செவ்வாய், 15 அக்டோபர், 2013

வேலூர் வரலாறு – கோ.ஜெயக்குமார்.

வேலூர் வரலாறு – கோ.ஜெயக்குமார்.

வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq5gwp2Fq02oACNpUUeFF9PBw2F282WYdky6lDHv5PHYU0uzHPhrEv_maKhQpwaq5RcIEAC9p-Coq5d9J4lZ8EoxvhE4Z9Ovq32ZJuuL_-2e4WKYRjxabMsQgFohupLoCvAddKweFZlScP/s320/vellore_Fort.jpg
வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர். கருங்கல், புவிப்பரப்புக்கு மேல் பரவலாகக் காணப்படும் தீப்பாறை வகைகளுள் ஒன்றாகும். இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி இருப்பதுண்டு. கருங்கற்கள், அவற்றின் வேதியியல் மற்றும் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம்.
http://media.dinamani.com/article1481152.ece/alternates/w460/alamparai_fort.jpg
கருங்கல் பெரும்பாலும் அளவிற் பெரிதாகவும், கடினமானதாகவும் இருக்கும். இதனால் கட்டுமானத்துறையில் இது பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றது. சராசரியாக 2.75 கி/சமீ3 அடர்த்தியைக் கொண்ட இது 1.74 கி/சமீ3 தொடக்கம் 2.80 கி/சமீ3 வரையான அடர்த்திகளில் கிடைக்கின்றது.
வேலூர் கோட்டை மற்றும் அகழி
சுற்றுலாபயணிகளை பெரிதும் கவர்ந்திழுக்கும் வகையில் வேலூரின் நடுவே அமைந்துள்ள கோட்டை கி.பி.16ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் விஜயநகரப் பேரரசின் சதாசிவ தேவ மகாராயரின் கீழ் பணிபுரிந்த சின்ன பொம்மு நாயக்கரால் நிறுவப்பட்டது. விஜயநகரப் பேரரசு, இஸ்லாமிய பேரரசு, மராட்டிய பேரரசு, மற்றும் ஆங்கிலேயப் பேரரசுடன் பல்வேறு காலகட்டங்களில் தொடர்புடைய வரலாற்றுப்புகழ் பெற்ற கோட்டையாக இருந்து வந்துள்ளது.  

