இந்த அரண்மனை கி.பி.1592–1609ல் திருவாங்கூரை ஆண்ட இறவிவா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி 1601ல் கட்டப்பட்டது. திருவாங்கூா் மன்னா்களின் ராஜிய உறைவிடமாக இந்த அரண்மனை திகழ்ந்தது. கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாக திகழ்ந்தது. இந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் உள்ளது. இது கேரளாவின் தலைநகா் திருவனந்தபுரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவிலும், தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ன்படி இந்த அரண்மனை கேரள அரசின் ஆளுகைக்கு மாறியது. இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. நவீன திருவாங்கூரை வடிவமைத்த மார்த்தாண்ட வா்மா, மரத்தாலான நவராத்திரி மண்டபத்தை கற்களால் மாற்றி அமைத்தார். 1744 ல் பெருமாள் கொட்டாரம் என்னும் 4 அடுக்கு உப்பரிகை மாளிகையையும் புதுப்பித்து வடிவமைத்தார். இம்மாளிகை 1940 ல் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரிய உத்திகளின்படி புதுப்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த அரண்மனையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதில் பாரம்பரிய பொருட்கள் கல்வெட்டுக்கள், செப்புத் தகடுகள், கல் மற்றும் மரத்தால் ஆன சிற்பங்கள், நாணயங்கள் மற்றும் படைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1994ல் இந்த அருங்காட்சியகம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
சனி, 3 ஏப்ரல், 2021
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்
பத்மநாபபுரம்
அரண்மனை வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்
இந்த அரண்மனையின் முக்கிய பகுதிகள் – பூமுகம்(நுழைவு மண்டபம்), மந்திர சாலை (அவை மண்டபம்), மணிமேடை(மணிக்கூண்டு), நாடக சாலை (கதகளி நடனம் ஆடும் இடம்), ஊத்துபுரம் (உணவுக் கூடம்), தாய்க் கொட்டாரம், உப்பரிகை மாளிகை (அடுக்கு மாளிகை), கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம், இந்திர விலாசம் மற்றும் சந்திர விலாசம். தொலைபேசி – 04651 – 250255. விடுமுறை – திங்கள் கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை தினங்கள். நேரம் – செவ்வாய் – ஞாயிறு காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இந்த
அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர
பெருமாள்-1592-1609 என்பவரால் கட்டப்பட்டது. முதலில் தாய்க் கொட்டாரம் மட்டும்
1550 களில் இருந்ததாகத் தெரிகிறது. பின் கி.பி.1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள்
மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த அரண்மனையை விரிவு படுத்தினார். அதன் பிறகு மன்னர் மார்த்தாண்ட
வர்மா தங்கள் பரம்பரையினரை பத்மனாபபுரத்தில் கோவில் கொண்டுள்ள விஷ்னுவின் சேவர்கள்
என பிரகடனம் செய்தார்.
1795 வரை பத்மநாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக
விளங்கியது.1795 இல் தான் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அரண்மனை
கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இவ்வரண்மனையில் உள்ள
முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:
மந்திர
சாலை
தாய்க் கொட்டாரம்
நாடக சாலை
நான்கடுக்கு மாளிகை(உப்பரிகை மாளிகை)
தெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)
பத்மநாபபுரம்
அரண்மனையானது, பத்மநாபபுரக் கோட்டைக் குள்ளே, மேற்கு தொடர்ச்சி மலையான வெள்ளிமலையடிவாரத்தில்
அமைந்துள்ளது. அதனை மாளிகை என்று குறிப்பிடுவதைவிட, மாளிகைத் தொகுதியென்று குறிப்பிடுவதே
பொருத்தமானதாக அமையும். ஏறத்தாழ 14 மாளிகைகளைக் கொண்ட தொகுதியாகவே இந்த அரண்மனை காணப்படுகிறது.
அரண்மனையின்
முகப்பு
காண்போரைக்
கொள்ளை கொள்ளும் விதத்திலே எளிமையான கேரளக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை,
6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் சிறிய மாளிகையாகவிருந்து,
காலத்துக்குக் காலம் ஆட்சி புரிந்த மன்னர்களால் விஸ்தரிக்கப்பட்டு இன்று காட்சியளிக்கும்
நிலையை 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்வரண்மனை அடைந்ததாக வரலாறு கூறுகிறது.
