “ரெவரெண்டு யெப்டாருஸ்” வாங்கி விட்டாராம் – அதனால் அது கிறிஸ்தவ சொத்து!  யார் இந்த ரெவரெண்டு? நம் தேசத்தை ஆக்கிரமித்திருந்த காலனிய அரசாட்சியாளர்களுடன், அவர்களது ஐந்தாம் படையாக வந்த ஒரு ஐரோப்பிய மிஷநரி. அதோடு, அந்தக் காலகட்டத்தில் சூழ்ச்சி, நயவஞ்சகம், மோசடி, வரிக் கொடுமைகள் இவற்றின் மூலம் இந்தியர்களின் நிலபுலன்களும், சொத்துக்களும் காலனியர்களாலும், அவர்களது கூட்டாளிகளான மிஷநரிகளாலும் கையகப் படுத்தப் பட்டதென்பது ஆவணப் படுத்தப் பட்ட வரலாறு.
1878ல் ஐரோப்பியப் பாதிரி வாங்கியதாகச் சொல்லப் படும் நிலத்தை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடும் இந்த மதவெறியர்கள் அந்தப் பாதிரியின் சந்ததிகளா? அல்லது ரத்த உறவினர்களா? காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்! தங்களது முன்னோர்களே கட்டிய  பாரம்பரியமான கோயிலில் வழிபாட்டைத் தடுத்து நிறுத்தும் செயல்பாடு எப்ப்பேர்ப்பட்ட துரோகம்!
இந்தக் கயமைத் தனத்தைச் செய்பவர்களே! இதே ஆதாரத்தை வைத்து, இந்தியாவில் இருந்த இந்த ஐரோப்பிய மிஷநரிகளும், அவர்கள் அமைப்புகளும் இங்கிலாந்திலும், பிரான்சிலும், ஜெர்மனியிலும், போர்ச்சுகலிலும் வைத்திருந்த நிலங்கள் மீதும், சொத்துக்கள் மீதும் உங்களால் உரிமை கொண்டாட முடியுமா? அதற்குத் தைரியம் இருக்கிறதா? அங்குள்ள அரசுகள் அதை அனுமதிக்குமா? அல்லது உங்கள் எஜமானர்களான அங்குள்ள சர்ச்சுகள் தான் அனுமதிக்குமா? பரந்த பெருந்தன்மையுடன், உங்களது ஆக்கிரமிப்பு அராஜக மதத்திற்கும் மரியாதையும், உரிமையும் கொடுத்து வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜனநாயக இந்திய தேசத்தில், வைதாரையும் வாழவைக்கும் இந்தத் தமிழ்மண்ணில் தான் இதை உங்களால் செய்ய முடிகிறது. மறைமுகக் காலனியத்தின் ஏவலாளிகளே ! இப்படிச் செய்ய உங்களுக்கு வெட்கமாகயில்லை? அந்த அளவுக்கு மானமிழந்தவர்களாகவா ஆபிரகாமியம் உங்களை ஆக்கி விட்டது?
தமிழகத்தின் பல நூற்றாண்டு கால சரித்திரத்தில் இப்படி பொதுச் சொத்தான கோவில்களையும், குளங்களையும், ஏரிகளையும் யாராவது விற்றதாக, வாங்கியதாக சரித்திரம் உண்டா? தங்கள் குடிசை வீடுகளிலும் ஒரு ஓரத்தில் குலதெய்வத்தை நிறுத்தி வழிபடுவது தமிழனின் மரபு. பிணைத் தொழிலாளர்களாக மலேசியாவிலும், இலங்கை மலையகத்திலும், தென்னாப்பிரிக்காவிலும் வாழ்ந்த சூழலிலும் தங்கள் நிலங்களில் கோயில்கள் கட்டி வழிபட்டு வந்த தன்மானப் பாரம்பரியம் கொண்டது தமிழ்ச் சமூகம். இதைப் பற்றிய பிரக்ஞையாவது உங்களிடம் இருக்கிறதா? தமிழ் முன்னோர்கள் கோவிலையும் சேர்த்து விற்றதாக மோசடி செய்யும் அளவுக்கு ஆபிரகாமியம் உங்களை மரத்துப் போகச் செய்திருக்கிறது.
கள்ளத்தனமாக கோவில் சுவர்கள் மீதும், மலைகள் மீதும், மரங்கள் மீதும், போக்குவரத்து சிக்னல்களைக் கூட விட்டுவைக்காமல் அவற்றின் மீதும் அதிகாரவெறியின் அடையாளமான சிலுவையை வரைந்து வரைந்து ஆக்கிரமிப்பு அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் இந்த மதப் பிரசார வெறி இப்போது இந்துக்களின் பழைய கோயிலையே சொந்தம் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்து விட்டிருக்கிறது. அந்தக் கோயில் உங்கள் கைக்கு வந்ததும் என்ன செய்வதாக உத்தேசம்? அதை இடித்து விட்டு அங்கும் ஆக்கிரமிப்புப் பிரகடனம் செய்வதா? புத்தர் சிலைகளை இடித்தழித்த தாலிபானிய மனநிலைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? ஒன்றுமில்லை.
இன்னொரு செய்தி நம் அண்டை வீடான ஆந்திரா பற்றியது.
simhachalam1விசாகப் பட்டினம் அருகில் உள்ள சிம்ஹாசலம் பழமைவாய்ந்த விஷ்ணு ஸ்தலம். இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்த அழகிய கோவில். ஸ்ரீராமானுஜரின் பாதச் சுவடுகளால் பெருமைப் படுத்தப் பட்ட தலம்.
இந்தக் கோவிலுக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலம் சட்டத்திற்குப் புறம்பாக பலரால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது என்பது நெடுநாளைய புகார். மேலும் இந்த நிலத்தில் 47 சர்ச்சுகளும் கட்டப் பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கோவிலின் கோசாலையிலுள்ள மாடுகள் வேண்டுமென்றே கவனிக்காமல் விடப் படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் பல மாடுகள் மர்மமான முறையில் இறந்து போனது பல பக்தர்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலிருக்கும் அரசு அதிகாரிகள் முழுமையாக ஊழலில் திளைத்திருக்கிறார்கள் என்பதோடு, மிஷநரிகளின் கைக்கூலிகளாகவே இருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது. இப்படி இருந்தால் அதில் ஆச்சரியமும் இல்லை.  ம்றைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் செயல்பாடுகளால், ஆந்திரா தென்னிந்தியாவின் ‘பைபிள் பெல்ட்’ (Bible Belt) என்ற புகழுரைக்குப் பொருந்தும் வகையில் வந்து கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள அடிப்படைவாத, பழமைவாத கிறிஸ்தவ மிஷநரிகளின் சொர்க்கபூமியாக ஆந்திரா கருதப் படுகிறது. உலகின் பல நாடுகளில் அங்குள்ள கிறிஸ்தவ அரசுகளாலேயே தடைசெய்யப் பட்ட விஷயங்களைக் கூட அவர்கள் ஆந்திராவில் கனஜோராக செய்ய முடியும்.
இந்நிலையில், இந்த ஆலய நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து பக்தர்கள் குழு ஒன்று கமல் குமார் சுவாமி என்ற துறவியின் தலைமையில் அமைதியான முறையில் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டும், நிர்வாக சீர்கேடுகளை விளக்கும் செய்திகளைச் கூறிக் கொண்டும் சென்றது. தங்கள் கூட்டம் முடிந்ததும் கோயிலுக்கு உள்சென்று தரிசனம் செய்வதாகவும் எண்ணியிருந்தது. கோவில் வாசலருகில் வந்தவுடனேயே ஆலய நிர்வாகி, பக்கத்தில் கடைவைத்திருந்தவர்கள், சில ஆலயப் பணியாளர்கள், மற்றும் அங்கு வரவழைக்கப் பட்ட கூலிப் படையினரால் சரமாரியாக சுவாமிகளும் பக்தர்களும் தாக்கப் பட்டனர்.