http://rightmantra.com/wp-content/uploads/2013/07/Vellore-Mutiny.jpg
ஆங்கிலேயர் கைக்கு இக்கோட்டை வந்தபொழுது, ஸ்ரீரங்கப்பட்டண வீழ்ச்சிக்குப் பிறகு திப்புசுல்தானின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு திப்பு மகாலில் அடைக்கப்பட்டனர். இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட 1806ம் ஆண்டு நடைபெற்ற முதல் சிப்பாய்க்கலகம் இங்கு ஏற்பட்டது. ஆங்கிலேயரை எதிர்த்த இலங்கையில் உள்ள கண்டியை ஆண்ட மன்னன் விக்ரம் ராஜசிங்கே இக்கோட்டையின் உள்ளே உள்ள கண்டி மகாலில் சிறை வைக்கப்பட்டார் ஆகியவை வேலூர் கோட்டையின் சிறப்புகளாகும்.
http://media.dinamani.com/article1519474.ece/alternates/w460/hall.jpg
நாற்கரவடிவில் அமைந்துள்ள எழில் மிக்க இக்கோட்டையினுள் திப்பு மகால், ஹைதர் மகால், பேகம் மகால், பாதுஹா மகால், கண்டி மகால், இந்திய தொல்பொருள் துறை
அருங்காட்சியகம், கலையம்சத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1846ல் கட்டப்பட்ட அழகிய புனித ஜான் தேவாலயம், ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்ட சதுர வடிவ மசூதி, தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfZ797iXHsIMYyItz7PvEqZyrseq-Wc_-pGIgGAYHuvVcXDhaCyDfXLgEne9R5DwLbno-M0XCHne8Zk0C1jyU7bMpzvFp19aViNBWHxg8LrYBI9H08P05fWS2ZwwMXuPGB32sLde7Z8LA/s320/vellore.gif
http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/tour/culture-tour/volore_fort/a%20(13).jpg
அகழியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துடுப்பு படகு சவாரி கட்டணம் பெரியவர் ஒருவருக்கு ரூ10வீதமும், சிறியவருக்கு ரூ.5 வீதமும், இரண்டு பேருக்கான பெடல் படகு சவாரி ரூ.50 வீதமும், வாரநாட்களில் காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 3மணி முதல் 7 மணி வரையிலும், வாராந்திர நாட்களில் மாலை 3 மணி முதல் 7 மணி வரையிலும் இயக்கப்படுகிறது.
http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_6934320927.jpg
அகழி எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja0XV14cm4xUeOsYwe0B8RWCvFRBIP3YLrG3vaLSqQfF6Hw_zjveElxVZCYOSp8VrRo6aG6iPp9DVItNaHM2_J3vBWWHH4L00SAr2y4JRbE4hm88mxw6smJpU4huCd_l7qfMwxCCDqkoxk/s1600/John+2-+20x8+-+1.JPG
வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இவ்வாலயம் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் அழகுடனும், கலை அம்சத்துடனும்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguUi2wEK1upYk3Yhj_1SFd-JywtRWemKdQRMRpN8HTOcHkkj1dLjHI3rygHrZGjHzUrfvTRww29DuBwfZDS-XrKf2mkwEHdPSR5ZnGmTuWmKhLVvmHIC-QYZJWOnQAC-IitkDPvWFu2jAx/s1600/DSC00985.JPG
ஓவியங்களும் சிற்பங்களும் அமையப் பெற்றுள்ளன. வருடம் முழுவதும் அனைத்து விழாக்களையும் பக்தர்கள் சிறப்புடன் தரிசித்து அருள் பெற்று வருகின்றனர்.இங்குள்ள சுற்றுப் பிரகாரங்களும்
கல்யாண மண்டபமும் மிக எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன.பெரிய மசூதி வேலூர் பாக்கியாத் சாலையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த உலகப்புகழ்பெற்ற பெரிய மசூதி உள்ளது. இம்மசூதியில் 2000 பேர்அமர்ந்து தொழுகை செய்ய முடியும். அதன் பின்புறம் ஜாமி ஆ பாக்கியாத்துஸ்ஸா லிஹாத் அரபுக்கல்லூரி அமைந்துள்ளது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcM-pA8AUHCQGO2190GoRooizjMIbY4al0R9ejqX48gc_eeQjnrT7J0G_-2twQC7NnNCnR8I7uqVNg1YqrVRinlZzItTWyzS5s56Mfo9I78d65FcDgOztUbC7dgXpNwFr7UkMcYhdwXnCR/s320/Veloorew%25201.jpg
இக்கல்லூரி தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, கர்நாடகாவின் முதல்இந்தியா விலிருந்தும், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் வருகின்றனர்.இக்கல்லூரியை தென்னிந்தியாவின் இஸ்லாமியத்தாய் கல்லூரி என்கின்றனர்.
முத்துமண்டபம்
இலங்கையில் கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான விக்கிரம ராஜசிங் ஆங்கிலேயருடன் நெடுங்காலம் போரிட்டு இறுதியில் சிறை பிடிக்கப்பட்டு வேலூர்  கோட்டையில் சிறைவாசத்திற்கு பின் இறந்தார். அம்மன்னனின்  சமாதியில் அமைக்கப்பட்ட நினைவாலயமே முத்துமண்டபம் என வழங்கப்படுகிறது.முத்துமண்டபம் வேலூர் - காட்பாடி சாலை பழைய பாலத்தின் அருகே பாலாற்றின் தென்கரையில் உள்ளது. 
http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article668024.ece/alternates/w460/sk5.jpg
ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம்
விரிஞ்சிபுரம் வேலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது பாஸ்கரஷேத்ரம் விரிஞ்சிபுரம் சிவன்கோயிலுக்குப் புகழ்பெற்ற பெயர் இதுதான். ஐந்து பிரகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். இதன் கருவறை மண்டபத்தை இராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்கச் சோழன் கீழிருந்த குறுநில மன்னன் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது. கருவறை லிங்கத்தின் இடது புறத்தில் உள்ள சிங்கமுக சிற்பம் எழில் நிறைந்தது.'சூரியனின் ஒளிக்கதிர்கள் பங்குனி மாதத்தில்மட்டுமே சிவலிங்கத்தின் மீது சூரிய கிரகணங்கள் விழுவது குறிப்பிடத்தக்கது.
http://www.shaivam.org/gallery/image/temples/spt_vl_virinchipuram_margasahayar.jpg
ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில்
ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில் முக்கிய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஸ்ரீநாராயணி பீடத்தினால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
http://www.nativeplanet.com/photos/big/2013/02/_13607632201.jpg
ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில் முக்கிய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஸ்ரீநாராயணி பீடத்தினால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது..
அருங்காட்சியகம்