நுட்பமான மரவேலைப்பாடுகளை அரண்மனையின் உட்கட்டமைப்பெங்கிலும் பரவலாகக் காணலாம்.. பிரமாண்டமான
அரங்குகளையும் தகதகக்கும் அலங்காரங்களையும் பத்மநாபபுர அரண்மனையில் கிடையாது. ஆனால்,
அரண்மனைக்கே யுரித்தான செல்வச் செழிப்பை, அரண்மனையின் உள்ளக, வெளியக வடிவமைப்பில் உள்ளது.
பூமுகத்து
வாசல்
அரண்மனையின்
முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் முதனமை வாசல் பிரமாண்டமானது, மரவேலைப்பாடுகளுடைய
பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடையது. கேரளப்பாரம்பரியத்துக்கே யுரித்தான
கலை நயத்துடன் அமைக்கப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச் செதுக்கல் வேலைப் பாடுகள் பார்ப்போரைப்
பிரமிக்க வைக்கும்.
ஒன்றிலொன்று வேறுபட்ட 90 வகைத்தாமரைப்பூக்கள் செதுக்கப்பட்ட மரக்கூரை
மிகவும் பிரசித்தமானது.
பொதுமக்களின்
பார்வைக்கென, சீனர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சிம்மாசனம், முற்று முழுதாக கருங்கல்லாலான
சாய்மனைக்கதிரை, உள்ளூர் பிரதானிகளால் ஒணம் பண்டிகைக்கால வாழ்த்தாக வழங்கப்பட்ட ஒணவில்லு
போன்றவை பூமுகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
மந்திரசாலை
பூமுகத்தின்
முதலாவது மாடியில் மந்திரசாலை காணப்படுகிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு
மிகவும் ஒடுக்கமானது. தனியே மரத்தால் ஆனது.அந்தப்படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும்.
பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திரசாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாகத்
தெரிவிக்கப்படுகிறது. மந்திரசாலையின் சுவரும் கூரையும் மரங்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன.எந்த
வித செயற்கை விளக்குகளுமின்றி, சூரிய ஒளியின் உச்சப்பயனைப் பெறக்கூடிய வகையிலே சலாகைகள்
மூலமும் மைக்கா கண்ணாடி மூலமும் சுவர்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
மணிமாளிகை
மந்திரசாலை
யைக் கடந்து படிகளால் கீழே இறங்கி னால் வருவது மணிமாளிகை ஆகும். கிராமத்தவர் ஒருவரால்
வடிவமைக்கப்பட்ட மணிக்கூட்டுடனான கோபுரத்தை இந்த மாளிகையில் காணலாம். இந்த மணிக்கூடு
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப் படுகிறது. இம்மணிக்
கூட்டின் பின்னனியிலிருக்கும் தத்துவம் வியக்கத்தக்கது. மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும்
இந்த மணிக்கூட்டின் மணியோசையை 3 கிமீ சுற்றுவட்டாரத்திற்குள்ளிருக்கும் அனைவராலும்
கேட்க முடியும்.
அன்னதான
மண்டபம்
அன்னதானக்
கூடம். மணிமாளிகையைத் தாண்டிச் செல்ல வருவது, ஒரு மாடியையுடைய அன்னதான மண்டபமாகும்.
கீழ் மண்டபத்திலே ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும். ஊறுகாயை பேணுவதற்குப்
பாவிக்கப்படும் சீனச்சாடிகளும் இம் மண்டபத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.மன்னர்கள்
அன்னதானத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அன்னதான மண்டபத்தின் பிரமாண்டம் உணர்த்துகிறது.
தாய்க்கொட்டாரம்
அன்னதான
மண்டபத்தைக் கடந்தால் தெரிவது தாய்க்கொட்டாரம். இந்த தாய்க்கொட்டாரமே மாளிகைத் தொகுதியில்
மிகவும் பழைமையான மாளிகையாகும். இது வேணாட்டு அரசனாக இருந்த இரவி இரவி வர்மா குலசேகர
பெருமாளினால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாளிகையில் காணப்படும் ஏகாந்தமண்டபம்
சுதேச பாணியிலே செதுக்கப்பட்ட மரத்தூண்களையுடையது. இந்தத் தாய்க் கொட்டாரம், பாரம்பரிய
நாற்சார் வீடமைப்பில் கட்டப்பட்டது. முதலாவது மாடியில் செதுக்கப்பட்ட மரப்பலகை களால்
பிரிக்கப்பட்ட படுக்கையறைகள் காணப்படு கின்றன.