இந்த மாபெரும் சதித்திட்டத்தை அம்பலப் படுத்திய கமல் குமார் சுவாமிகளையும், பக்தர்களையும் கோவில் நிர்வாகி மோசமான வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார். கோவில் சொத்துக்களை சர்ச்சுக்குக் கடத்தும் இந்த மானங்கெட்ட கைக்கூலி, சுவாமிகளை self styled swami என்று திட்டி, காவிக் கொடிகளை கோவிலுக்குள் கொண்டு செல்வது சட்டவிரோதம், அதனால் தான் அடித்தோம் என்று விளக்கம் வேறு அளிக்கிறார். அவரது அதிகாரம் அங்கே முழுமையாக இருப்பதால் கடைக்காரகள் உட்பட அனைவரும் அவரது கைக்குள்!
சுயநலத்தாலும், அரசியல் அதிகார ஆசைகளாலும் இந்துக்களிலேயே ஒரு சாரார் தங்கள் மதத்தை அழிக்கும் செயல்பாடுகளிலும், தங்கள் சகோதரர்களையே எதிரிகளாகக் கருதும் இழி நிலைக்குத் திருப்பப் பட்டிருக்கிறார்கள். பலியாகியிருக்கிறார்கள்.
”யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாயிருக்கமாட்டான்.” – லூக்கா 14:26, விவிலியம்
“இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது” – வில் டுராண்ட் (நாகரீகங்களின் வரலாறு)
மேற்கண்ட வாசகங்களின் நிஜம் நம்மைச் சுட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கீழ்க்கண்ட வாசகத்தையும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
“கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் அவற்றையே மறுமுறை செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்” – ஜார்ஜ் சாண்டாயனா