வேலூர் கோட்டையில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கலைப்பொருட்கள், கற்சிலைகள், கல்வெட்டுகள், ஓவியங்கள், முற்காலத்தில் அச்சிட்ட நாணயங்கள், ஆதிகால மனிதர்கள் வாழ்க்கை முறை, வரலாற்று சின்னங்கள் பற்றிய பொருட்காட்சிகள் அருங்காட்சியகத்தில் உள்ளன.
http://www.tamilnadudirectory.net/districts/Vellore/vellore_placesofinterest_files/Museum.jpg
சி.எம்.சி. மருத்துவமனை
வேலூரில் டாக்டர் ஜடாஸ்கடர் சி.எம்.சி.யை தொடங்கி 100 ஆண்டுகள் ஆகி விட்டன. ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற புகழ்பெற்ற மருத்துவனையாக இது திகழ்கிறது. உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதிநவீன கருவிகளைக் கொண்டு இங்கு எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
http://www.equationbook.com/India/institute-image/Christian-Medical-college-&-Hospital-Vellore-/Lightbox/3.jpg
ஏலகிரி மலை
தமிழகத்தில் உள்ள முக்கிய மலைவாழ் சுற்றுலா சிறப்பிடங்களில் ஒன்று ஏலகிரி மலை. உள்ளூர்
மக்களால் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. வேலூரில் இருந்து 91 கி.மீ தொலைவில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஏலகிரி மலையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது.இங்குள்ள புங்கனூர் ஏரி, படகு சவாரி, பூங்கா மலையேற்ற வழித்தடங்கள், வேலவன் கோயில் , தொலைநோக்கு மையம், மூலிகை பண்ணை, இயற்கை எழில் மிக்க மலைப்பகுதி ஆகியவை சிறந்தது.
 http://photos.wikimapia.org/p/00/02/56/85/44_full.jpg
பொழுதுபோக்கு மையமாக திகழ வழிவகுக்கிறது. இங்கு தோட்டக்கலைத்துறை மூலம் அபிவிருத்திப்பணிகளும் வனத்துறை மூலம் மிருக காட்சி சாலைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இங்கு யாத்ரி நிவாஸ் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது இயற்கை எழில் மிக்க, காணத்தக்க சுற்றுலா ஸ்தலமாகும்.
சைதானிபீபி தர்கா
வேலூர் கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது சைதானிபீபி தர்கா. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தீர்க்கும் மருத்துவராக வணங்கி வருகிறார்கள். மத பேதமில்லாமல் அனைவரும் வந்து வணங்கும் இடம். விண்ணரசி பேராலயம்வேலூர் ரவுண்டானா அருகில் கட்டப்பட்டுள்ளது விண்ணரசி பேராலயம். இது 115 அடி உயரமும், 21 ஆயிரம் சதுர அடி அகலமும் கொண்டிருக்கிறது.ஆசிய கண்டத்திலேயே அழகுமிக்க பேராலயமாகும். அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
http://www.tntj.net/wp-content/uploads/2011/12/P1020237.jpg
அமிர்தி காடு
வேலூரில் இருந்து தெற்கே 25 கி.மீ., தொலைவில் இயற்கை வனப்புடன் கூடிய பசுமையான வனப்பகுதி அமிர்தி காடு. இதில் ஒரு பகுதி சுற்றுலா இடமாகவும், மறு பகுதி பூங்கா மற்றும்வனவிலங்கு சரணாலயமாகவும் வளர்ந்து வருகிறது. பருவ காலங்களில் இங்குள்ள சிற்றோடை மற்றும் நீர்வீழ்ச்சி காண்போரை கவர்கிறது.
http://mw2.google.com/mw-panoramio/photos/medium/41484619.jpg
பாலமதி மலை
வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1800 சுற்றுலா இடம் பாலமதி மலை இக்குன்றில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. எட்டு கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பயணம் சுற்றுலாப்பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOPjQoiXKInCVTO5xBylHGKNVu0p7uNtvqme-XG_bU5gy8vDSYOBjRtq_5JDW2pogA6rvYeQ40VIMxnmCqPcUa_lzr5kRoWFMGg4-t1Psr4zsRnVn11OG09dZSsqy4X5PYvSyL7TbHW99F/s1600/yelagiri2.jpg
டில்லி கேட்
ஆற்காடு பாலாற்றங்கரையில் செய்யாறு பைபாஸ் ரோட்டில் ஒரு நுழைவுவாயிலுக்கு டில்லி கேட் என பெயரிடப்பட்டுள்ளது. 1751ல் ஆற்காடு நவாப்பிடம் இருந்து ராபர்ட் கிளைவ் ஆட்சியை கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டுள்ளது. அப்போது ஆற்காட்டுக்குள் நுழைபவர்கள் இவ்வழியாகத்தான் வரவேண்டியிருந்தது.
http://static.panoramio.com/photos/large/44034173.jpg
பள்ளிகொண்டா
வேலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைணவ திருத்தலம் பள்ளிகொண்டா. இங்குள்ள உத்திர ரங்கநாதர் திருக்கோயில் தொன்மை சிறப்பு மிக்க கோயிலாக விளங்கி வருகிறது. பாண்டியர் கால கட்டடப் பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
http://www.vikatan.com/av/2012/08/ndmxzj/images/p112a.jpg
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
வேலூரில் இருந்து 102 கி.மீ தொலைவிலும் திருப்பத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவிலும், ஏலகிரி மலையின் பின்புறம் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதன் அருகில் லிங்க வடிவ முருகன் ஆலயம் உள்ளது. பருவகாலங்களில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக விளங்குகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAI4m8DkHZ7D00kZlrXPbRiQCQ8514vMoJXKhSJw0_37rKIZbIwONQ0rBf2HH2C1bEI3PlfoA8fZW0u-NV6JNsxmmoNwcaWD3zdatJ6WjdHfSqMHZe1Njw-rDDtlI9f6eF3Ndlv9eZAGkL/s400/images+(2).jpg
வேலூர் அறியப்பட வேண்டிய மாவட்டம், வரலாறுகள் தோண்ட தோண்ட புதையல் போல கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர். கருங்கல், புவிப்பரப்புக்கு மேல் பரவலாகக் காணப்படும் தீப்பாறை வகைகளுள் ஒன்றாகும். இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி இருப்பதுண்டு. கருங்கற்கள், அவற்றின் வேதியியல் மற்றும் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம்.
கருங்கல் பெரும்பாலும் அளவிற் பெரிதாகவும், கடினமானதாகவும் இருக்கும். இதனால் கட்டுமானத்துறையில் இது பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றது. சராசரியாக 2.75 கி/சமீ3 அடர்த்தியைக் கொண்ட இது 1.74 கி/சமீ3 தொடக்கம் 2.80 கி/சமீ3 வரையான அடர்த்திகளில் கிடைக்கின்றது.வேலூர் அறியப்பட வேண்டிய மாவட்டம், வரலாறுகள் தோண்ட தோண்ட புதையல் போல கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