ஹோமபுரம்,
சரஸ்வதி கோவில்
தாய்க்
கொட்டாரத்தின் வட பகுதியிலே ஹோமபுரம் காணப்படுகிறது. இங்குதான் யாகம் வளர்க்கப்பட்டு
வந்தது. அதன் கிழக்குப் பகுதியில் சரஸ்வதி கோவிலொன்று காணப்படுகின்றது. இன்றும் கூட
நவராத்திரி காலங்களில், இக்கோவிலிலுள்ள சரஸ்வதி திருவுருவம் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக
எடுத்துச் செல்லப்படுகிறது.
உப்பரிகை
அடுத்துக்
காணப்படும் உப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது.
ஸ்ரீபத்மநாபனுக்காக இந்த மாளிகை அமைக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டதாகக்
கூறப்படுகிறது. மூன்று மாடிகளையுடைய இந்த மாளிகையில், கீழ்ப்பகுதி அரச திறை சேரியாகக்
காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம்
மாடியில் மருத்துவக் குண முடைய மரத்தாலான மருத்துவக் கட்டிலொன்று காணப் படுகிறது.
இரண்டாவது
மாடி, மன்னனின் ஓய்வெடுக்கும் பகுதியாகக் காணப்படுகிறது. மூன்றாவது மாடியில் இராமாயணம்
மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன.உப்பரிகையின்
முதலாம் மாடியிலிருந்து அந்தப் புரத்துக்குச் செல்லமுடியும். தற்போது அந்தப்புரத்திலே
இரண்டு பெரிய ஊஞ்சல்களும் ஆளுயரக் கண்ணாடியும் காணப்படுகின்றன.அந்தப்புத்தைத் தாண்டிச்
சென்றால் வருவது நீண்ட மண்டபமாகும். மண்டபத்தின் இருமருங்கிலும் சமஸ்தானத்தின் வரலாற்று
நிகழ்வுகள் ஓவியங்களாகத் தொங்குகின்றன. அடிப்படையில் அவை யாவுமே மன்னர் மார்த்தாண்டவர்மாவுடன்
தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.
இந்திர
விலாசம்
மண்டபத்தின்
வழியே சென்றால் இந்திர விலாசத்திற்குச் செல்ல முடியும். மன்னன் மார்த்தாண்டவர்மாவின்
காலத்திலே, விருந்தினர்களுக்கென அமைக்கப்பட்ட மாளிகையே இந்திரவிலாசமாகும். அரண்மனையின்
மற்ற பகுதிகளைப் போலன்றி இது மேனாட்டு பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கதவுகளும்
சன்னல்களும் பெரியவை. கூரை உயரமானது. விருந்தினர் மாளிகையின் சன்னல்கள், அந்தப் புரப்பெண்கள்
நீராடும் தடாகத்தை நோக்கியதாக அமைந்திருந்தமை மனதை வருடியது.
நவராத்திரி
மண்டபம்
இந்திரவிலாசத்தை
அடுத்து வருவது நவராத்திரி மண்டபமாகும். தற்போது காணப்படும் கருங்கல் மண்டபமும், அதனையொட்டிய
சரஸ்வதி ஆலயமும், கி.பி. 1744 இல் மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை.
மண்டபத்தின் கூரை முழுவதும் கருங்கல்லினாலானது. அழகொளிரச் செதுக்கப்பட்ட கருங்கற்றூண்கள்
கூரையைத் தாங்குகின்றன. நவராத்திரிக் காலங்களில் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கென
இந்த நவராத்திரி மண்டபம் பயன்பட்டது. மன்னர் முதலானோர் மண்டபத்தில் இருந்தும், அரண்மனைப்
பெண்கள் மண்டபத்தில் தென்கிழக்குப் பகுதியில் மரச்சலாகைகளால் அடைக்கப்பட்ட பகுதியிலிருந்தும்
கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம். எளிமையான மரவேலைப்பாடுடைய அரண்மனையின் கட்டமைப்புக்கு
மாறாக விஜய நகரக்கட்டட பாணியை உடையதாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளதெனக் கூறப்படுகிறது.
தெற்குக்
கொட்டாரம்
அந்தப்புரப்
பெண்களின் பாவனைக்கான நீர்த்தடாகத்தைத் தாண்டிச் செல்ல வருவது தெற்குக் கொட்டாரம் ஆகும்.
இது அரண்மனைத் தொகுதியை விட்டு விலக்கிக் காணப்படினும், அத்தொகுதியின் ஒரு பகுதியாகும்.