தென் இந்தியாவில் கண் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
பண்டையகால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை நாம் வரலாற்றில் படித்து தெரிந்து கொள்கிறோம். அதே சமயம், கடந்த கால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அவர்கள் வாழ்ந்த, ஆட்சிபுரிந்த இடங்களை நேரில் கண்டு, தொட்டு பார்த்து, மகிழந்து தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. அது எவ்விதம் இருக்கும் என்பதை உணர வேண்டும் என்றால், நீங்கள் செல்ல வேண்டியது செஞ்சிக்கோட்டைதான்.
செஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த ராஜாதேசிங்கு உள்ளிட்ட வீரமிக்க மன்னர்களைப் போன்று கம்பீரமாக விண்ணை முட்டி நிற்கிறது செஞ்சிக்கோட்டை. கால மாற்றங்களையும், பல்வேறு படையெடுப்புகளையும் முறியடித்து காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடைய ஏராளமான வரலாற்று நினைவிடங்களை தன்வசம் வைத்துள்ளது இந்த இடம்.
வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை. தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை. இதற்குள் நுழையும் போது நமக்கு தேசிங்கு ராஜாவின் ஆட்சி முறை மற்றும் அந்த கட்டடக் கலையின் நுணுக்கங்கள் பற்றி எடுத்துச் சொல்லவோ அல்லது அதைப் பற்றிய விவரங்களை ஏற்கனவே அறிந்து வைத்துக் கொள்வதோ மிகவும் நல்லது.
கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நாம் இந்த நூற்றாண்டை அடைந்து விட்டோம் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.
இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களை பார்ப்பதன் மூலம் வரலாற்றை படிப்பதில் இருக்கும் ஆர்வத்தை விட வரலாற்றை நேரில் பார்த்த அனுபவம் ஏற்படும். இந்திய தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சில அடிப்படை வசதிகள் செய்து பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு  வருகிறது.
ஆனால் அதிகாரபூர்வமாக செஞ்சிக் கோட்டையை தமிழ்நாடு அரசு சுற்றுலா மையமாக அறிவிக்காததும், தமிழ்நாடு அரசு சார்பில் செஞ்சிக்கோட்டையில் எந்த ஒரு இடத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதியை செய்து தரவில்லை என்பதும் வேதனைக்குரியது.
ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்
சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.
ராஜகிரி மலை மீது பல அற்புதங்களை கொண்ட கலைநயத்துடன் விளங்கும் கட்டடங்கள் கலைநயம் மிக்க கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பாலரங்கநாதர் கோயில், கமலக்கண்ணி அம்மன் கோயில், சுனை நீர், இழுவை பாலம், மணிக்கூண்டு, பீரங்கி என அற்புதமான இடங்களை கோட்டையின் மீது ஏறிச் சென்று பார்த்து பரவசம் அடையலாம்.
ராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி கோட்டை
திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ராணிக்கோட்டையை அந்த பக்கம் பயணம் செய்வோர் பார்க்காமல் செல்ல முடியாது. அற்புதமான அழகுடன் காட்சி அளிக்கும் ராணிக்கோட்டையைப் பார்க்க பார்க்க அழகுதான். இயற்கை எழிலுடன் கட்டப்பட்ட மலைக்கோட்டைதான் ராணிக்கோட்டை. கோட்டை மீது சுழலும் பீரங்கிமேடை, நெற்களஞ்சியம், அரங்கநாதர் ஆலயம், எண்ணெய்க் கிணறு, அழகிய கட்டட கலைநயத்துடன் கூடிய தர்பார் மண்டபம், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள பூவாத்தமன் கோயில் என பார்க்க பல இடங்கள் உள்ளன.
வரலாற்றின் முந்தைய காலத்தையும் அவர்கள் வாழ்ந்த விதம் மற்றும் கடைசியாக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள், ஆங்கிலேயர்கள் வரை ஆண்ட செஞ்சிக்கோட்டையை அவசியம் பார்த்து இந்த விடுமுறையை பயனுள்ளதாக்குவோம்.
 செஞ்சி கோட்டை - சிதலமடையும் தமிழக வரலாற்று சின்னம்..