2 கருத்துகள்:

  1. Description: Explore the culinary charm of Melur with Mugunda Grand Orappu Restaurant's renowned Koorai Kadai in melur , offering an authentic dining experience like no other. Nestled in the heart of the town, our restaurant invites you to indulge in the rich flavors of traditional Koorai dishes expertly prepared by our skilled chefs.

    Immerse yourself in a warm and welcoming ambiance, where every visit promises a gastronomic journey through the heritage of Koorai cuisine. From delectable curries to flavorful rice dishes, each item on our menu reflects the authenticity and passion we bring to your dining experience.

    Mugunda Grand Orappu Restaurant is not just a place to eat; it's a destination where the essence of Koorai Kadai comes to life. Whether you're a local enthusiast or a traveler seeking a taste of Melur's culinary heritage, our restaurant stands as a beacon for those who appreciate the art of fine dining.

    Join us at Mugunda Grand Orappu Restaurant and embark on a flavorful adventure at the Koorai Kadai, where every bite tells a story of tradition, excellence, and the love we put into crafting an unforgettable dining experience for you.

    பதிலளிநீக்கு
  2. Description: Indulge your taste buds in the true essence of Melur's culinary heritage at Koorai Kadai near Orappu restaurant , a distinctive offering within Orappu Restaurant. Nestled in the heart of Melur, this culinary gem invites you on a gastronomic journey, promising an authentic experience of local flavors and cherished traditions.

    🍲 A Culinary Heritage Unveiled: Koorai Kadai at Orappu Restaurant pays homage to Melur's rich culinary legacy. Our menu features a curated selection of dishes that reflect the authentic taste, cultural diversity, and time-honored recipes that make Melur's cuisine truly special.

    🌶️ Spices and Aromas: Experience the tantalizing blend of spices and aromas that define Koorai Kadai's offerings. From delectable curries to flavorful biryanis, each dish is crafted with precision and passion, ensuring a sensory feast that transports you to the heart of Melur's vibrant food culture.

    🍽️ Intimate Dining Experience: The ambiance at Koorai Kadai is designed to complement the authenticity of the cuisine. Enjoy an intimate dining experience surrounded by warm hues and cultural accents, creating the perfect setting to savor every bite of Melur's culinary treasures.

    👨‍🍳 Crafted by Culinary Artisans: Our chefs at Koorai Kadai are culinary artisans, dedicated to preserving and elevating the local flavors of Melur. Immerse yourself in their expertise as they present a menu that captures the essence of Koorai Kadai's culinary journey.

    📍 Discover Koorai Kadai at Orappu Restaurant: Whether you're a local enthusiast or a traveler seeking an authentic taste of Melur, Koorai Kadai at Orappu Restaurant welcomes you. Unveil the secrets of Melur's culinary delights with each visit, as we invite you to embark on a flavorful expedition at the heart of our cultural epicenter. 🌶️🍚 #KooraiKadai #MelurCuisine #AuthenticFlavors #OrappuRestaurant

    பதிலளிநீக்கு