தெற்குக் கொட்டாரம் மூன்று சிறிய கட்டடங்களைக்கொண்டது. அவை மூன்றுமே, மிகவும் கவர்ச்சிகரமான
மரச் செதுக்கல் வேலைப்பாடுகளுடன் அழகான தோற்றத்தையுடைய பகுதிகளாகும்.
பாதுகாப்பு
அமைப்பு
பத்மநாபபுரம்
அரண்மனையின் வாசல்களும் பாதைகளும் மிகவும் ஒடுக்கமானவை. அவற்றினூடு செல்கையில் ஒருவர்
பின் ஒருவராகவே செல்லமுடியும். பல உள்நாட்டு, வெளிநாட்டுக் கிளர்ச்சிகளின் அச்சுறுத்தல்கள்
காணப்பட்டன என்று வரலாறு கூறுவதால், கிளச்சியாளர்களைச் சுலபமாக எதிர்கொள்ளும் வழிமுறைதான்
இந்த ஒடுக்கமான வடிவமைப்போ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
பிரதான கட்டடத் தொகுதியில் காணப்படும்
சுரங்கப்பாதைக்கான வழியும் கூட அதனையே பறைசாற்றுகிறது. வெளியிலிருந்து அரண்மனை சன்னல்களூடாகப்
பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில்
நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம். அத்தகைய விதமாக சன்னல்கள் யாவும், மரச் சலாகைகளால்
அடைக்கப் பட்டிருக்கின்றன.அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள்
என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது.
இயற்கை
ஒளி
ஏறத்தாழ
400 வருடங்கள் பழைமையான இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும் கூட மின் விளக்குகளைக்
காணமுடியாது. இயற்கை ஒளி முதலாகிய சூரியனின் ஒளியே போதியளவான வெளிச்சத்தை வழங்குகிறது.
ஆகையால் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணிவரையே அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காகக்
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரண்மனையின்
கட்டுமானம்
இந்த
அரண்மனையின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவுமே உள்நாட்டில் கிடைக்கக்கூடிய
மரப் பலகைகள், செங்கற்கள், கருங்கற்கள், சுன்னக்கற்கள் ஆகியனவாகும். எரிக்கப்பட்ட தேங்காய்ச்சிரட்டை,
எலுமிச்சை, முட்டைவெண்கரு மற்றும் மரக்கறிகள் சிலவற்றிலிருந்து பெறப்பட்ட சாறு ஆகியவற்றைக்
கொண்டுதான் பளிச்சிடும் கரிய நிறத்தரை உருவாக்கப் பட்டிருக்கிறது.
மலசல
கூடங்கள் முதலாம் மாடியிலேயே காணப்படுகின்றன. கழிவுகள், மூடப்பட்ட கற்கால்வாய்களின்
வழியே கடத்தப்படும் வகையில், அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. இரவுகளில் ஒளியூட்டுவதற்காகக்
கலைநயம் மிக்க விளக்குகள் வகை வகையாகக் காணப்படுகின்றன.
நூதன
சாலை
இந்த
அரண்மனையும் அருகிலுள்ள நூதன சாலையும் தமிழ்நாட்டிலே காணப்பட்டாலும் கேரள அரசினாலேயே
பராமரிக்கப்படுகிறது. தொல்லியல்துறையில் ஆர்வமுடைய எவரையும் சட்டென ஈர்க்கும் வல்லமை
படைத்த பத்மநாபபுரம் அரண்மனை திருவனந்தபுரத்திலிருந்து 55 கி. மீ தொலைவிலும் கன்னியாகுமரி
யிலிருந்து 35 கி. மீ தொலைவிலும் காணப்படுகிறது. செவ்வாய் முதல் ஞாயிறு வரையான நாட்களில்
இவ்வரண் மனையைப் பொதுமக்கள் பார்வையிட முடியும். அரண்மனையின் வெளிச்சூழலிலே, சுற்றுலாப்
பயணிகளுக்காகவே அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. அங்கே கேரளப் பாணியை
பிரதிபலிக்கும் மரம், புல், ஓலைகளினாலான கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
உத்தர பிரதேசத்தில் டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் - கோ.ஜெயக்குமார்.
உத்தர பிரதேசத்தில் டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் - கோ.ஜெயக்குமார்.
உத்தர
பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின்
அரண்மனை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. ராவ் ராம் பக்ஸ் சிங் ஆட்சி செய்த இந்த அரண்மனைக்குள்
1000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருப்பது போன்று தனக்கு கனவில் தெரிந்ததாக யோகி சுவாமி
ஷோபான் சர்க்கார் என்ற சாது கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வங்கிக்கு அவர் கடிதம்
எழுதியிருக்கிறார்.
இதையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, டான்டியா கேரா கிராமத்திற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுவை அனுப்பியிருக்கிறது. அவர்கள் வெள்ளிக்கிழமை அரண்மனை வளாகத்தை தோண்டி தங்கள் ஆய்வுப் பணியை தொடங்க உள்ளனர். இந்த அரண்மனையில் புதையுண்டு கிடக்கும் தங்கத்தை அரசு கைப்பற்றினால், பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்று சாது தெரிவிக்கிறார்.
1000 டன் தங்கம் இருப்பதாக கண்ட சாதுவின் கனவு பலித்தால், ஓராண்டுக்கு இறக்குமதி செய்யும்
தங்கத்திற்கு இணையாக இருக்கும்.அரண்மனைக்கு பின்புறம் இரண்டு இடங்களில் தலா 100 சதுர மீட்டர் அளவுக்கு பள்ளம் தோண்ட
தொல்பொருள் ஆய்வுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனினும், அந்த மண்ணில் புதையல் இருப்பதற்கான
எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வுக்குழு தலைவர் மிஷ்ரா தெரிவித்தார்.
உ.பி.யில் பழங்கால கோட்டையில் பள்ளம் தோண்டி தங்கப்புதையலைத் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அங்கு பூமிக்கு அடியில் விலை உயர்ந்த உலோகம் இருக்கலாம் என தொல் பொருள் ஆராய்ச்சித்துறை வல்லுனரும், கலெக்டரும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பழங்கால மன்னர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங், உன்னாவ் மாவட்டத்தை
சேர்ந்த சாமியார் ஷோபன் சர்க்கார் கனவில் தோன்றி, தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில்
1000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகக் கூறிய தகவல் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
அந்தக் கோட்டையில் 1000 டன் தங்கப்புதையலை தேடும் வேட்டையை இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர் நேற்று முன்தினம் தொடங்கினர்.தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் தங்கப்புதையல் தேடும் வேட்டை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. தொல் பொருள் ஆராய்ச்சித்துறை துணை இயக்குனர் பி.கே.மிஷ்ரா தலைமையில், அந்தத் துறை மற்றும் இந்திய புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறையை சேர்ந்த 12 உறுப்பினர் குழு வழிகாட்டுதலில், உள்ளூர் தொழிலாளர்கள் மண்வெட்டி, மண்கொத்தி, கடப்பாரை போன்றவற்றைக் கொண்டு தோண்டி வருகின்றனர்.
இதை வேடிக்கை பார்க்க சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்
கான மக்கள்
வெள்ளமென திரண்டனர். இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதை
கூடுதல் போலீஸ்
சூப்பிரண்டு சர்வானந்த் சிங் உறுதிப்படுத்தினார்.தோண்டுதல் பணி நடக்கிற
இடத்திற்குள் பொதுமக்கள் நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக அந்தப்
பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் தேவையைக்
கருத்தில் கொண்டு அங்கு திடீர் கடைகள் உதயமாகி உள்ளன. அங்கு வியாபாரம்
விறுவிறுப்பாக
நடந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை அமைந்துள்ள பகுதியை துளையிடும் எந்திரம் கொண்டு துளையிட்டு பார்த்தபோது 20 மீட்டர் ஆழத்தில், உலோகப்படிமம் தென்பட்டது. அது பாறைபோல இல்லை. அந்தப்பகுதியில், 10-க்கு 10 மீட்டர் பரப்பளவு கொண்ட 3 பள்ளங்கள் தோண்டுவதற்கு இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர், இந்தியப் புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறையினர் குறியிட்டுள்ளனர். அந்தப் பள்ளங்களைத் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை அமைந்துள்ள பகுதியை துளையிடும் எந்திரம் கொண்டு துளையிட்டு பார்த்தபோது 20 மீட்டர் ஆழத்தில், உலோகப்படிமம் தென்பட்டது. அது பாறைபோல இல்லை. அந்தப்பகுதியில், 10-க்கு 10 மீட்டர் பரப்பளவு கொண்ட 3 பள்ளங்கள் தோண்டுவதற்கு இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர், இந்தியப் புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறையினர் குறியிட்டுள்ளனர். அந்தப் பள்ளங்களைத் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறை துணை இயக்குனர் பி.கே.மிஷ்ரா கூறுகையில்,
"இங்கே தங்கத்தை நாங்கள் கண்டுபிடிப்போமா என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது.
ஆனால், எங்களது ஆய்வு, ஏதோ ஒரு உலோகப்படிமம் இங்கு இருப்பதாகக் காட்டுகிறது. அது என்ன
உலோகமாகவும் இருக்கலாம். நாங்கள் தங்கப்புதையல் புதைந்துள்ளதாகக் கூறப்படும் இடத்தை
(ஆழத்தை) நெருங்கும்போது, அந்த மண் கட்டமைப்பின் மாதிரியை எடுத்து சோதித்துப் பார்த்து
அது என்ன உலோகம் என்பதை கண்டறிய முடியும்" என்றார்.
உன்னாவ் மாவட்ட கலெக்டர் விஜய் கிரன் ஆனந்தும், விலை உயர்ந்த உலோகம் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம்
என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர், "இந்திய புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறை
வரைந்துள்ள வரைபடத்தில் பூமிக்கடியில் விலை மதிப்புள்ள உலோகம் இருப்பது காட்டப்பட்டுள்ளது.
அது தங்கமா, இரும்பா அல்லது இன்ன பிற உலோகமா என்பதை இப்போது உறுதியாகக்கூற முடியாது"
என கூறினார்.
உத்தர
பிரதேசத்தைச் சேர்ந்த துறவியான ஷோபன் சர்க்கார் என்பவர், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள
கோட்டையில் 1000 டன் தங்கம் புதைந்திருப்பதாக தன் கனவில் மன்னர் கூறியதாக தெரிவித்தார்.இதையடுத்து
அந்த கோட்டையில் கடந்த 18–ந்தேதி முதல் தங்கம் தேடும் பணியை தொல்பொருள் ஆய்வுத்துறை
தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) 5–வது நாளாக தங்கப் புதையலை தேடும் பணி நடந்தது. கோட்டையில்
அகழாய்வு பணியில் ஓரிரு நாட்களில் தங்கம் வந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் தோண்ட
தோண்ட மண்தான் வருகிறதே தவிர, இதுவரை ஒரு கிராம் தங்கம் கூட வரவில்லை. இதையடுத்து
தங்கப் புதையலை தேடும் பணி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோட்டையில் அகழாய்வு
நடத்த நாங்கள் உத்தரவிடவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
மத்திய
தொல்பொருள் துறையும், ''நாங்கள் துறவி ஷோபன் சர்க்கார் சொன்னதை வைத்து கோட்டையில் மண்ணை
தோண்டவில்லை. இது எங்களது வழக்கமான அகழாய்வு பணியாகும். இதில் தங்கம் கிடைக்கலாம்,
கிடைக்காமலும் போகலாம்'' என்று கூறியுள்ளது.
இதையடுத்து
தங்கப் புதையலை தோண்டி எடுப்பதை வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள் கூலிப்படைந்தனர்.
''தங்கம் இருக்காது'' என்று கூறியபடி மக்கள் கலைந்து வருகின்றனர். நேற்று
நடந்த அகழாய்வின்போது உடைந்த பொம்மைகள், உடைந்த வளையல்கள்தான் கிடைத்தது. ஒரு செங்கல்
சுவர் பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த சுவர் 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
என்று தொல்லியல் துறையினர் கணித்துள்ளனர்.
இதையடுத்து
கோட்டையின் பிற பகுதிகளில் 5 மீட்டர் ஆழத்துக்கு தோண்ட திட்டமிட்டுள்ளனர். இன்னும்
3 வாரத்துக்கு இந்த அகழாய்வு பணி நடக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது. தங்கம்
தேடப்பட்டு வரும் மன்னரின் கோட்டை அமைந்துள்ள தாண்டி யாகேதா கிராமத்தில் இப்போது
469 குடும்பங்கள் வசித்து வருகிறது. இன்னமும் அந்த ஊருக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை. சுதந்திரம்
பெற்று இவ்வளவு நாட்களுக்கு பிறகும் இருளில் உள்ள அந்த கிராமத்தின் மேம்பாட்டுக்காக
தங்கப் புதையலில் 20 சதவீதத்தை கொடுக்க வேண்டும் என்று சாமியார் ஷோபன் கூறியுள்ளார்.
அதாவது ரூ. 60 ஆயிரம் கோடியை அந்த கிராமத்துக்கு கொடுக்க சொல்கிறார். ஆனால் தங்கம்தான்
கிடைத்தபாடில்லை.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)