Posted Image


வரலாற்றில் செஞ்சி

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது.
Posted Image
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.
Posted Image
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
Posted Image
ஜைனர்கள்

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்
கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.
Posted Image
பல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900)
Posted Image
பல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .
Posted Image
சோழர்கள் காலத்தில் செஞ்சி (900-1103)

செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
பாண்டியர்கள் காலத்தில் செஞ்சி (1014-1190)

1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.

விஜயநகரப் பேரரசுக் காலத்தில்

13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.

அமைப்பு

செஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.

தற்போதைய நிலை.

இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அதிலிருந்து பழங்கால சுவர்களில் கிறுக்குவதும்..ஞாயிற்று கிழமை டாஸ்மார்க் பார் .. காதலர்களுக்கான கடலை மையமாக இப்போது விளங்கிவருகிறது..

இருப்பிடம்

மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.


எவ்வளவு தூரம்?
சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது செஞ்சிக்கோட்டை. விழுப்புரத்தில் இருந்து 37 கிலோ மீட்டரும், திண்டிவனத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரமும், திருவண்ணாமலையில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. செஞ்சிக் கோட்டையை பார்க்க வருவதற்கு பேருந்து தான் வசதியாக இருக்கும். கோட்டை வாயிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது.
Posted Image
செஞ்சி கோட்டை - சிதலமடையும் தமிழக வரலாற்று சின்னம்..

Posted Image


வரலாற்றில் செஞ்சி

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது.
Posted Image
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.
Posted Image
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

ஜைனர்கள்

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்
கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.

பல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900)

பல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .

சோழர்கள் காலத்தில் செஞ்சி (900-1103)

செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
பாண்டியர்கள் காலத்தில் செஞ்சி (1014-1190)

1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.

விஜயநகரப் பேரரசுக் காலத்தில்

13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.

அமைப்பு

செஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.

தற்போதைய நிலை.

இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அதிலிருந்து பழங்கால சுவர்களில் கிறுக்குவதும்..ஞாயிற்று கிழமை டாஸ்மார்க் பார் .. காதலர்களுக்கான கடலை மையமாக இப்போது விளங்கிவருகிறது..

இருப்பிடம்

மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

செஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோனாரால் அமைக்கப்பட்டு பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இக்கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. கிருஷ்ணகிரி, சந்திரகிரி மற்றும் ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை மாபெரும் செஞ்சிக்கோட்டையின் மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன. ராஜகிரி மலை மட்டுமே (800 அடி உயரம்) தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று.

போர்வீரர் தங்குமிடங்கள் குதிரைலாயங்கள்

உயரம் குறைந்த கவிகை மாடங்கள். வளைவு வளைவான நுழைவாயில்கள், தனியறைகள், குதிரைகள் இளைப்பாறவும் போர்வீரர்கள் தங்கவும் கட்டப்பட்டுள்ளன. கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள இந்த கவின்மிகு அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம் அமைக்ப்பட்டுள்ளது.

யானைக்குளம்

போர் வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள யானைக்குளம் மாடங்கள் அழகின் ரகசியங்கள்.

சதத் உல்லாக்கான் மசூதி

சதத் உல்லாக்கான் எழுப்பிய மசூதி. தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக் கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது. கி.பி. 1717 - 18 இல் எழுப்பப்பட்டதாகப் பார்சிய கல்வெட்டு தெரிவிக்கிறது.

நெற்களஞ்சியம் - உடற்பயிற்சிக்கூடம்

விஜய நகர கட்டடக் கலை பாணியில் அமைந்த செஞ்சிக் கோட்டையின் பெருமைமிகு கட்டடங்கள் ராஜகிரி மலையின் கீழ் கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள நெற்களஞ்சியம் பிரமாண்டமானது. தாராளமான நுழைவாயிற் பகுதி. இதன் சுவர்கள் மூன்று மீட்டர். பீப்பாய் போன்ற அரைவட்ட கவிகை மாடத்தை நெற்களஞ்சியத்தின் வடகிழக்கில் காணமுடியும். உடற்பயிற்சி செய்யவும் நெற்களஞ்சியக் கட்டடம் பயன்பட்டதாக சொல்லப்படுகிறது.

வெங்கட்ரமணா கோயில்

பரந்து விரிந்துள்ள கோயில், இங்குள்ள முனைப்பான தூண்களும், அழகுமிகு சிற்பங்களும் நாயக்கர்களின் அழகியல் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

வேணு கோபாலஸ்வாமி கோயில்

கலை எழில் மிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோயில் இது. கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது, அவரை கயிறு கட்டி இழுப்பது போன்ற சிற்பங்கள் இங்குள்ளன. இந்தக் கோயிலின் முகப்பு வாயிலில் மிகச்சிறந்த பூச்சு வேலையோடு மெருகேற்றப்பட்ட மென்மையான தளம் உள்ளது. இது வேணுகோபாலஸ்வாமி கோயிலின் சிறப்புத் தன்மையை பறைசாற்றுகிறது.

ராஜகிரி மலைகோட்டை

இந்தோ - இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில் உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு உள்ளது. ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.

கிருஷ்ணகிரி கோட்டை

ராஜகிரியின் வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது அமைந்துள்ள கிருஷ்ணகிரி கோட்டை. கற்படிகள் வழியாக நடந்து கோட்டையை அடையலாம். இங்கு காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை, வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன.

சிங்கவரம் கிராமம்

செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். இது பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மன் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது , இது

செஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் ம்லையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும் எல்லோரா போல் ஒரே பாறையைக்குடைந்து செய்யப் பட்டக்கோயில், இந்தப்பாறையிலேயே முன் புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில்நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது அங்கு ஆதிசேஷன் சுருண்டு கிடக்க அந்தப்படுக்கையில் அனந்த சயனமாக அரங்கன் சயனித்திருகிறார். தலையைச் சற்று தூக்கியவாறு, வலது திருக்கரத்தைக் கீழே தொங்க விட்டபடி, இடது கையை மேற்புறமாக மடித்து, கடக முத்திரையைக் காட்டி ஐந்து தலை நாகத்தின் மேல் திருமால் அழகுற நித்திரை கொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தைப் போன்று செஞ்சியும் இரு பிரிவாக இருந்துள்ளது. தற்போது உள்ள செஞ்சி "சிவ செஞ்சி" என்றும், சிங்கபுரம்-மேலச்சேரி இணைந்திருந்த பகுதி "விஷ்ணு செஞ்சி" என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.

ஒரே கல்லில் குடைந்து இந்தப் பெருமாள் திருமேனியை வடித்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த ரெங்கநாதர் நீளமானவர் என்று கருதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானவை. மகேந்திரவர்ம பல்லவனின் கலை ஆர்வத்தில் விளைந்த அற்புதம் இது..மிகப் பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்றுதான் முழுமையாகத் தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், இடது திருக்கரம், கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு-அத்திரி என்ற முனிவர்கள் ஆகியோரை தரிசிக்கின்றோம்.

ஸ்ரீ வரதராஜப் பெருமாளையும் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். தாயார் ரங்கநாயகி தனியே அருள் பாலிக்கிறார். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சிலை வடிவமும் உள்ளது. இக்கோயிலில் "சந்திர புஷ்கரணி" என்ற வற்றாத தீர்த்தக் குளம் இருக்கின்றது. மலை மீது சுற்றி வரும் போது லட்சுமி தீர்த்தம், ராமர் தீர்த்தம், வெயில் படாத சுனை ஆகியவற்றைக் காணலாம். மேலும் செஞ்சி அரச குடும்பத்தினர் வருவதற்கு, செஞ்சிக் கோட்டையில் இருந்து இக்கோயிலுக்கு வரும் சுரங்கம் ஒன்றும் உள்ளது. அதை இப்போதும் காணலாம்.

செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார்.

மேலும் முஸ்லீம் படையெடுப்பின்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தியை சிறிது காலம் தேசிங்கு ராஜா பாதுகாப்பில் சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தில் வைத்திருந்தனர்; பின்னர் காஞ்சியில் அமைதி திரும்பியதும் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் விளைவாகவே இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜர் சந்நிதி அமைக்கப்பட்டதாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசித்து மகிழ்கின்றனர். மாசி மகத்தன்று புதுச்சேரி கடற்கரையில் சிங்கவரம் ரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 800 ஆண்டுகளாக இத்த வைபவம் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதருக்கு நடைபெறுவதாகத் தகவல்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயம் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக